என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டெல்லி
- தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான 24 கமிட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பாதுகாப்பு விவகார கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியின் தலைவர் பா.ஜ.க. உறுப்பினர் ராதா மோகன் சிங் ஆவார்.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பெண்கள், கல்வி, இளைஞர்கள் மற்றும் விளயைாட்டு விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் சுகாதார விவகார கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலகக்கரி, சுருங்கம் மற்றும் ஸ்டீல் விவகார கமிட்டியின் தலைவராக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி எந்த கமிட்டியின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.
பா.ஜ.க.-வின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக்கியமான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பின்னருக்கும் பலமுறை இதுபோன்ற வாய்ப்பு (ஆஃபர்) தன்னைத்தேடி வந்தது.
- நான் என்னுடைய சித்தாந்தத்துடன் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்.
பா.ஜ.க.-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவருக்கு பலமுறை பிரதமர் பதவி வாய்ப்பு (ஆஃபர்) வந்ததாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க.-விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் நிதின் கட்கரியை சந்தித்து, நீங்கள் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருந்தால் ஆதரவு தர தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தங்களிடம் கூறியதாக செய்திகள் வெளியானது குறித்து விளக்கமாக கூற முடியுமா? என ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய மாநாட்டில் (conclave) கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நிதின் கட்கரி பதில் அளித்து கூறியதாவது:-
மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பின்னருக்கும் பலமுறை இதுபோன்ற வாய்ப்பு (ஆஃபர்) தன்னைத்தேடி வந்தது. நான் என்னுடைய சித்தாந்தத்துடன் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பான கேள்வியே அங்கு இல்லை. பிரதமராக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. என்னுடைய நம்பிக்கையுடன் என்னுடைய சித்தாந்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்.
இவ்வாறு நிதின் கட்கரி பதில் அளித்தார்.
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று அசத்தல்.
- இந்திய அணிக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வரிசையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் பேசிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா, "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றைச் செய்துள்ளோம், 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளோம்.. கிரிக்கெட்டும் மிகவும் கடினமான களம்.. விளையாட்டுகளை ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன், ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் கடினம்," என்று தெரிவித்தார்.
- சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
- இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.
அதன்படி நாளை (செப்டம்பர் 27) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கின்றனர். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.
டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எம்.பி. கலாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா மற்றும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றிரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதன்முறையாக டெல்லி சட்டசபையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
அப்போது பேசிய கெஜ்ரிவால், "என்னையும் மணீஷ் சிசோடியாவையும் இங்கு பார்த்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், ஆனால் அவர் கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒருவித ஆற்றல் நமக்கு உதவி செய்கிறது. எனக்கு பதவி ஆசை இல்லை. 3 முறை பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு பாஜக தலைவரை சந்தித்தேன், என்னை சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் முழு டெல்லி அசையும் தடம் புரட்டியுள்ளோம் என்று கூறினார்.
மக்களவை தேர்தலுக்கு முன்பு ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பேசியிருந்தார்.
- அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதை தொடர்ந்து வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அப்பீல் மனுவும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடு திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் கடந்த 9-ந் தேதி ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனாலும் ஒரு ஆண்டில் 3 முறைக்கு மேல் ஊக்க மருந்து தடுப்பு சோதனை பங்கேற்காமல் இருந்தால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வினேஷ் போக தற்போது தான் முதல் முறையாக அந்த சோதனையில் பங்கேற்கவில்லை. அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ள்ளதால் பங்கேற்க முடியவில்லை.
வினேஷ் போகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் விதமாக அவருக்கு இவ்வாறு பிரச்சினை ஏற் படுத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
- இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், "வெற்று வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை பெற்று எதிர்க்கட்சிகள் அவர்களுடைய மாநிலங்களை அதளபாதாளத்திற்கு தள்ளுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்காக இளைஞர்கள் வேலையற்றவர்கள், ஏமாற்றமடைந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்ற விலை கொடுக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத துரோகம்.
இளைஞர்களின் எதிர்காலம் சூறையாடப்படுகிறது, குறிப்பாக இளம் பெண்கள், அவர்களது சொந்த அரசாங்கங்களால் அதிர்ச்சியூட்டும் வகையில் கைவிடப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்கள் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் சீர்குலைந்து வருகின்றன.
இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்த மாநிலங்களின் மக்கள் முடிவுகளை வழங்கும் தலைமையை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.
- செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
- செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
புதுடெல்லி:
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது (2011-2016) போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு ஆட்களை சேர்ப்பதற்காக முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தி ருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் முதன்மை அமர்வு கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
5 முறை ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டி ருந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமின் மறுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் காரசாரமான விவாதத்தை முன் வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபஸ் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஸ் ஆகியோர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் 20-ந்தேதி தெரிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. பல மாதங்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதிகள் பரபரப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் முகுல்ரோத்தகி, ராம்சங்கர் ஆகியோர் வாதிடும்போது, செந்தில் பாலாஜி வழக்கின் மீதான சாராம்சங்களை தனித்தனியாக பிரித்து விசாரணை நடத்தும் அமலாக்கத் துறை திட்டமிட்டு செயல்படுகிறது. கடந்த ஆண்டு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வரும் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை அமலாக்கத்துறையினர் எப்போதுதான் முடிப்பார்கள் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.
எனவே செந்தில்பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண் டும் என்று வாதிட்டிருந்தனர்.
இதுபோன்ற வாதங்களை ஏற்றே சுப்ரீம் கோர்ட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையாகும் செந்தில் பாலாஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை அவரது வக்கீல்கள் செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் 471 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில்பாலாஜி விடுதலையாக உள்ளார்.
- மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.
- உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Birthday greetings to former PM Dr. Manmohan Singh Ji. I pray that he is blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2024
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Happy Birthday to Dr. Manmohan Singh Ji. Your humility, wisdom, and selfless service in shaping our country's future continue to inspire me and millions of Indians. Wishing you good health and happiness always!
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2024
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
- ஏனென்றால் இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது.
பா.ஜ.க.-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்குள் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா ஹேமந்த் சோரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஹேமந்த் சோரன் கூறிய கருத்து தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-
ஹேமந்த் சோரன் தேசியவாதிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பெருச்சாளி என்று அழைத்தார். ஆனால், வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனென்றால், இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது. மக்கள் தொகை மாற்றம் ஜார்க்கண்டில் இல்லை. இது மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்துள்ளது எனச் சொல்கிறார்.
மேற்கு வங்கத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது?. அங்கு பா.ஜ.க. ஆட்சி இல்லை. இடது சாரிகள் ஆட்சி செய்தன. தற்பேது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இடது சாரி அதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் அர்த்தம் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறிவைக்கிறது. அவர்களுக்கு திட்டம் கிடையாது, பார்வை கிடையாது, பொதுவான பகுதி கிடையாது, அவர்களுடைய சொந்த ஊழல் மற்றும் குழப்பம் குறித்து ஒரே இலக்குதான். அவர் அவர்களை கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே தாக்கினாரா என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் உண்மையில் மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மை வெளிவந்துள்ளது.
ஆனால், ஜார்க்கண்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்பதுதான் கேள்வி, உயர்நீதிமன்றமும் அதையே கூறியுள்ளது. இதுகுறித்து ஹேமந்த் சோரன் பேச வேண்டும்.
இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.
- விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கங்கனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதனையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதை கங்கனா
விமர்சித்து பேசி வருகிறார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கங்கனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக கட்சியே எதிர்ப்பு தெரிவித்ததால் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
Do listen to this, I stand with my party regarding Farmers Law. Jai Hind ?? pic.twitter.com/wMcc88nlK2
— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2024
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய அரசின் கொள்கைகளை தீர்மானிப்பது யார்?, பாஜக எம்.பி.,யா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியா?
ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தி அடையவில்லை. நமது விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் எந்த சதியும் வெற்றி பெற I.N.D.I.A. கூட்டணி அனுமதிக்காது விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.
सरकार की नीति कौन तय कर रहा है? एक भाजपा सांसद या प्रधानमंत्री मोदी?700 से ज़्यादा किसानों, खास कर हरियाणा और पंजाब के किसानों की शहादत ले कर भी भाजपा वालों का मन नहीं भरा।INDIA हमारे अन्नदाताओं के विरुद्ध भाजपा का कोई भी षडयंत्र कामयाब नहीं होने देगा - अगर किसानों को नुकसान… pic.twitter.com/ekmHQq6y5D
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2024
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியது.
- தங்கம் வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Prime Minister @NarendraModi meets Chess Olympiad winning teams in New Delhi to celebrate their remarkable achievements♟️?? #FIDEChessOlympiad #ChessChampions #ChessOlympiad #ChessOlympiad2024 pic.twitter.com/yMTnWWTUkH
— PIB India (@PIB_India) September 25, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்