search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rekha Gupta"

    • குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இருவரின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

     


    குடியரசு தலைவரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்தித்தார்.

    டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமின்றி கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். இவர்களது சந்திப்பும் குடியரசு தலைவர் மாளிகையில் தான் நடைபெற்றது. இதனை குடியரசு தலைவர் மாளிகை அதன் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    • பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
    • பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

    டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லி பெண்களுக்கு, ரூ.2,500 வழங்கப்படும் திட்டத்தை, முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என டெல்லி பெண்களுக்கு பா.ஜ.க. உறுதியளித்தது.

    புதிய முதல்வர் ரேகா குப்தாவும், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து இருந்தனர். டெல்லி மக்களை ஏமாற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில்,

    பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.

    ஆம் ஆத்மி கட்சி தலைவரின் கருத்துக்கள் வந்தன. மேலும், தனது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசாங்கம் நிறைவேற்றும்.

    பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 உதவித்தொகை மார்ச் 8 ஆம் தேதிக்குள் கிடைக்கும். 100 சதவீதம் பெண்கள் மார்ச் 8 ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பண உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

    • டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
    • டெல்லி பெண் முதல்வராக பதவி ஏற்ற 4-வது நபர் இவர் ஆவார்.

    டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணைநிலை ஆளுநர் சக்சேனா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ரேகா குப்தா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் டெல்லி மக்கள் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    ரேகா குப்தா அடிமட்ட பொறுப்புகளில் இருந்து வளர்ந்து வந்தவர். கல்லூரி அரசியல், மாநில அமைப்பு, மாநகராட்சி நிர்வாகம் போன்ற பதவிகள் வகித்த நிலையில், தற்போது எம்எல்ஏ- ஆகி முதல்வராகியுள்ளார்.

    டெல்லி வளர்ச்சிக்காக முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ரேகா குப்தா உடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அதனடிப்படையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.  அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் உள்ளிட்டவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதன் மூலம் டெல்லியின் 4-வது பெண் முதல்வரானார் ரேகா குப்தா.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ரேகா குப்தா ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 29 ஆயிரம் வாக்குகள் விததியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • 2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
    • 2015 மற்றும் 2020-ல் ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்த்னா குமாரியை 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

    என்றபோதிலும் இது இவருக்கு முதல் தேர்தல் இல்லை. 2015 மற்றும் 2020-ல் இதே தொகுதியில் பந்த்னா குமாரியிடம் தோல்வியடைந்திருந்தார். தற்போது 3-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ரேகா குப்தாவின் வாழ்க்கை பின்னணியை பார்ப்போம்...

    50 வயது ஆகும் ரேகா குப்தா அரியானா மாநிலம் சிந்து மாவட்டத்தில் உள்ள நந்த்கார்க் கிராமத்தில் 1974-ஆம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி பிறந்தார்.

    ரேகா குப்தாவின் தந்தை வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இதனால் 1976-ம் ஆண்டு 2 வயதாகும்போது, அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.

    டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தில் (ABVP) இணைந்தார்.

    மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, 1996-1997 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தயால் சிங் கல்லூரியன் செயலாளராக இருந்துள்ளார்.

    2000-ம் ஆண்டில் இருந்து பாஜக-வோடு ரேகா குப்தாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவில் சேர்ந்தார். டெல்லி பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக பணியாற்றினார்.

    சிறப்பாக செயல்படும் அவரது திறமைக்கு உடனடியாக கட்சியில் அங்கீகாரம் கிடைத்தது. இளைஞர் அணியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 முதல் 2006 வரை தேசிய செயலாளராக இருந்தார்.

    கட்சி அமைப்புகளுக்கான வலுவான திறமையும், கட்சியின் நோக்கத்திற்கான அர்ப்பணிப்பும் பாஜக-வில் முக்கிய இடம பிடிக்க உதவியது.

    2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். வடக்கு பிதாம்பூரா தொகுதிக்குப்பட்ட இடத்தில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டெல்லி மாநகராட்சியின் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டி தலைவராக 2007 முதல் 2009 வரை பதவி வகித்துள்ளார்.

    பாஜக-வின் டெல்லி பெண்கள் பிரிவு பொதுச் செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

    • டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது- கெஜ்ரிவால்.
    • மார்ச் 8-ந்தேதி டெல்லி பெண்களின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    டெல்லியின் 4-வது பெண் முதல்வர் இவராவார். இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். தற்போது 4-வது பெண் முதல்வராக இன்று மதியம் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ரேகா குப்தா பதவி ஏற்பது குறித்து கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியதாவது:-

    டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ, அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். டெல்லி மக்கள் முன்னேற்றத்திற்கான பணிக்காக பாஜக-விற்கு ஆதரவு அளிக்க ஆம் ஆத்மி எப்போதும் தயாராக இருக்கிறது.

    பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. சொன்னபடி மார்ச் 8-ந்தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    அவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார்.
    • 1995-ல் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, ரேகா குப்தா உடன் 1995-ஆம் ஆண்டு ஒன்றாக பதவி ஏற்ற படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

    அல்கா லம்பா

    எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த அல்கா லம்பா "1995-ம் ஆண்டு நானும், ரேகா குப்தாவும் இணைந்து பதவி ஏற்றபோது எடுத்த மறக்க முடியாத போட்டோ. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் பதவிக்கு என்.எஸ்.யு.ஐ. சார்பில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி சார்பில் வெற்றி பெற்றார். வாழ்த்துகள்.

    4-வது பெண் முதல்வரை பெற இருக்கும் டெல்லிக்கு வாழ்த்துகள். யமுனை தூய்மைப்படுத்தப்படும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ரேகா குப்தா

    பின்னர் 1996-ஆம் ஆண்டு ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவராக தேர்வு பெற்றார்.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து அல்கா லம்பா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    • அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது.
    • டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களைக் கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியின் அடுத்த முதல் மந்திரி யார் என நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் டெல்லியின் புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா தனது ஆதரவாளர்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதையடுத்து, அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    ×