என் மலர்
நீங்கள் தேடியது "Amman"
- அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர், தளவா பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல, நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி மண்மங்கலம் பகுதிகளில் ஆகிய உள்ள அம்மன் கோவில் களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது
- சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது
திருச்சி:
திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சிவன் கோவில்களில் கார்த்திகை சோம வாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
இதனையொட்டி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கார்த்திகை முதல் சோமவாரமான நேற்று மாலை 7 மணியளவில் திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சங்காபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது.
அதன் மையத்தில் தங்கபிடிப்போட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டு அனைத்து சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டு பின்னர் அந்த சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் தங்கபிடிப்போட்ட சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு ஜெம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
- கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பொங்கல், மாவிளக்கு பூஜையும், அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.
- மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா நடந்தது.
- அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா நடந்தது. மூங்கில் ஊரணியில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடங்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
உற்சவ விழா, அம்மன், Festival, Amman
இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- இன்று சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை நடக்கிறது.
கீழ்குளம் பறம்பு அம்மனாடும்தேரியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முதல் நாள் தொடங்கி தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5.30 மணிக்கு சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை, பூஜை பலி, உத்வஸிதத்து ஜீவ கலசத்திற்கு சுற்று எழுந்தருளல், பள்ளி உறக்கம் ஆகியவை நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கணபதிஹோமம், பிரதிஷ்டை ஹோமம், பள்ளி எழுப்பல், பிரதிஷ்டை பலி, மூர்த்திகள் கோவிலுக்குள் எழுந்தருளுதல், காலை 6 மணிக்கு பிரதிஷ்டை, தொடர்ந்து பகவதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீவ கலச அபிஷேகம், அஷ்ட பந்தன கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு வாழ்த்தரங்கம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
- தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.
- குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்திரகாளி அம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு நேற்று 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள் எடுத்தும், பால்குடம், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
- வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.
தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன் கோவில்கள் உள்ளன. இதில் சில கோவில்களே மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன.
இந்த தலங்களிலும் குறிப்பிட்ட சில தலங்களே சக்தி தலங்களாக உருவெடுத்துள்ளன. இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் அம்பிகையின் அவதார வரலாறு ஐதீகமாக பின்னணியில் உள்ளது.
ஒவ்வொரு அவதாரமும், அவதார நோக்கமும் வேறு, வேறாக உள்ளன. இதன் காரணமாகத்தான் பராசக்தியானவள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான பெயர்களில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
பெரும்பாலும் அந்தந்த தலத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் வரலாறுக்கு ஏற்ப வழிபாடுகள் இருக்கும். அந்த வழிபாடுகள் எப்படி தோன்றி இருக்கும் என்பதை சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், அம்பிகையே அந்த பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் உருவாக்கிய உண்மை தெரியவரும்.
சில அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி சென்றால் பிடிக்கும். சில அம்மனுக்கு மொட்டை போட்டு மாவிளக்கு பிரார்த்தனை செய்தால் பிடிக்கும்.
சில அம்மன்கள் பொங்கலிட்டு வழிபடுவதை விரும்பும். அன்னதானம் செய்பவர்களையும், கூழ்வார்ப்பவர்களையும் அம்மன் காப்பாள் என்பது பொதுவான நம்பிக்கை.
இப்படி தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட வழிபாடாக வேப்பஞ்சேலை வழிபாடு உள்ளது.
இது பிரச்சினைகளை வேரறுக்கும் மகத்துவம் நிறைந்த வழிபாடாகும்.
அம்மனின் மனதை குளிர வைத்து அவள் அருளை வாரி வாரி வழங்க வைக்கும் வழிபாடாகும்.
இத்தகைய சிறப்பான ஒரு வழிபாடு பெரியபாளையம் கோவிலில் மட்டுமே காலம், காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் வேறு ஒரு எந்த ஆலயத்திலும் அற்புதமான இந்த அபூர்வ வழிபாட்டை பக்தர்கள் காண முடியாது.
வேப்பஞ்சேலை வழிபாடு என்றால் என்ன? அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரியுமா?
உடம்பில் எந்த உடையும் அணியாமல், உன் தலத்தை சுற்றி வருகிறேன், தாயே.... என் பிரார்த்தனையை நிறைவேற்று என்று வேண்டிக் கொள்வதே இந்த வழிபாட்டின் அடிப்படையாகும்.
