search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage disposal"

    • மழைநீர் வடிவேல் கால்வாய்களில் இருந்த சுமார் 400 டன் மண்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது.
    • வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளபெருக்கால் பாதிக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது பல இடங்களில் கால்வாய்களில் குப்பை மண் கழிவுகள் இருந்தன. இதையடுத்து வருகிற பருவமழையின் போது வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் மழை நீர்வடிகால்வாய்களை சுத்தப்படுத்தி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிவேல் கால்வாய்களில் இருந்த சுமார் 400 டன் மண்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி இருந்து சுமார் 15 ஆயிரம் கிலோ குப்பைகழிவுகளை ஒரே நாளில் அகற்றப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட போது பெரும்பாலான குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் குப்பை கழிவுகளை திறந்த வெளியிலும் மழைநீர் வடிகால் வாய்களிலும் வீசிவருகின்றனர். இது தற்போது அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிகள், சந்தைகள், ஓட்டல்கள், ரெயில், பஸ்நிலையம் மற்றும் ஆஸ்பத்திரி அருகே குப்பை கூடுதலாக குப்பை தொட்டிகளை வைக்கலாம். இதனால் கால்வாய்களில் குப்பைகழிவுகள் வீசப்படுவது குறையும். கால்வாய்களை மூடவேண்டும் என்றார்.

    மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மழைநீர் தேங்குவதற்கும், வெள்ளப்பெருக்கிற்கும் முக்கியமாக வடிகால்வாய்களில் மண் தேங்கி அடைபடுவதே காரணம். மாநகராட்சி பகுதியில் உள்ள வடிகால்வாய் முழுவதையும் மழைக்கு முன்பே சுத்தப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு முன்னதாகவே கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பம்மல், பல்லாவரம், செம்பாக்கம் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

    • குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாடு அருகே குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் குப்பைகளை அகற்கும் பணி பணி நடைபெற்றது. இதுவரை சுமார் 80 டன் குப்பைகள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், ஜே.கே.தினேஷ், வார்டு கவுன்சிலர்கள் சாந்திகார்த்திக், தேவிநேரு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கெனடிபூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சிவகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கருணாகரன், பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகள் சுமார் 20 டன் அளவுக்கு நகராட்சி தூய்மை பணி யா ளர்கள் அகற்றினர். மேலும் மாரி யம்மன் கோவில் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட குப்பைக ளை யும் அகற்றினர்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
    • கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் தினசிரி மார்க்கெட், தினசரி சந்தை, சேந்தமங்கலம் சாலை, முதலைப்பட்டி, கொசவம்பட்டி ரோஜாநகர் , கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மக்காத குப்பைகளை இது குறித்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகன்றன.

    நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஆயுத பூஜையை முன்னிட்டு நகராட்சி பகுதியில் 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். 

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.
    • ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் :

    கொடைக்கானல் நகராட்சியில் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 15-வது மத்திய குழு நிதி திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சேகரிக்க 7 பிக்கப் வாக னங்கள் வரவழைக்கப்ப ட்டது.

    இந்த வாகனங்களின் செயல்பாட்டு பணியை நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார்,

    நகர்நல அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. குப்பைகளை அகற்றும் வாகனங்களின் எண்ணி க்கை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வார்டுகளிலும், தெருக்களிலும் உடனு க்குடன் குப்பைகளை அகற்றும் பணி முழுமையாக நடைபெறும் என நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.

    • சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது
    • இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்தபகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளிக்கும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது. இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்த முழுவதும் பகுதி புகைமாக காட்சியளிக்கும்.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் இந்த தேங்கிய குப்பை கழிவு களை அகற்ற பேரூராட்சி துறையிடம் அனுமதி கேட்டப்பட்டது. இந்நிலையில் அந்த தேங்கி கிடக்கும் பழைய குப்பை கழிவுகளைஉயிரி அகழ்வு முறையில் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.32.32 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த குப்பைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் உஷா, தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த இயந்திரத்தில் கல், மண் தனியாகவும், பிளாஸ்டிக்ல் பொருட்கள் தனியாகவும், மக்கிய குப்பைகள் தனியாகவும் வெளியேறும்.

    இந்நிலையில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று ' காலை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாள ருமான சிவதாஸ்மீனா, கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம்இந்த பணியை காலதாமதம் இல்லாமல் விரைவாக நேர்த்தியாக செய்து முடிக்கும்படி துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்தநிலையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ், வார்டு உறுப்பினர்கள் , சாரங்கன் ,உமா ஜெயவேல், காந்தி,பேபிகுமார், பத்மாவதி சிவகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் கடந்த 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட ப்பட்டது. முன்னதாக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகன ங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    மேலும் குப்பை கழிவுகளை நேரடியாக பெற மாநகராட்சி சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.

    மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் சிலர் விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணிக்காய், மா இழை போன்றவற்றை அப்படியே சாலையோ ரங்களில் வீசி சென்றுள்ளனர்.

    இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

    இது தொடர்ந்து இன்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு மண்டங்களிலும் குவிக்க ப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

    ×