என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Rally"

    • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

    நெல்லை:

    பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

    பிங்க் மாதம்

    எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    கலந்துரையாடல்

    பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

    புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

    தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

    நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

    தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

    நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது
    • நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார்

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக நெல்லை மாவட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார். நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள், கற்பகவிநாயக சுந்தரம், ஜான் பிரிட்டோ, உதவி செயற் பொறியாளர்கள் முத்துசாமி , சின்னசாமி, சைலஜா, கலா ராஜகோபால், தங்க முருகன், ராஜசேகர், குத்தாலிங்கம், உதவி மின்பொறியாளர்கள், சரவணன், அருணன், சரவணகுமார், முருகன், சரவணன், ஜெனட் மல்லிகா, ஜெயஸ்ரீ எழில், மேகலா, திரேசா பாக்கியவதி, ஆன்சிங்ரூபலா, மனோகரன், அபிராமி நாதன், வெங்கடேஷ் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சித்தமருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் பிறந்த நடசத்திரமான மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6-வது தேசிய சித்தா தினம் நாளை கொண்டாப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    இதை முன்னிட்டு நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது. சித்தமருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா மரியா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணரவு ஓட்டமானது பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி. மைதானம், எல்.ஐ.சி அலுவலகம், லூர்து நாதர் சிலைவழியாக சென்று சித்த மருத்துவக் கல்லூரியில் முடிவடைந்தது.

    துண்டுபிரசுரம்

    தொடர்ந்து மனித சங்கிலி பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் நடந்தது. சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    சித்தர்கள் சொன்ன சித்த மருத்துவக் கோட்பாடு, தத்துவங்கள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அச்சிட்ட தகவல் பலகைகளை மாணவ- மாணவிகள் கையிலேந்தி சென்றனர்.

    பாளை சித்த மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் வனிதா, பூமாதேவி, ருக்மணி, நடராஜன் , ராஜாசங்கர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர் ஜெயலானி, ராஜராஜேஸ்வரி, ராஜகுமாரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

    • 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக கலந்து கொள்கின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ந் தேதி ஸ்பெயினுடனும், 2-வது ஆட்டத்தில் 15-ந் தேதி இங்கிலாந்துடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 19-ந் தேதி வேல்ஸ் அணியுடனும் மோதுகிறது.

    இந்தியாவில் நடைபெறும் 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கி போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ஆக்கி உலக கோப்பையின் மாதிரி மற்றும் இந்திய தேசிய கொடியுடன் கே.ஆர்.கல்வி குழுமங்களின் ஆக்கி வீரர்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆக்கி வீரர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் வீரர்கள் மற்றும் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த ஏழு ஆக்கி வீரர்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கே.வெங்கடேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணியின் முடிவில் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த 7 ஆக்கி வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை தவறவிட்ட, கல்வி அறிவு பெறாத முதியவர்களுக்கு எழுத்தறிவை புகட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை புதிய மாநகராட்சி பள்ளியில் தொடங்கிய வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் கஸ்தூரி பாய், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகதேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வீரராகவன், எஸ்தர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2017-ல் இருந்து இந்த ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊன தடுப்பு முகாம், தோல் நோய் முகாம், பயிற்சிகள், தொழிற்சாலைகளின் பரிசோதனை, களப்பணி நோய் கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஆந்திராவில் உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக 5 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் நெல்லை நகர்புற பகுதிகளில் தொழுநோய் ஒழிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் 38 பேருக்கும், நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை 51 பேரும் புதிய நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டு நவீன கூட்டுமருந்து சிகிச்சை மூலம் குணமடைந்து வருகின்றனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பு முகாம் மூலம் நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

    நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாத்தில் உள்ள மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) அலுவலகம் மூலம் வேறு உதவிகள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு உதவித்தொகை போன்றவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள நோயாளிகள் 191 பேர் மாதந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் பெற்று வருகின்றனர். உதவி தேவைப்படுவோர் அல்லது நோய் பற்றிய தாக்கம் உள்ளவர்கள் இந்த அலுவலகத்தை திங்கட்கிழமை தோறும் நேரில் சென்று தெரிந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) அலார் சாந்தி, இணை இயக்குநர் (பொறுப்பு) நலப்பணிகள் ராமநாதன், துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) வெள்ளைசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ராஜேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணைஇயக்குநர் (தொழு நோய்) பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமையில், கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி பேரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஹரிகோவிந்தராஜ், ராஜேந்திரன் ரவிக்குமார், மதியரசி, கிரிஜா, சவரிராயம்மாள், கோகிலவாணி மற்றும் வக்கீல் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஹரி கிருஷ்ணன், பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிருந்தா மற்றும் கல்லூரி ஐ.கியூ.ஓ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். வள்ளியூர் காவல் துறை சார்பில் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும்.
    • நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    திருப்பூர் :

    தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும். அதே போல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்.நிலைப்பள்ளியில் துவங்கிய.பேரணியை கலெக்டர் வினீத் கொடி அசைத்து.துவக்கி வைத்தார்.

    பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    • பேரணி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலகத்திலிருந்து தொடங்கியது.
    • பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை பெருக்காதே என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறு பேரணி சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சமூக நல செவிலியர் துறை மற்றும் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவிகளால் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது.

    இப்பேரணி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலகத்திலிருந்து தொடங்கியது.

    இப்பேரணியை திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவஆனந்தி தலைமையில், ஆணையாளர் வேலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி பகத்சிங் பஸ்நிலையம் வழியாக காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி வழியாக சென்று மீண்டும் ஆதித்தனார் கல்வி நிறுவன வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இப்பேரணியில், தவிர்ப்போம் தவிர்ப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், நம் பூமியை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மனிதவளம் காப்போம், உருவாக்குவோம் உருவாக்குவோம்,

    பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பிளாஸ்டிக் என்பது விஷமாகும் அதை ஒழிப்பது நம் கடமையாகும், பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை பெருக்காதே, பிளாஸ்டிக் புகை உயிருக்கு பகை, ஒருமுறை பிளாஸ்டிக் பயன்பாடு தருமே நமக்கு பெரும்பாடு, பிளாஸ்டிக்கை விடு துணிப்பை எடு, வேண்டாம் வேண்டாம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் வேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.

    பேரணியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயணராஜன், கல்லூரி முதல்வர் என்.கலைக்குரு செல்வி, கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்பேரணியை சமூக நல செவிலியர் துறை பிரிவு இணை பேராசிரியை சங்கீதா ஒருங்கிணைத்து நடத்தினார். இதை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் முதல்வர் கலைக்குருசெல்வி மரக்கன்றுகள் நட்டினார்.

    • பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
    • வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரி சார்பாக உலக சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பெபிலா ஜோஸ்பின் பேரணி குறித்து விளக்க உரையாற்றினார்.

    வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்சி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் நாட்டின் அழிவுக்கும், மக்களின் மரணத்துக்கும் காரணமாகும். பிளாஸ்டிக்கை வாங்காதீர்கள், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை மாணவர்கள் கொடுத்தனர்.

    இந்த பேரணி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட நூலகம், தலைமை தபால் அலுவலகம், தெற்கு பஜார், ஜான்ஸ் கல்லூரி வழியாக சென்று மீண்டும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஏற்பாடுகளை இந்திய ராணுவ சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், ஹவில்தார்கள் மணி, ஹரி, செந்தில்குமார், என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பேரணியின் போது மாணவ- மாணவிகள் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியவதி பிளாரன்ஸ் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி சகாய வியாகம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் சுபேதார் தசரதன், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின்லதா, வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    ×