search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhole Baba"

    • கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தனர்.
    • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலே பாபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், " சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.பி சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.

    மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பர்மாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

    இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தொடங்கப்படும் என்றும், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

    • கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினர். இந்த மத நிகழ்வில் கலந்து கொள்ள அக்கம் பக்க ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹத்ராஸில் கூடினர். ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்று முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி போலே பாபா ஆன்மிக சேவையாற்றுவதற்காக புலனாய்வு துறையில் செய்துவந்த பணியை ராஜினாமா செய்ததாக பலமுறை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    ஆன்மிக சேவையாற்ற 1990-க்களில் தான் மேற்கொண்டு வந்த புலனாய்வு துறை பணியை ராஜினாமா செய்ததாக தனது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் போலே பாபா தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள பதௌர் நகரி என்ற கிராமத்தில் நன்னே லால் மற்றும் கதோரி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் போலே பாபா.

    இவருக்கு இரண்டு சகோதரர்கள், இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவர் உத்தர பிரதேச காவல் துறையில் கான்ஸ்டபிலாக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த போலே பாபா அதன்பிறகு ஆன்மிக நாட்டம் காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    வழக்கமாக ஆன்மிக சேவையில் ஈடுபடுவோரை போன்று காவி உடை உடுத்தாமல் போலே பாபா வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுதவிர குர்தா-பைஜமா அணிவார். இவருக்கு வழங்கப்படும் நன்கொடை பணம் முழுவதையும் அவர் தனது பக்தர்களுக்கே செலவு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

    ×