என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggression"

    • பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
    • அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.

    அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பஸ் நிலையம் முழு வதும் 150 -க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவை பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது.தள்ளு வண்டியில் போட்டி போட்டுக் கொண்டு பஸ் நிலையம் முழுவதையும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் வசம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறு குரு விவசாயிகள், வணிகர்கள் பல தரப்பினரும் திட்டக்குடி பஸ்நிலையம் உள்பகுதியில் செல்ல முடியாமல் அன்றாடம் தள்ளுவண்டிகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பலமுறை திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மாலை நேரத்தில் 15 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வருகை தந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. போலீசார் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தால் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை நேரங்க ளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாண வர்கள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வருகை தருவ தால் மாணவிகள், மாண வர்கள் நின்று பஸ் ஏற முடியாத சூழ்நிலை அன்றாட காட்சி பொருளாக உள்ளது. பஸ்நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் பெண்களிடம் பையில் உள்ள பொருட்கள் திருடுவது அவர்கள் போலீசில் புகார் அளிப்பது தொடக்கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் குறைந்தது மாலை நேரத்தில் 3 மணி நேரம் போலீசார் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய த்தில் உள்ள தள்ளுவண்டி அகற்றி வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
    • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

    ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.

    ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.

    • சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது.
    • ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கடலூா:

    புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் 2 விபத்துகளில்2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது               இது சம்பந்தமாக நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்ப டையில் ஆக்கிர மிப்புகள் தான் காரணம் என்று உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.

    எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கடைக்கா ரர்களும் அவரவர்கள் கடைக்கு முன்பு வைத்திருந்த ஆக்கிரமி ப்புகளை தானாக முன்வந்து அகற்றினர். இதனால் சாலை அகலமாக காட்சி அளிக்கிறது.

    பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் இந்திரா காந்தி சாலையில் பெருமளவுக்குஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதாவது 100 அடி சாலையானது தற்போது 10 அடியாக குறுகி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில்இருந்து வெளியே வரும் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நகராட்சி ஆணையாளர்மகேஸ்வரி, நகர நில அளவையர்அசோக் குமார்ஆகியோர் இந்திரா காந்தி சாலை பஸ் நிலையம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    கடலூர்:

    புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.


    ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.
    • ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

    • கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
    • நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தியாகும்.

    கடலூர் :

    வடலூர் நகரில் சமீப காலமாக வாகன போக்கு வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடலூர் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் பெரும்பாலும் மாற்று இடங்களில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த கடைகள் பண்ருட்டி சாலையில் அதிக அளவில் செயல்படுகின்றன. ஓட்டல்கள், டீக்கடைகள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கடைகள் இந்தப் பகுதியில் செயல்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற சூழலில் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக ெரயில்வே கேட் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 2 பேரும், நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தி யாகும். குறிப்பாக ெரயில்வே கேட் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையி லேயே நிறுத்தி விட்டு செல்வது பெரும் இடையூறாக உள்ளது. இதே போல புதிதாக துவக்க ப்பட்ட பல டீக்கடைகள் முன்பு நிறுத்த ப்படும் வாகனங்க ளாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு போலீ சார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    எனவே, வடலூர் 4 முனை சந்திப்பிலிருந்து பண்ருட்டி சாலையில் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகள் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மாற்று இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்வேலி இந்திரா நகர் முதல் மறுவாய் வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. 60 அடி சாலையின் நடுவில் 30 அடி மட்டுமே புது சாலை போடப்பட்டதால் 2 புறமும் பழைய சாலைகள் அப்படியே உள்ளன. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் பிற வாகனங்களுக்கு வழி விடும்போது 2 சாலைகளுக்கும் நடுவே உள்ள உயர வித்தியாசத்தால் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. அப்போது வரும் கனரக வாகனத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலைகளை பழைய நிலையிலையே அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரி புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த வாரியின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றன. இந்நிலையில் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்ற கோரி தனிநபர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். 

    தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிகாரிகள் வருகிற 28- ந் தேதி வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×