எந்த ஒரு பிரச்சினைக்காகவும் இந்த வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்ளலாம்.
அப்படி வேண்டி கொள்ளும் பெண்கள் உடலில் துணிகளை களைந்து விட்டு, அதற்குப் பதில் முழுக்க முழுக்க வேப்ப இலைகளால் உடலை சுற்றி மறைத்துக் கொள்வார்கள். அந்த வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.
இதுதான் வேப்பஞ்சேலை வழிபாடாகும்.
இந்த வேப்பஞ்சேலை வழிபாடு எப்படி தோன்றியது தெரியுமா? அதிலும் வரலாற்று பின்னணி உள்ளது.
நீங்கள் பெரியபாளையம் கோவில் வரலாறு, ரேணுகாதேவி அவதார வரலாற்றை படித்து இருப்பீர்கள்.
பரசுராமரை இழந்து துடித்த ரேணுகாதேவி தீ மூட்டி அதில் குதித்ததையும், வருண பகவான் மழை பொய்வித்து அவளை காப்பாற்றியதையும் படித்து இருப்பீர்கள்.
தீயில் குதித்ததால் உடைகளை இழந்து காயம் அடைந்த ரேணுகாதேவி வேப்ப மரத்தின் இலைகளை கயிற்றில் கட்டி, ஆடையாக்கி அணிந்து கொண்டாள். அதை பிரதிபலிக்கும் வகையில்தான் வேப்பஞ்சேலை வழிபாடு தோன்றியது.
உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல், வேப்ப இலை ஆடை உடுத்தி, தன்னைச் சுற்றி வரும் பெண்களை காணும் போது, பெரியளையத்தம்மனின் மனம் பனிக்கட்டிப் போல உருகும். தன் பக்தை ஒருத்தி அதிகபட்ச பக்தியை காட்ட செய்யும் வேப்பிலை ஆடை வழிபாட்டை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.
அதோடு அந்த பக்தை எதை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்கிறாளோ, அதை எந்தவித தங்கு தடையின்றி நிறைவேற்றி கொடுக்கிறாள். நிறைய பெண்கள், அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அது வெற்றிகரமாக முடிந்ததும் வேப்பஞ்சேலை வழிபாடு செய்வதுண்டு.
இதுவரை லட்சக்கணக்கான பெண்கள் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து பலன் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தெல்லாம் பவானி தாயின் பக்தைகள் வேப்பஞ்சேலை அணிந்து பலன் பெற்று சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரியபாளையத்தம்மனே உருவாக்கிய வழிபாடு என்பதால் வேப்பஞ்சேலை பிரார்த்தனைக்கு 100 சதவீத வெற்றி கிடைக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு பெண் வேப்பஞ்சேலை அணிந்து, பெரியளையத்தம்மனை சுற்றி வந்து விட்டால், அவள் பிரச்சினைகள் அன்றோடு தீர்ந்து விட்டது என்று அர்த்தம்.
சில பெண்களுக்கு குடிகார கணவரால் தினமும் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கலாம்.
சில பெண்களுக்கு மகன் அல்லது மகள்களால் பிரச்சினை ஏற்படலாம்.
சிலர் வேலை கிடைக்காமல் தவிக்கலாம். சிலர் புத்திர பாக்கியத்துக்காக ஏங்கலாம்.
சிலருக்கு எல்லா செல்வமும் இருந்தாலும், மன நிம்மதி என்பது கடுகு அளவு கூட இல்லாமல் இருக்கலாம்.
இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு நாள் வேப்பஞ்சேலை வழிபாட்டில், அந்த பிரச்சினைகள் தூள்... தூளாக பறந்தோடி விடும்.
இதனால்தான் வேப்பஞ்சேலை அணிந்து பெரியபாளையத்தம்மனை சுற்றி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
முன்பெல்லாம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தான் வேப்பஞ்சேலை வழிபாடு நடந்து வந்தது. பிறகு பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்யத் தொடங்கினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் எல்லா நாட்களிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து வருகிறார்கள். இதனால் வேப்பஞ்சேலை பிரார்த்தனையை நிறைவேற்ற நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போதும் நீங்கள் சாதாரண நாட்களில் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றால், ஏராளமான பெண்கள் வேப்பஞ்சேலை கட்டி கூப்பிய கரங்களுடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவதை காண முடியும். அந்த பெண்களின் முகத்தைப் பார்த்தால், ''தாயே என் பிராத்தனையை உடனே நிறைவேற்றினாய். உனக்கு நன்றி காணிக்கை செலுத்துகிறேன்.... தாயே...'' என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றும்.
