என் மலர்
நீங்கள் தேடியது "absconding"
- சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
- வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 72). அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் (26) இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். சேலத்தில் குடும்பத்துடன் தங்கி தச்சு வேலை செய்து வந்த சிவசங்கர் கடந்த 19-ந் தேதி மாரங்கியூர் வந்தார். அப்போது 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தை திரும்ப பெற சென்ற இந்திராணியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளை பறித்துகொண்டு வீட்டிலேயே புதைத்துவிட்டு சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
இது தொடர்பாக சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் எனது மகன் இந்திராணியை வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். அதன் பிறகு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து சிவசங்கரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் அருகே பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- இவர் 13 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
புதுவை அருே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். (வயது 38). இவர் விழுப்புரம் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். எனவே அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் தினேஷ்குமாரை கைதுசெய்தனர். இவர் 13 ஆண்டு தலைறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
- இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).
இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.
இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
- இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.
கடலூர்:
பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.
இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
- வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருப்பூர் பெரியாயிபாளையத்தை சேர்ந்த நவீன் ஆனந்த் (வயது 29) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் முகவரியே மாற்றி குடியேறி தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் வடக்கு போலீசார் அருள் புரத்தில் நேற்று நவீன் ஆனந்த்தை கைது செய்து ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
- 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
- போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் சுடுகாட்டின் அருகில் 100 நாள் வேளையின் பள்ளம் தோண்டினர். அப்போது இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த பெண் 17 வயதிலிருந்து 19 வயதிற்குள் இருக்கலாம் என்றும், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அவரது நண்பர் சுரேஷ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண் கூறியதாவது:- இளம்பெண் 3 மாதம் கருவுற்றதால், திருமணம் செய்து கொள்ள அகிலனை வலியுறுத்தினார். அகிலன் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றினார். அவர்களுடன் நானும் தனி மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது, இளம்பெண்ணுக்கும், அகிலனுக்கும் அரியலூர் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அகிலன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அகிலனும், நானும் இளம்பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுரேஷ்குமார் உதவியுடன் சாலவனூர் சுடுகாடு அருகே புதைத்து விட்டோம். இந்த சம்பவத்தில் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது. அடுத்து என்னை தேடுவார்கள் என்பதால் நானாகவே வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறினார்.
இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கஞ்சனூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில் துப்பு துலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
- அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே அய்யம்பேட்டை கிரா மத்தில் பச்சைவாழியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பெரிய மணியை வீரசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ஏழுமலை (வயது 50). நடுத்தெருவை சேர்ந்த அய்யனார் மகன் சுரேஷ் (20) ஆகியோர் ஆஷா பிளேடால் அறுத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோவிலில் வந்து பார்த்தபோது 2 பேரும் கோவில் மணியை திருட முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து பொது மக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஏழுமலை என்பவர் பிடிபட்டார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.
இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.
- ஜெபராஜ் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெபராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
சாத்தான்குளம்:
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் சப்பாணி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (வயது 26). இவர் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
கொலை முயற்சி வழக்கு
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கும், சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெரு பேச்சிமுத்து (47) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பேச்சிமுத்துவை ஜெபராஜ், அரிவாளால் வெட்டியதுடன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் ஜெபராஜ் மீது கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜெபராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
கைது
இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப டுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெபராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.
- அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காட்டாண்டிக்குப்பம் பூவராகவமூர் த்தி(35),மாளிகம்பட்டு மணிகண்டன். இவர்கள் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள்மீதானவழக்குவிசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இவர்கள் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்ஆகியோர் இவர்களை கைது செய்து பிடியானை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.