search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா
    X

    கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா

    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
    • பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போலீசார், தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரேமலதாவை மருத்துவமனைக்குள் அனுமதித்து தங்களை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    மற்ற கட்சியினரை உள்ளே அனுமதித்த போலீசார் தேமுதிகவினரை அனுமதிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர் வாக்குவாதத்தை அடுத்து தேமுதிகவினரை போலீசார் வெளியேற்றினர்.

    Next Story
    ×