இந்த வழிபாடு பற்றி கேள்விப்படும் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.
வேப்பஞ்சேலை ஆடையை எப்படி தயார் செய்வது?
வேப்பஞ்சேலை ஆடையை மாற்றிக் கொள்ள கோவிலில் சரியான இடவசதி இருக்குமா?
வேப்பஞ்சேலையை எப்படி உடுத்துவது?
இப்படியெல்லாம் சந்தேகங்கள், கேள்விகள் மனதில் எழுவதுண்டு.
கவலையேப்படாதீர்கள். வேப்பஞ்சேலை ஆடையை பக்தர்கள் யாரும் தயாரிக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை.
வேப்ப இலைகளை சேகரித்து நாமே கயிற்றில் கட்டி தொகுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.
நீங்கள் விரும்பினால், உங்களால் முடிந்தால், நிறைய வேப்ப இலை தழைகளை சேகரித்து கயிற்றில் நெருக்கமாக கட்டி வேப்பஞ்சேலை தயாரித்து எடுத்துச் செல்லாம்.
முடியாவிட்டால், கோவில் சுற்றுப் பகுதியில் விற்பனை செய்யப்படும் வேப்பஞ்சேலைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
ஒரு வேப்பஞ்சேலையை 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
துணிகளை மாற்றி விட்டு, வேப்பஞ்சேலையை கட்டுவதற்கு என்றே கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பான, முழுக்க முழுக்க பெண்களே பயன்படுத்தும் அந்த அறைகளில் பக்தைகள் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளலாம்.
சில பெண்களுக்கு வேப்பஞ்சேலையை எப்படி கட்டிக் கொள்வது என்ற சந்தேகம் எழலாம். அதற்கு உதவவும் பணியாளர்கள் உள்ளனர். அந்த பணியாளர்கள் கயிற்றால் வேப்பஞ்சேலையை நன்கு கட்டி விடுவார்கள்.
அதன் பிறகு ஆலயத்தை 3 தடவை சுற்றி வந்து, பெரியபாளையத்தம்மனை வணங்கி விட்டு, மீண்டும் அறைக்கு சென்று வேப்பஞ்சேலையை களைந்து விட்டு, உடை மாற்றலாம்.
முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே இந்த பிரார்த்தனையை செய்து வந்தனர். சமீப காலமாக சிறுவர், சிறுமியர்களும், ஆண்களும் கூட இந்த வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்கிறார்கள்.
இந்த பிரார்த்தனை செய்வதற்கு வயது வரம்பு இல்லை. எந்த வயதினரும் செய்யலாம். பயன்பெறலாம்.
- பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
பரமத்தி வேலூர்;
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மஹா மாரியம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சா மிர்தம் உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் மகா மாரி யம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மகா மாரி யம்மன் சப்பாரத்தில் திரு விதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை நாணயக்கார தெருவில் உள்ள உச்சமாகா ளியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூந்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனைய டுத்து கலசம்பாடி முத்து பூசாரி குழுவினரின் காளியாட்டத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சி நடந்தது.
- மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் கோட்டை கருப்பசாமி, மண்டு சோலைச்சி, அசையாமணிகட்டி, அம்மச்சி, மந்தைஅம்மன், ஆதிசிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.
மாலையில் திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் குட்டிமேய்க்கிபட்டி சென்று மந்தை அம்மன், அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க சின்ன இலந்தை குளம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து சக்தி கிடாய் வெட்டுதல், அம்மச்சி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக மந்தை அம்மன் கோவிலுக்கு சாமி சென்று அடைந்தது.
விழாவில் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து மாலை மந்தை அம்மன் முளைப்பாரியுடன் பூஞ்சோலை சென்றடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
- தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
பரமத்திவேலூர்:Namakkal District News,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 3மணிக்கு விநாயகர் பூஜை, மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவருக்கு பூஜை மற்றும் 13 அத்திரியாகங்கள் பாராயணம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சண்டி ஹோம விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பாண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.