புதுச்சேரி
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தேசிய ஒற்றுமை தின கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
- லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
- கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தினம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சார்லஸ் வரவே ற்று பேசினார். தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் 'மாணவர்களும் தேச ஒருமைப்பாடும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளிடத்தில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் விரிவுரையாளர் நடேசன் நன்றி கூறினார்.