என் மலர்
நீங்கள் தேடியது "affected"
- 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.
- புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறை–களான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுவதை தவிர்க்கலாம்.
காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சட்டி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம். 1 முதல் 3 வயது உள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
வாழைத்தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிகள் செய்ய வேண்டும். வாழை தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். நிழல் வலை குடிலின் குழிதட்டில் தயார் செய்யப்பட்டுள்ள நாற்றுகள் அதிகப்படியான மழை நீரால் பாதிப்படையாமல் இருக்க நெகிழித்தாள்கள் கொண்டு நாற்றுகளை மூடி பாதுகாக்கலாம்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் எதிர் திசையில் கயிறு , கழிகள் மூலம் முட்டு கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்கு பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தை சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழு உரம் இடவேண்டும். பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உயிர் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
- 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருவாரூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
தொடர் மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதிகளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.
அதைப்போல இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதைப்போலவே 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த தகவலை திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஆறுகளில் நீரின் போக்கைதடுக்கும் வகையில் பரவியிருந்த வெங்காயத் தாமரை செடிக ளையும் அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் காயத்ரி கிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- 100 பேருக்கு போர்வைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
நாகப்பட்டினம்:
உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி ஆலய வாசல், பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதித்த பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தற்பொழுது நிலவும் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனை போக்கு வகையில் வேளாங்கண்ணி உதவி கரங்கள் சேவை நிறுவனம் சார்பில் 100 பேருக்கு போர்வைகளை இரவு நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
இந்நிகழ்வில் உதவிக்–கரங்கள் நிறுவனர் ஆண்டனி ஜெயராஜ் தலைமையேற்று ஏழைகளுக்கு போர்வை அணிவித்து துவங்கி வைத்தார்.
நிர்வாகிகள் பீட்டர், ஜெயசீலன் ஆசிரியர், துரைராஜ், அந்தோணிராஜ், கருணானந்தம், விஜய் மற்றும் உதவிக்கரங்கள் சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
- சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கிறது.
திருப்பூர் :
கடந்த வருடங்களை காட்டிலும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழையானது காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலால் சராசரி அளவை காட்டிலும் சற்று கூடுதலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக குளிரான கால நிலை நிலவி வருகிறது. பகலில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் நிலையில், மாலை 6 மணி அளவில் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் இரவில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
மாவட்டத்தில் பல்லடம் பொங்கலூர், காங்கேயம், குண்டடம், தாராபுரம், மூலனூர், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு அதிக அளவில் உள்ளதால், குளிர் மிகவும் கடுமையாக உள்ளது. தொடர் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பலருக்கும் சளி, தலைவலி உள்ளிட்ட உடல் நல கோளாறுகளும் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் சளி தொந்தரவால் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.
அவினாசி பகுதியில் காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிக அளவில் சூழ்ந்து காணப்பட்டதால், சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். மேலும் முக்கிய சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
- குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
- கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-
தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பணிகள் நிறுத்தம்
- மழை நின்ற பின் பணி தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்,
கரூர் மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை பெய்ததால் நெல் அறுவடை பணி பாதிக்கப் பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாயனூர், திருக்காம்புலியூர், மகா தானபுரம், லாலாப்பேட்டை, நந்தன் கோட்டை, வல்லம், வீரவள்ளி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக் கரில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் அப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வயல் களில் நெற்கதிர் இயந்திரம், டிராக்டர் கொண்டு அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மழை நின்று வெயில் அடித்தால் மீண்டும் அறுவடை பணி தொடங்கும் என விவசாயிகள் கூறினர்
- வேளாண் இயக்குனர் நேரில் ஆய்வு
- பயிர்களை பாதுகாக்க அறிவுரை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவ ட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில், அறு வடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்ப டைந்துள்ளதை, வேளா ண்மைத்துறை இயக்குநர் ஆ.அண்ணா துரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்ட த்தில் பெய்த மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில் அறு வடை நிலையிலிருந்தநெற்ப யிர்கள் பாதிப்படைந்து ள்ளதை நேரில்பார்வை யிட்டு ஆய்வு செய்யப்பட்டது.இரண்டு நாட்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர் சாய்ந்து உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பூகளிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில், பள்ளமான வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிகால் அமைத்து வடித்து, நெல் மணிகள் நனைந்து முளைக்காமல் இருக்க, வயலினை காயவிட்டு, அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தி ற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.எனவே நெல் அறுவடை முடிந்த வயல்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் மண்வளம் கா த்திடவும் அறிவுரை வழங்க ப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரி யசாமி, அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளா ண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோக ன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்பிரியா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர்கள் பிரவினா, பாக்யா, உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
- வார சந்தை சாலையோரத்தில் நடைபெற்றதால் பாதிப்பு
- மாற்று இடம் வழங்காததால் குழப்பம்
அரியலூர்
அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பஸ் நிலையம் இடிக்கப்படும் என்பதை அறிந்த பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் சென்னை நீதிமன்றத்தில் வருகிற 15-ந் தேதி வரை இடிப்பதற்கு தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் கடைக்காரர்களிடம் நகராட்சி சார்பில் மார்ச் மாதம் வாடகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தையானது நேற்று முன்தினம் திடீரென நகராட்சியில் இருந்து இவ்வாரம் வார சந்தை செயல்படாது எனவும், இடிக்கப்படும் எனவும் அறிவித்தனர். உரிய காலத்தில் அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு கடை போட வந்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வார சந்தை செயல்படாது என தெரிந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் முறையிட்டனர். சந்தை இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தைக்கான குத்தகை இம்மாத இறுதிவரை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. சந்தைக்கும் இடம் எங்கே என தெரியவில்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடமும் எங்கே எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வந்திருந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சரக்கு ஆட்டோ நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
- மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதியில் நாள் தொல்லை அதிகரிப்பு
திருமானூர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் விற்கப்படுகிறது.இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் மீன்களின் கழிவுகளை சாலையின் ஓரங்களில் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
- சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை
- இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுவையில் இப்போது போதை பொருட்களுக்கு இளம் வயது பிள்ளைகள் அடிமையாகி வருகின்றனர். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
தீய பழக்கவழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். எத்தனை கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் அறிந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய நிலையில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடல்நலம் கெடுவதோடு, போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் செய்கின்ற குற்றங்களானது, அவர்களே தங்களை அறிந்து கொள்ளாத நிலையில செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது.
போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற உணர்வு என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.
அப்படிப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்ற இளம் வயது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றங்களால் நம்முடைய நாட்டின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சிந்திக்கக் கூடிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.
காவல்துறையின் இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற தீய பழக்கவழக்கங்களை தடுப்போம். இதனை விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்துவோம். இது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தி, அதன்மூலம் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளான இளம் வயதினரை திருத்த வேண்டும்.
இந்த பழக்க வழக்கத்திற்கு இளைஞர்களை ஆளாக்கும் குற்றவாளிகழை அறவே ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்வாதி சிங், பக்தவச்சலம், மாறன், ராஜேஷ், இன்ஸ்ெபக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய பேரணி வழுதாவூர் சாலை, மூலகுளம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் பைபாஸ், ரெட்டியார்பாளையம், இந்திரா காந்தி சதுக்கம், 100 அடி சாலை, கடலூர் சாலை, முருங்கபாக்கம் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முதலியார்பேட்டை, உப்பளம் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
- சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாளாக தொடா்ந்து கன மழை பெய்துவருகிறது.
இதனால் கூடலூா்- மைசூா் ரோட்டில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் நின்ற மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தமிழகம், கா்நாடகம், கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மூங்கில் தூா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.
இதனால் அங்கு 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.