search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்

    • பெரியகுளத்தில் அ.தி.மு.க நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் அ.தி.மு.க நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவை தலைவர் கோம்பையன் தலைமை வகித்தார். நகர செயலாளர் அப்துல்சமது அனைவரையும் வரவேற்றார்.

    அ.தி.மு.க.விற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் எனவும், நடைபெற்று முடிந்த பொது குழுவில் தொண்டர்களுக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் நடைபெற்று முடிந்த நகர வார்டு உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகளாக நியமனம் செய்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அ.தி.மு.க நகர் மன்ற வழிகாட்டுதல் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×