search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நவம்பர் Phone Call-க்கு நன்றி ரோகித் - ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி
    X

    நவம்பர் Phone Call-க்கு நன்றி ரோகித் - ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி

    • 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
    • இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடினர். இந்த வெற்றிக்கு வீரர்களின் உழைப்பு காரணமாக இருந்தாலும் டிராவிட்டின் முயற்சிகள் பின்னணியில் மகத்தானவையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சியளிப்பார் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து வந்த ஒரு போன்தான் டிராவிட்டை மாற்றியுள்ளது.

    ரோஹித் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் டிராவிட்டை 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை இந்திய பயிற்சியாளராக தொடர எப்படி சமாதானப்படுத்தினார்கள் என்பதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, "நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி, ரோஹித்" என்று டிராவிட் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக, பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.

    இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி உள்ளார்.

    Next Story
    ×