என் மலர்tooltip icon

    இந்தியா

    • சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்றான்.
    • சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    தெலுங்கானாவில் ஓடும் ரெயில் கழிவறையில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரெயில் வந்துகொண்டுருந்தபோது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

    சிறுமியின் தந்தை அந்த இளைஞனை பிடித்து அவனின் செல்போனை ஆராய்ந்ததில் அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

    இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    இந்நிலையில், மூத்த பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, வக்பு மசோதாவுக்கு எதிராக பேசுபவர்களை தேச துரோகிகள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அவர், "வக்பு மசோதாவை ஏற்கமாட்டோம் என்று பேசுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். இது பாகிஸ்தான் கிடையாது. இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
    • பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.

    அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார். இதனை பார்க்கும் பஸ் பயணிகள் அவர் மீது பரிதாபம் கொண்டனர்.

    இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.

    இதனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.

    இதுகுறித்து பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    • வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
    • பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.

    இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு நாளைக்கு ஒரு கடிதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களை ஆன்லைனில் பதிவு செய்து அனுப்ப மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்காக ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இனிமேல் பரிந்துரை கடிதங்களை https://cmotid telangana, gov. in இல் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்கேன் செய்யப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட பிறகு அதை திருப்பதி தேவஸ்தான ஆன்லைனில் பதிவேற்றி அசல் கடிதத்தை பக்தர்களிடம் கொடுக்குமாறு முதல்வர் அலுவலக துணைத் தலைவர் பொதுப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அதே உள்நுழைவு விவரங்களை தரிசன கவுண்டரிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒதுக்கீட்டை மீறி பரிந்துரை கடிதங்களை வழங்குவது. அவர்களுடன் சென்று பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற அனுபவங்களை தொடர்ந்து ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    பொது பிரதிநிதிகள் திங்கள் முதல் வியாழன் வரையிலான வருகைகளுக்கு மட்டுமே பரிந்துரை கடிதங்களை வழங்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு ஒரு கடிதம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் கூடுதலாக தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.

    புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தரிசனம்உண்டு. ரூ.300, தங்குமிட வசதி இல்லை.

    பக்தர்கள் அசல் பரிந்துரை கடிதத்துடன் செல்ல வேண்டும். ஆதார் அட்டைகள் இல்லாத குழந்தைகள் இருந்தால் அவர்கள் பிறப்புச் சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று 66,327 தரிசனம் செய்தனர்.26,354 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 2021 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
    • தனது மனைவி ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார்

    மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    கர்நாடகாவின் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த சுரேஷ், 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகே என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    பின்னர் ஒரு வருடம் கழித்து, மைசூர் மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

    இது மல்லிகேவின் உடலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது மல்லிகேயின் உடல்தான் என்று அடையாளம் காட்டுமாறு சுரேஷ் மற்றும் அவரது மாமியாரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    2 ஆண்டுகள் சிறையில் இருந்த சுரேஷ் இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடையது அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சுரேஷ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தனது மனைவி ஒரு உணவகத்தில் அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் மனைவியை போலீசார் கைது செய்தனர். காணாமலே போன சுரேஷின் மனைவி தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார்.
    • சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார்.

    ரோட்டில் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டி போட்டு ஓடும் கட்டில்மெத்தை காரின் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

    மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தை சேர்ந்த நவாப் ஷேக்கில், என்பவர்தான் கட்டில் மெத்தையை காராக மாற்றி அசத்தி இருக்கிறார். அவர் ரூ.2 லட்சம் செலவு செய்து காரின் உதிரி பாகங்களை கட்டில் மெத்தையுடன் இணைத்து தனது கனவு காரை வடிவமைத்து உள்ளார்.

    சுமார் ஒரு ஆண்டு கால முயற்சியில் அவர் இதை மாற்றி அமைத்துவிட்டு தெருவில் ஓட்டி வந்தபோது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனத்தை மறித்த போலீசார், அதற்கான உரிமங்கள், பதிப்புரிமையை கேட்டதால் சிக்கலை சந்தித்தாராம்.

    வீடியோவில் அவர் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார். சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார். எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 2 நாட்களில் 2½ லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வாகன பிரியர்கள் மற்றும் வலைத்தளவாசிகள் மத்தியில் அவரின் புகழ் அதிகரித்து வருகிறது.



    • சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும்.
    • கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் உத்சவ பலி, ஸ்ரீபூத பலி உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 10-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழாவும் நடைபெறும்.

    வழக்கமாக சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு 2 யானைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு விழா, சாமி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும்.

    இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானை நேற்று சபரிமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மற்றொரு யானையை பம்பையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தின் போது செண்டை உள்ளிட்ட மேளங்களை தவிர்த்து தவில் உள்ளிட்ட மேளங்கள் பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது.
    • மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும்.

    மும்பை:

    இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது.

    அதேநேரத்தில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது.

    வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும். அவர் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் ஆதரவு அளித்தது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரான ரிஸ்வி கட்சியில் இருந்து விலகினார்.

    லக்னோ:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் ஜெயந்த் சவுத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளரான ரிஸ்வி கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து விலக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

    • லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
    • இந்தத் தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான குர்பிரீத் பாஷி கோகி, அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என ஆம் ஆத்மியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக் அறிவித்தார்.

    இந்நிலையில், பஞ்சாப்பின் லூதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

    • பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    வங்காள விரிகுடா கடலை எல்லையாகக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன. இந்தக் கூட்டமைப்பு பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்து தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இலங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்க் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6-ம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறார்.

    இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    மேலும், இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

    ×