என் மலர்
நீங்கள் தேடியது "assistance"
- ராமநாதபுரத்தில் 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் வழங்கினர்.
- சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், பன்முக நோக்கத்தோடு இந்தியாவில் எந்த மாநி லத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை அமைதி மாநிலமாக மாற்றி ஆளுமை திறன் கொண்ட முதல்வராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.
இங்கு பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் திட்டங்களை பெற்றுதர பக்கபலமாக இருப்பேன் என்றார். இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 314 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 99 ஆயிரத்து 983 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடனை கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பி ரமணியன், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வேலாயுதபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா 50 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 60 ஆயிரத்து 300 மதிப்பிலும், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான உதவி தொகைகளும், 105 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 4 பயனாளிகளுக்கு புதிய மின் னணு குடும்ப அட்டைகளும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 240 மதிப்பி லும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 430 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.71 ஆயிரத்து 200 மதிப்பி லும் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 88 ஆயிரத்து 170 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஜெய சீலன் வழங்கினார்.
முகாமில் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் சங்கர் நாராயணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) யசோதாமணி, கலுசிவலிங்கம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
- தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக் கைகள் குறித்து, மொத்தம், 348 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரி சீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம், உயர்கல்வி தொடர்வ தற்காக, நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியில் இருந்து, 3 மாணவ, மாணவி யருக்கு, தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 4 மாணவிகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், மொத்தம் 7 மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, நாபின்ஸ் நிறுவனம் சார்பில், தலா ரூ. 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி எந்தி ரங்கள், நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன் பிரசாத் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அதையடுத்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களைப் பெற்று, துறை அலுவலரிடம் வழங்கிய கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
- கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநி யோகம் செய்யும் பணியில் ஈடுபட்ட்டிருந்தபோது, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக, தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்து கொண்டு, ரேசன் கடை பணியாளர் கோபாலின் மனைவி கங்கா தேவியிடம், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், டி.என்.சி.எஸ்.சி மண்டல மேலாளர் செல்வ விஜய ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மூத்த குடிமக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற திட்டம் இந்தியாவில் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முன்முயற்சியாகும்.
நிதி உதவி
மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிஎஸ்ஆர்சி) மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஏஒய்) என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
சேலம், நாமக்கல் மாவட்டம்
தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 552 மூத்த குடிமக்கள் இல்லங்கள், 14 தொடர் பராமரிப்பு இல்லங்கள், 19 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 5 பிசியோதெரபி கிளினிக்குகள் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் இந்த முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் இவை உள்ளன. அதில் சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் பயன் அடைந்த மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.
ஏவிஒய்ஏஒய் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு அம்சம் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா (ஆர்விஒய்) ஆகும். வயது தொடர்பான ஏதேனும் இயலாமை அல்லது பலவீனத்தால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, பற்கள் இழப்பு போன்றவற்றை சமாளிக்க உதவும் வகையில் சாதனங்கள் இத்திட்டத்தில் வழங்கப் படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள' பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 269 முகாம்கள் நடத்தப்பட்டு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 140.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 130 முகாம்களின் மூலம் 1,57,514 பயனாளிகளுக்கு மொத்தம் 8.48,841 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்காக எல்டர்லைன் என்ற தேசிய உதவி எண் உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவ தற்காகவும், இலவச தகவல், வழிகாட்டுதல், ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ள எல்டர்லைன் உதவி எண், வாரத்தின் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.
இந்த தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
- கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்போர்டு பகுதியில் குன்னூர் நகர தி.மு.க சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடந்தது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.
மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத் துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்ரின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத் ராவ், பழனிசாமி, மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் ஜாகீர்உசேன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், வசந்தி, ஜெக நாதன், செல்வி, பாக்கியவதி, சித்ரா, சமீனா, அப்துல்காதர், மது, கோபு, சகாயநாதன், இளைஞரணி பிரவீன், அபி, கிப்சன், ஜெயராம் மற்றும் கிளை செயலளார்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா
- எம்.ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஊட்டி,
ஊட்டி ஏ.டி.சி சதுக்கத்தில் அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடந்தது.
அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க தலைமை நிர்வாகி எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துக்கொண்டு பேசினார். தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் அக்கிம்பாபு, எப்பநாடு கண்ணன் மீனவர் அணி மாவட்ட. செயலாளர் விசாந்த்,ஒன்றிய செயலாளர் கடநாடு ப.குமார், பேரூராட்சி செயலாளர்கள் கண்ணபிரான், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கோத்தகிரி வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, தனலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக எம்.ஜிஆர் படத்திற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
- கலைஞர் ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊட்டி பிங்கர்போஸ்ட் திரேசா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகரசெயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி எம்.பி. ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரீசர் பாக்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மேலும் மருத்துவ காப்பீடு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அணிகளின் அமைப்பாளர்கள் எல்க்ஹில் ரவி, தீபக், ஊட்டி நகர துணை செயலாளர் கார்ட்ன் கிருஷ்ணர், அவைத்தலைவர் ஜெயகோபி, கவுன்சிலர்கள் தம்பிஇஸ்மாயில், கீதா, வனிதா, செல்வராஜ், மேரிபுளோரினா, அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதி கழகம் சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் பொன்னரசு, 58-வது வட்டம் கருப்பசாமி, நிர்வாகிகள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், மரியகிராஜன், அந்தோணிராஜ், எஸ்.ஆர். ஜெ.அருண் குமார், கே.பி.ஆர்.ராஜ், திருமணி ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் 58-வது வார்டு பச்சிராஜ், 55-வது வார்டு ராஜதுரை, அத்திமரப்பட்டி பால்பாண்டி நாடார், தங்கராஜ், கல்பனா, வசந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.