search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Level Flyover"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
    • ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 லட்சம் உள்ளது. இது போதாது. ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

    தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப் பட்டில் படகு குழாம் உள்ளது போன்று சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. எனவே அதை திருநீர்மலை ஏரியில் அமைக்க வேண்டும்.

    அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசினார்.

    • 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
    • வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மின்சார ரெயிலோ, மெட்ரோ ரெயில் போக்குவரத்தோ இல்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் பெரும் அவதி அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தநிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனவும், தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.
    • உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

    கோவை,

    கோவை மாநகரின் பிரதான சாலையாக அவினாசி சாலை கருதப்படுகிறது.

    விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை இந்த சாலையில் தான் அமைந்துள்ளன.

    சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இதனால் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி டிசம்பர் 2020-ம் ஆண்டு தொடங்கியது.

    இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மேம்பாலமானது, எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கான வாகன பெருக்கத்தை கருத்தில் ெகாண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

    மொத்தம் 10.10 கி.மீ நீளத்தில் 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

    4 இடங்களில் ஏறுதளமும், 4 இடங்களில் இறங்கு தளமும், 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமைய உள்ளது. இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இருபுறமும் அணுகுசாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாயும் அமைய உள்ளது.

    மேம்பாலம் அமைய உள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைய உள்ளது.

    3 இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல், 3 இடங்களில் பாலங்களை திரும்ப கட்டுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.2024 ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் விதமாக அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×