search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாஞ்சிநாதனை தேசம் பெருமையுடன் நினைவுகூர்கிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    வாஞ்சிநாதனை தேசம் பெருமையுடன் நினைவுகூர்கிறது - கவர்னர் ஆர்.என்.ரவி

    • எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ​​ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
    • ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார்.

    எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது தணியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×