search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் இன்று போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

    • மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
    • நம்மை சுற்றி உள்ள யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    நெல்லை:

    சர்வதேச போதை ஓழிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று அமலாக்க பணியகம், நாட்டு நலப்பணி திட்ட குழுமம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின.

    விழிப்புணர்வு பேரணி

    முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நெல்லை, பாளை தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் போதை ஓழிப்பு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உலக அளவில் போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பாக விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் பங்கு பெற்று இருக்கிறீர்கள். இந்த ஆண்டு இன்னும் 2 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும். அதிலும் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு ஏன் படிப்பதற்காக வருகி றோம் என்றால் நமது தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக தான்.

    தலைமைத்துவ பண்புகள் என்றால் என்ன? இந்த சமுதாயத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் மாணவர்களாகிய நீங்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 2-வது நம்மை சுற்றி இருக்கிற யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது.

    அதற்காகத்தான் நமது மாவட்டத்தில் நிறைய ஆன்ட்டி டிரக் கிளப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நான் தவறு செய்ய வில்லை. எனக்கு எதற்கு இதெல்லாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

    நல்ல தலைமைப் பண்பு கொண்ட ஒரு மாணவன் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பான். தவறு நடந்தால் அதை தடுக்க முன் நிற்பான். அதற்காகத்தான் அரசு தரப்பில் அமைப்புகள் உள்ளன. அதில் தகவல் தெரிவித்து போதை ஒழிப்பிற்கு எதிராக தங்களது பங்களிப்பை ஆற்றலாம். நீங்கள் நினைத்தால் நெல்லையை போதை இல்லாத மாநகரமாக மாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×