search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Sivakumar"

    • கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
    • கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

    • சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.
    • அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பதவிச் சண்டையில் ஆட்சி கவிழ்வது, ஆட்சி மாற்றம் ஏற்படுவது, முதல்வர்கள் மாற்றம் என்பது தொடர் கதைதான்.

    தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது.

    காங்கிரஸ் வெற்றி பெற்றதும் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் டி.கே. சிவகுமாரை சமாதானப்படுத்தி சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

    அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் பதவி வகிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.

    இதனை இப்போதும் சித்தராமையா கோஷ்டி மறுத்து வருகிறது. டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.

    ஆனால் சித்தராமையா கோஷ்டியோ, துணை முதல்வர் டி.கே சிவகுமாரை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்கிறது. இதனை டி.கே.சிவ குமார் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. அப்படி கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டால் முதல்வர் பதவியை டி.கே. சிவகுமாருக்குதான் தர வேண்டும் என்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி.கே.சிவகுமாருக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என முதல்வர் சித்தராமையா மேடையில் அமர்ந்திருக்கும் போதே ஒக்கலிகா ஜாதி மடாதிபதி வலியுறுத்தி இருந்தது பெரும் சர்ச்சையானது.

    இதனைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம், துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்கும் விவகாரங்கள் அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இரு கோஷ்டியாக பிரிந்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியதைப் போல லிங்காயத்து மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-

    கடந்த 2013-ல் நான் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்த ராமையா முதல்-அமைச்சர் ஆனார். எனக்கு 2018-ல் தான் துணை முதல்வர் பதவி வழங்கினார். ஆனால் கடந்த ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றதும் நான் துணை முதல்வர் பதவி கேட்டபோது கட்சி மேலிடம் மறுத்தது.

    ஒக்கலிக பிரிவை சேர்ந்த டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த லிங்காயத்து, சிறுபான்மையின பிரிவினருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வில்லை.

    குறிப்பாக பட்டியல் இனத்தவரின் ஆதரவின் காரணமாகவே காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த பிரிவினருக்கு துணை முதல்வர் பதவி கட்டாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் பொதுப் பணித்துறை மந்திரி சதீஷ் ஜார்கி கோளி, கூட்டுறவுத்துறை மந்திரி ராஜண்ணா ஆகியோர் சாதி வாரியாக பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    இதே போல் வீட்டு வசதித்துறை மந்திரி ஜமீர் அகமது கான் சிறுபான்மை யினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி யதால் கடும் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே பதவி சண்டை இருந்து வந்த நிலையில் 3 அமைச்சர்கள் துணை முதல்வர் பதவி கேட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார். இனி மேல் முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி யாரும் பேசக்கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் மீறிப் பேசினால் நோட்டீஸ் கொடுப்போம் என்றார்.

    ஆனால் சித்தராமையா மந்திரி அமைச்சர் ராஜண்ணா இதனை உடனே நிராகரித்திருக்கிறார். டி.கே.சிவகுமார் கொடுக்கும் நோட்டீசுக்கு எங்களுக்கு பதிலளிக்க தெரியும்; நாங்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாது என ஆவேசமாக பேசியிருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் பதவி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

    • நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்கள், வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது.

    மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கலாம்" என்றார்.

    • காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புபில் தகவல்.
    • எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது.

    இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறின.

    ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வென்றோம்.

    அதே போல இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி
    • டி.கே. சிவக்குமார் மட்டுமே காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவில்லை என மந்திரி விமர்சனம்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை'' எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ''கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும்.

    ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்'' என்றார்.

    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று  காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக பதவியேற்ற குமாரசாமி, இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தார்கள்.

    இதற்கிடையே மாநிலத்தில் புதிய அரசு அமைந்து 24 மணி நேரங்களுக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா எச்சரிக்கையை விடுத்தார். பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என காங்கிரஸ் பதிலளித்து உள்ளது.

    அவர்கள் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியாது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்கள் உருவாக்கியதாக இருக்கும். அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தவும் முடியாது, மிரட்டவும் முடியாது. நாங்கள் பொறுப்பான அரசை நடத்துவோம், பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் செயல்பட முடியாது என காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறிஉள்ளார்.
    ×