என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"

    • திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    • வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(26). இவர் டிராக்டர் வைத்து உழவு பணிகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று செங்காளியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டரில் உழவு பணி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கோபால், இந்துமதி, பாலுச்சாமி, காயத்ரி ஆகிய 4 பேரும் டிராக்டரை தடுத்து நிறுத்தி பிரச்சினைக்குரிய இந்த நிலத்தில் எதற்காக வேலை பார்க்கிறாய் என கூறி அவரிடம் தகராறு செய்தனர்.

    மேலும் டிராக்டரை சேதப்படுத்தியும், அவரது ெசல்போனை உடைத்தும், சிவக்குமாரை தாக்கியும் மிரட்டிஉள்ளனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் பாலுச்சாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கோபால்(42) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜம்மாள், சிலம்பாயி, சுப்ரமணி, மணிகண்டன், சிவா, ரத்தினம் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.95ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 525, பர்வாலா- 438, பெங்களூர்- 510, டெல்லி- 455, ஹைதராபாத்- 474, மும்பை- 531, மைசூர்- 517, விஜயவாடா- 473, ஹெஸ்பேட்- 470, கொல்கத்தா- 542.

    கோழிவிலை : பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.139 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சோதனையில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செந்துறை :

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையொட்டி செந்துறை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த பிரான்மலை- பள்ளபட்டியை சேர்ந்த உதுமான் (31), சூர்யபிரகாஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடலூரில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு சீர்வரிசை செய்யாததால் இரு தரப்பினர் மோதல்-10 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
    • கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை,

    கடலூர் : கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை என சின்னதாய் பல பேரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ஜமுனா தனது தங்கை புவனாவுடன் சின்னதாய் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, புவனாவை கல்லால் தாக்கி மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் அம்மு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஜமுனா மற்றும் அம்மு கொடுத்த புகாரின் பேரில் தனித்தனியாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • பீரோவை உடைத்து மர்ம கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). ஓய்வு பெற்ற போலீஸ் காரர். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு யுகானந்தன் (வயது43) என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே ஒரே வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கீழே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேல் தளத்தில் உள்ள வீட்டில் 3 அறைகள் இருக்கின்றன. இதில் ஒரு அறையில் சந்திரனும், சந்திராவும் மற்றொரு அறையில் யுகானந்தனும், கலைச்செல்வியும் . குழந்தைகள் இருவரும் இன்னொரு அறையிலும் தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதால் அந்த அறையில் பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்கள் அனைவரும் அவர்களது அறைக்கு தூங்கச் சென்றனர். அப்போது காலியாக இருந்த அறையில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். புழுக்கம் அதிகமாக இருந்தால் சந்திரன் வெளியே எழுந்து வந்தார்.

    அப்போது வீட்டின் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போல் மோசடி.
    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

    தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி கவிதா என்பவர் திருமண அழைப்பிதழ் கார்டு மற்றும் நோட்டு புத்தகம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார்.

    கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள் சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    அதில் வாலிபர் சின்னக்கடை வீதியில் வந்து பைக்கில் நிற்பது ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு திருமண அழைப்பிதழ் கடைக்கு சென்று செயினை பறித்து விட்டு வேகமாக வெளியே ஓடி வந்து பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த காட்சிகளை வைத்து போலீசார் செயின் பறிப்பு கொள்ளையனை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
    • அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர்.


    திருப்பூர்:

    10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 1ந் தேதி துவங்கியது.திருப்பூரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.10-ம்வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் நடக்கிறது.

    முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.அதன்படி பணிகளில் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் வரும், 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளுக்காக, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும்பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது எனவும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) கூறுகையில், 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த ஆயிரத்து 700 ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு ஆயிரத்து, 360 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    மாணவியின் வயிறு பெரிதானதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது கேசவசர்மா ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.
    உடுமலை:

    உடுமலை பத்ரகாளியம்மன் லேஅவுட்டை சேர்ந்தவர் கேசவசர்மா( வயது22).தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.

    மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து கேச வசர்மாவிடம் அந்த மாணவி தெரிவித்தபோது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் மாணவியின் வயிறு பெரிதானதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது கேசவசர்மா ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  கேசவசர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெய்ஜிங்:

    சீனா நாட்டின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர்.  இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் மாயமாகினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு 379 சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, செயின் பறிப்பில் ஈடுபடுவதை குறைக்கும் வகையில் தண்டனையை கடுமையாக்க மாநில அரசு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

    அதன்படி, செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு இனி 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.



    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த புதிய சட்டத்தின்படி செயின் பறிப்பில் ஈடுபட முயன்று சிக்கும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 5 ஆண்டும், அதிகபட்சமாக 7 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவட்டார் அருகே தனது பாட்டி செல்போன் வாங்கி கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஜினி (வயது 34). இவரது மகன் கிஸ்காஷ் (15). இவர் திருவட்டாரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கிஸ்காஷ் தனது பாட்டியிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு பாட்டி 10-ம் வகுப்பு முடித்த உடன் செல்போன் வாங்கித் தருவதாக கூறினார். ஆனால் மாணவர் தொடர்ந்து பாட்டியிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுவந்துள்ளார். அவர் வாங்கிக் கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட மாணவர் கிஸ்காஷ் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத்தனர். மேலும் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் திருவட்டார் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (39) தொழிலாளி. இவர் புதிய வீடு கட்டியதில் கடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டில் அலெக்ஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்திருதார். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் பெரிய சுவர் உடைந்து கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.



    தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ×