search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arvind Kejriwal"

    • நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம்.
    • நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை சந்தித்தது. இதில் கெஜ்ரிவால் கட்சியால் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் 10 வருடத்திற்கு மேலாக டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் அரசு முடிவுக்கு வந்துள்ளது.

    இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.

    அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

    இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

    ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது டெலலி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அரிவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார்.

    • இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம்.
    • கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது 2-வது காரணமாக பார்க்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவாகும். மேலும் சமீபகாலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இந்தியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டதால், அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    மேலும் ஆம்ஆத்மி, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.

    எனவே இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம். தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே அங்கு கட்சியை வளர்க்க கெஜ்ரிவால் கவனம் செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான்.
    • பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோல்வியை தழுவினர். 10 வருடங்களாக ஆம் ஆத்மி வசம் இருந்த டெல்லி தற்போது கைநழுவியுள்ளது.

    இதற்கிடையே பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்து வரும் ஆம் ஆத்மியின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் விரிசல் ஏற்படக்கூடும் என்று பஜ்வா கணித்ததுள்ளார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜக பக்கம் சாய்ந்ததை போன்ற முடிவை, பகவந்த் மான் தனது அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கக்கூடும் என்று மறைமுகமாக பஜ்வா தெரிவித்துள்ளார்.

    "இந்த மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான் ஆவார்" என்று பஜ்வா கூறினார். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் - பகவந்த் மான் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து டெல்லி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று தொடங்கின.
    • முக்கியத் தலைவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

    அதன்படி டெல்லியில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஐந்து முக்கியத் தலைவர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் முக்கிய அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அடங்குவர்.

     


    தோல்வியடைந்த AAP-யின் முக்கியத் தலைவர்கள் விவரம்:

    அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி சார்பில் போட்டடியிட்டு கட்சியை வெற்றி பெற செய்த அரவிந்த் கெஜ்ரிவால் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார்.

    மணீஷ் சிசோடியா: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான சிசோடியா, ஜங்புராவில் பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார். கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்சிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த முறை தேர்தலுக்காக ஜங்புரா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

    சவுரப் பரத்வாஜ்: முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவரான திரு. பரத்வாஜ், 2013 இல் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை பா.ஜ.க.-வின் ஷிகா ராயிடம் தோல்வியை தழுவினார். இவரது தொகுதி ஆம் ஆத்மிக்கு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டது, எனினும், இங்கு பா.ஜ.க. வெற்றி பெற்று அந்த நிலையை மாற்றியது.

    துர்கேஷ் பதக்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அமைப்புகள், அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான திரு. பதக், டெல்லியின் ராஜிந்தர் நகர் தொகுதியில் பா.ஜ.க.-வின் உமாங் பஜாஜிடம் தோல்வியடைந்தார். திரு. பதக் 2022 இல் நடந்த இடைத்தேர்தலில் அந்த இடத்தை வென்றார். இந்த முறை அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.

    சத்யேந்திர ஜெயின்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், டெல்லியின் ஷகூர் பஸ்தி தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த திரு. ஜெயின், 2022 இல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பா.ஜ.க.வின் கர்னைல் சிங்கிடம் தோல்விய தழுவினார்.

    • 2020 தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
    • சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.

    டெல்லி தேர்தல்: 

    70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்குக் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி சுமார் 27 வருடங்கள் கழித்து ஆட்சி அமைக்கிறது.

    22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகளாக தக்கவைத்த ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கோட்டை விட்டது. கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆதமி ஆட்சி அமைத்தது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.

    ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிளவு:

    இந்த நம்பிக்கையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரிவு பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றுள்ளது. காங்கிரஸ் இவ்விடங்களில் வாக்குகளை வெகுவாக பிரித்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்திருந்தால் ரிசல்ட் மாற அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

    புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தொற்றுள்ளார். ஜங்கிபூரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 675 வாக்கு வித்தியசாத்தில் தொற்றுள்ளார்.

    கட்சியின் தோல்வி என்பதையும் தாண்டி அதன் முக்கிய தலைவர்களே தோற்றுள்ளதற்கு காங்கிரசை தவிர்த்து வேறு காரணிகளும் உண்டு.

    ஆம் ஆத்மி மீதான அதிருப்தி:

    2015 மற்றும் 2020 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் டெல்லி வாசிகளைப் பெரிதும் கவர்ந்தது.

    இதனால் மத்தியில் பாஜக வென்றபோதிலும் டெல்லியைப் பிடிக்கத் திணறியது. ஆனால் காலப்போக்கில், ஆம் ஆத்மியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், காற்றின் தரம் குறைவு, யமுனை நதி மாசுபாடு ஆகியவை டெல்லி மக்களை தொந்தரவு செய்யத் தொடங்கின.

    மத்தியில் உள்ள பாஜக அரசு தடைகளை உருவாக்குவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வாக்காளர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சாக்குப்போக்காகக் கருதினர். ஆம் ஆத்மி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசுடன் மோதுவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது. 

     

    மதுபானக் கொள்கை:

    டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மி தோல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளன.

    புதிய கொள்கைபடி மதுபான பாட்டில்களில் '1 வாங்கினால் 1 இலவசம்' போன்ற சலுகைகள் டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்ற ஆம் ஆத்மி முயல்வதாக பாஜக குற்றம் சாட்ட வழிவகுத்தது.

    மேலும் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் விசாரணைகள் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆம் ஆத்மி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது.

    பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். பல உயர்மட்டத் தலைவர்களின் கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க செய்தன.

    முக்கிய தலைவர்கள் இல்லாமல் 2020 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மிக்கு சிரமம் ஏற்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் மக்கள் சம்மதம் இல்லாமல் மீண்டும் முதல்வர் ஆக மாட்டேன் என பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் அதிஷியை முதல்வர் ஆக்கினார்.

    ஷீஷ் மஹால்

    தேர்தலுக்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தொடுத்த அஸ்திரம் 'ஷீஷ் மஹால்'. கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக பிரசாரம் செய்தது. 'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது.

    2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக கூறியது. ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.

     

    இதனையடுத்து ஷீஷ் மகால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும் அதை நிரூபிக்க தான் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்தும், பிரதமரின் ராஜ்மகால் இல்லத்தைக் காட்ட பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

    ஆனால் பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக பாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான 'தூய்மையான அரசியல்' என்ற பிம்பத்தை உடைத்து. தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. 

    • 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது.
    • கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஆம் ஆதமி மாநிலங்களவை எம்.பியாக இருந்த ஸ்வாதி மாலிவால் கடந்த வருடம் மே மாதம் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது யமுனை நதி மாசுபாட்டைக் கண்டித்து கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.

    கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மாவிடம் தோற்றார். 

    இந்நிலையில் மகாபாரத கதையில் திரௌபதியை அவமதிக்க, கௌவர்கள் அவரை துகில் உரியும் சித்திரத்தை ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த ஸ்வாதி மாலிவால், பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால், அதைச் செய்தவர்களை கடவுள் தண்டித்திருக்கிறார். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சினைகளால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இழந்தார்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் சொல்வதைச் செய்ய வேண்டும், ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு சொன்னதுக்கு மாறாக செயல்படுகிறது. பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார்
    • காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

    பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

    இந்நிலையில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

    எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட 3580 வாக்குகள் முன்னிலையில் 52058 வாக்குகளுடன் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

    பர்வேஷ் வர்மா 28238 வாக்குகள் பெற்ற நிலையில் 3789 வாக்குகள் பின்தங்கி 24449 வாக்குகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.

    அதேபோல ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34,632 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின்தங்கினார்.

    ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.
    • விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் பாஜக முன்னிலையில் உள்ளது. 10 வருடமாக டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி பின்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட காங்கிரசும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    ஆம் ஆத்மியின் முதல்வர் முகமாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்டது. இந்நிலையில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் யார் முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அந்த வகையில் முதல்வர் ரேஸில்  பர்வேஷ் வர்மா முன்னிலை பெற்றுள்ளார். முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புது தில்லி தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவாலை சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து  பர்வேஷ் வெற்றி பெற்றுள்ளார். இவரே டெல்லி முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக பாஜக முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தவர்கள்:

    ரமேஷ் பிதுரி: டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சி பிதுரியை பாஜகவின் முதல்வர் முகமாக அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களின் போது அவரை விவாதத்திற்கு அழைத்தது. பிரியங்கா காந்தியின் கன்னங்களை போல் சாலை அமைப்பேன் என கூறி சர்ச்சையில் சிக்கியவர்.

    துஷ்யந்த் கௌதம்: பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர். குறிப்பாக தலித் தலைவர். மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.

    விஜேந்தர் குப்தா: டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரான இவர் முதல்வர் பதவிக்கு முக்கிய போட்டியாளராக இருந்தார்.

    டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் இவர். ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இருந்தபோதிலும் 2015 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ரோஹினி தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

    கைலாஷ் கெலாட்: பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடும் கெலாட், பாஜக முதல்வர் ரேஸில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் இருந்தது. மூத்த தலைவரான கைலாஷ் கெலாட், ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்து, தேர்தலுக்கு முன் பாஜகவுக்குத் தாவினார். பிஜ்வாசன் தொகுதியில் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

    அர்விந்தர் சிங் லவ்லி: காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவரான அர்விந்தர் சிங், தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

    கபில் மிஸ்ரா: கரவால் நகரில் போட்டியிடும் மிஸ்ரா, தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    இந்நிலையில், 'மினி அரவிந்த் கெஜ்ரிவால்' என்ற சிறுவன் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான ராகுல் தோமர், தனது மகன் அவ்யன் தோமருடன் வந்திருந்தார். அப்போது அவ்யன் தோமர் நீல நிற ஸ்வெட்டருடன் வெள்ளை காலர் மற்றும் பச்சை நிற பஃப் ஜாக்கெட் அணிந்திருந்தான். மேலும் கெஜ்ரிவாலை போலவே தோற்றமளிக்க அவர் போலவே கண்ணாடி மற்றும் மீசையை அணிந்திருந்தான்.

    இந்த குளிர்காலத்தில் கெஜ்ரிவால் பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது இதே போன்ற உடைகளை தான் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 15 கோடி ரூபாய், மந்திரி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி வேட்பாளர்களை பாஜக அணுகியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
    • கெஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களை (தற்போது எம்.எல்.ஏ.-க்கள்) பாஜக தொடர்பு கொண்டு, 15 கோடி ரூபாய் தருகிறோம். அத்துடன் மந்திரி பதவியும் வழங்குவதாக பாஜக-வினர் கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    மேலும், "55 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏன் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்க வேண்டும். ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

    கெஜ்ரிவால் குற்றச்சாட்டு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு (Anti-Corruption Bureau) அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர்கள் கெஜ்ரிவால் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    கெஜ்ரிவால் வழக்கறிஞர் "ஏசிபி-க்கு நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இவை அனைத்தும் ஒரு அரசியல் நாடகத்தை உருவாக்க பாஜக செய்யும் சதி" என்றார்.

    இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அந்த நோட்டீசில் "பாஜக அணுகியதாக கூறப்படும் 16 எம்.எல்.ஏ.-க்களின் பெயரை தாக்கல் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களை தொடர்பு கொண்டவர்கள் போன் நம்பர்கள், மற்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.

    பல்வேறு ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் நீங்களும் உங்கள் கட்சி உறுப்பினர்களும் கூறிய லஞ்ச குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைக்கவும்.

    டெல்லி மக்களிடையே அச்சத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தகவல்களை ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் பரப்பும் நபர்கள் மீது ஏன் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்துங்கள்" குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
    • கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது.

    டெல்லியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் 27 வருடங்களுக்கு பின் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம், கட்சி தாவினால் 15 கோடி ரூபாய் தருகிறோம் என பாஜக கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    "துஷ்பிரயோகம் செய்யும் கட்சி (பாஜக) தேர்தலில் 55-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என சில கருத்து கணிப்பு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    மேலும், "அவர்கள் உண்மையில் 55 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார்கள் என்றால், எங்களுடைய வேட்பாளர்களை ஏன் அழைக்க வேண்டும்?. ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என்றார்.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த டெல்லி மாநில துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ×