search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb test"

    • வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.
    • வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே உள்ளது.

    கேரளா மாநில அரசியலின் தாக்கம் மாகியில் எதிரொலிக்கும். மாகியில் கம்யூனிஸ்டுகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்பையொட்டி மாகி பிராந்திய பாஜகவினர் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

    போலீசார் அனுமதிக்காத பகுதிக்கு ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு இருந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக மாகி நகரம் குறிச்சி பகுதியில் வசிக்கும் பா.ஜனதா தொண்டர் சனூப் என்பவரின் வீட்டினுள் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் வீட்டின் ஜன்னல், டிவி போன்றவை வெடித்து சிதறின. வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.

    இந்த நிலையில் மாகியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்படுவதை தடுக்க செருகல்லை, சாலக்கார பள்ளூர், தன்னாபிலகுல், கிழக்கு பள்ளூர், செம்பிரா, மேற்கு பள்ளூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    கண்ணூர் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜியாசின் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாய் லக்சியுடன் சோதனை நடத்தினர்.

    மாகி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் நடந்த சோதனையில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜய்குமார், ரெனில் குமார், பிரதீப் ஆகியோர் ஆளில்லாத வீடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், புதர்கள் என சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகளில் சோதனை செய்தனர்.

    வரும் நாட்களிலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

    • பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர்.
    • ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தில் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2500-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான இ-மெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டெல் டிடெக்டர் கருவி உதவியுடன் பள்ளி முழுவதும் ஒவ்வொரு அறையாக அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    பள்ளியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடனும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனார்.

    நீண்ட நேரம் சோதனை செய்தும், பள்ளியில் அப்படி எதுவுமே இல்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு வந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது, அதனை அனுப்பியது யார் என்பதை அறிய அந்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பள்ளி முன்பு வடவள்ளி இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட்டது. மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

    கடந்த 2-ந் தேதி இதே பள்ளிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அப்போதும் அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். தற்போது 2-வது முறையாக அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    எதற்காக ஒரே பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
    • 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீசார் ஐ எஸ். ஐ. எஸ். அமைப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டிவனத்தில் உள்ள கோவில்கள் ,மசூதிகள்,வணிக நிறுவனங்கள்,ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவி,தலைமையிலான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ரவிக்குமார்,காவலர்கள் இளங்கோ,மாதவன்,வருண் நெடுஞ்செழியன் ஆகியோர் கொண்ட குழு மோப்பநாய் ராணி உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    திண்டிவனம் பஸ் நிலையத்தில் சோதனை செய்து கொண்டு இருக்கும்போது மோப்பநாய் ராணி திடீரென அங்கு பெண் ஒருவரை கவ்வி பிடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்தப் பெண் மற்றும் அங்கிருந்து 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர் மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    • தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    விக்கிரவாண்டி, நவ.12–-

    கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்திரவின் பேரில் விக்கிர வாண்டியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ெரயில் நிலையம், பஸ் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள்  சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், சப்-–இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி , சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் ராஜேஷ்கண்ணா, பாரதி, மோப்ப நாய் பயிற்சியாளர் வருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வெடிமருந்து மோப்ப நாய் ராணி உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். பி ன்னர் பொதுமக்களிடம் வெடிகுண்டுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    ×