புதுச்சேரி

கிருமாம்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்திராகாந்தி பிறந்த நாள் விழா

Published On 2022-11-19 12:05 IST   |   Update On 2022-11-19 12:05:00 IST
  • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
  • சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திருமாம்பாக்கம் இந்திரா காந்தி சிறுவர் பூங்கா திடலில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குப் பகுதி ஏம்பலம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பாப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திருமாம்பாக்கம் இந்திரா காந்தி சிறுவர் பூங்கா திடலில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மேற்கு பகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் மண்ணாங்கட்டி வேல்ஸ் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சக்கரவர்த்தி கிராமணி, தணிகைவேல், கோவிந்தன் நாயுடு, செந்தில்குமார், பாலாஜி, வக்கீல் பக்கிரி, செல்வநாதன், பாலகுரு ரெட்டியார், துலுக்காணம், திருமாறன், சுப்பிரமணி, பூபாலன், பாலு, பரமன், நரசிங்கம், ஏ.ஆர் ராஜாராமன், டி. ஆறுமுகம், கோபு, கோபதி, பாண்டுரங்கன், ராஜேந்திரன், ஜெயவேல், மோகன், முருகையன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News