என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "App"

    • டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
    • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.

    கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.

    இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

    செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.

    ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.

    மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன
    • ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.

    அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் ஜனவரி 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

    அதன்படி டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் இன்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

    இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை தாற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

     

    ஆனால் நாளை அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் டிக் டாக் தடையை விரும்பவில்லை என்று தெரிகிறது.

    அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது என்று டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    பதவியேற்றதும் டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு வழிகளில் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆவண செய்வார் என்று டிரம்ப் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிட வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பா டுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாபு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வேளாண்மை துறையில் தற்போதுள்ள மானியத்திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

    காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள்(சென்னை) சங்கர் ஜிவால், (தாம்பரம்) அமல்ராஜ், (ஆவடி) சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக போலீஸ் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    'ஸ்மார்ட் காவலர்' செயலி, காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.

    இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அருகே மகளிர் குழுவினருக்கு மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
    • மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குதரவை ஊராட்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தலைமையில் நடந்தது.

    மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுயதொழில் தொடங்கு வதற்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மகளிர்கள் மிளகாய்பொடி மற்றும் சமையல் பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி தக்க ஒன்றாகும்.

    மகளிர் குழு உறுப்பினர்கள் முழுமையாக கவனம் செலுத்தி தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும் பொழுது உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

    இதன் மூலம் குழு உறுப்பினர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதால் வங்கியில் பெற்ற கடனை எளிதாக திருப்பி செலுத்துவதுடன் மகளிர் குழுவிற்கும் நிலையான வருவாய் கிடைக்கும். அதேபோல் வங்கியில் கடனை சரியான காலத்திற்குள் செலுத்துவதன் மூலம் மேலும் கடன் உதவிகளை வழங்க வங்கி தயாராக இருக்கும்.

    எனவே இந்த பகுதியில் ஆரம்பித்துள்ள மகளிர் குழுவினர் தயாரிக்கும் பொருளை பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு மற்ற மகளிர் குழுக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது. 

    பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.



    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் லாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

    சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
    ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia



    பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.

    இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர். 



    பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் ஆகஸ்டு 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த சூழலில் பயனர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI



    டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

    ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

    அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

    எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

    ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
    ×