search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam Director"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

    இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

    • இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஒமர் லுலு. இவர் 'ஹேப்பி வெட்டிங்', 'ஒரு அடார் லவ்', 'நல்ல சமயம்', 'தமாக்கா', 'சங்ஸ்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமானார்.

    இந்நிலையில் இயக்குனர் ஒமர் லுலு மீது இளம் நடிகை ஒருவர் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலியல் புகார் கொடுத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர். நடிகையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குனர் ஒமர் லுலு மீது 376 (கற்பழிப்பு) சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தன்மீது புகார் கொடுத்துள்ள நடிகையுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும், அந்த நட்பை இழந்ததன் காரணமாக தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மிரட்டி பணம் பறிப்பதற்காக நடிகை தன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளதாக இயக்குனர் ஒமர் லுலு தெரிவித்திருக்கிறார்.

    ×