search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civil war"

    • மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
    • தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்

    பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.

     

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை  அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.

    மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள்  பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.

    உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார் 

    • மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும்

    உலகின் புவிசார் அரசியல் போர்களுக்கிடையிலும் பதற்றங்களுக்கு இடையிலும் குழம்பிக் கிடைக்கும் நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர தேர்தலை அறிவித்தார்.

    முன்னதாக நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்த நிலையில் இந்த முடிவை மேக்ரான் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து பிரான்சில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமானுவேல் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி தேர்தல் என்பதையும் தாண்டி உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததை அடுத்து மேக்ரான் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

     

    உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. #SrilankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் ‘தனிஈழம்’ கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துடன் போராடியது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். அங்கு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சியடைந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.

    அதன்பிறகும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அதைத்தொடர்ந்து உள்நாட்டு போரின்போது 1 லட்சம் பேர் மாயமாகி விட்டதாக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு அறிவித்தது.

    இந்நிலையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்தது. அந்த சட்ட வரையறை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது விவாதத்துக்கு வந்த நிலையில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிராக 43 வாக்குகள் கிடைத்தன. அதன்மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 1 லட்சம் தமிழர்கள் பலனடைகின்றனர்.

    இந்த சட்டத்துக்கு எதிராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டனர். அதன் மூலம் ராணுவ நடவடிக்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் போராளிகள் பலனடைவார்கள் என குற்றம் சாட்டினர்.

    இந்த சட்டம் குறித்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறும்போது, ‘‘நாங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். உள்நாட்டு போரின்போது வடக்கு பகுதி மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தெற்கு பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்படும்’’ என்றார். #SrilankaParliament
    அசாமில் நடந்ததுபோல் மேற்கு வங்காளத்திலும் நிகழ்ந்தால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என மத்திய அரசை மம்தா பானர்ஜி இன்று எச்சரித்துள்ளார். #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இன்றும் இதே பிரச்சனையால் மாநிலங்களவை முடங்கியது.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, அசாம் மாநிலத்திற்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராமகாந்த் தியோர், அனந்த்குமார் மல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரின் பெயர்கள் இந்த வரைவு பட்டியலில் இடம்பெறாததற்கு மம்தா கண்டனம் தெரிவித்திருந்தார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள்.

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறினார்.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்போது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த சில பா.ஜ.க. பிரமுகர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் இதுபோன்ற குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிட்டனர்.

    இந்நிலையில், டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, இன்றிரவு மத்திய உள்துறை மந்திரி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா, ‘தேசிய குடிமக்கள் மசோதாவில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அல்லது, புதிய மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன். மக்களை நாங்கள் தேவையில்லாமல் துன்புறுத்த மாட்டோம் என்று அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார்’ என்றுதெரிவித்தார்.

    அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்புபோல் மேற்கு வங்காளத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும் அவருடன் நான் பேசினேன். அப்படி நடந்தால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என நான் அவரிடம் கூறினேன் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

    அவரது இந்த பேட்டிக்கு சிறிது நிமிடங்களுக்கு பின்னர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி., ராம் மாதவ், ‘இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் 2 மாதங்களுக்குள் தங்களது நாட்டுக்கு திரும்பிப் போக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையான இந்திய குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் உரிய முறையில் மனு செய்து தங்களது பெயர்களை பட்டியலில் இணைக்கலாம்.

    உலகில் எந்த நாடும் தங்களது எல்லையில் ஊடுருவல்களை சகித்து கொள்வதில்லை. ஆனால், நமது நாட்டில் சில அரசியல்வாதிகள் ஊடுருவுபவர்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு உள்நாட்டுப்போர் வரும் என்று மிரட்டுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.  #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar #tamilnews
    ×