என் மலர்
நீங்கள் தேடியது "Bangladesh"
- பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோர் குறிவைக்கப்படக்கூடாது.
- சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வன்தேசத்தினருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளருமான சாம் பிட்ரோடா பேசியுள்ளார். பாஜகவினர் இந்த கருத்தை சர்ச்சையாகி வருகின்றனர்.
பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விவகாரம் அரசியல் களத்தில் துருப்புசீட்டாக மாறிவருகிறது.
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் தலைநகரை சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகளிடம் இருந்து விடுவிப்போம் என பாஜக வாக்குறுதியில் தெரிவித்துள்ள்ளது. வங்கதேசத்தினருக்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆம் ஆத்மி பெற்றுத்தந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் சாம் பிட்ரோடா பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைப்பதை விட்டுவிட்டு காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அவர்கள் [ புல்மேபியர்ந்தோர் ] இங்கு வர மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தது தவறுதான். ஆனால் நாம் வங்கதேசத்தினறையும், சிறுபான்மையினரையும் குறிவைப்பதில் மட்டுமே தீவிரமாக உள்ளோம்.
எல்லோரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதனால் நாம் சில சிரமங்களுக்கு உள்ளானாலும் அதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. நாம் நமது வளங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது கிடையாது. அவர்கள் தங்கள் வயிற்றை நிரைப்பிகொள்ளத்தான் வழி தேடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
OUTRAGEOUS! Rahul Gandhi's right hand man Sam Pitroda's statement advocating for illegal migrants to settle in India, even at the country's expense, is shocking and irresponsible. Now you wonder how Congress since the last 70 years worked overtime to settle ILLEGALS in our… pic.twitter.com/kKVFusDD71
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)?? (@pradip103) January 27, 2025
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து பாஜக வாய்க்கு அவலாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, சட்டவிரோதமான குடியேறிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியின் வலது கை சாம் பிட்ரோடா கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ், நமது நாட்டில் சட்டவிரோதமானவர்களைக் குடியமர்த்துவதற்கு எப்படி ஓவர் டைம் வேலை செய்தது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா! என்று குறிப்பிட்டுள்ளார்.
- வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது.
- இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.
டாக்கா:
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தன. ஆனால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.
இந்தநிலையில் பாகிஸ்தானுக்கான வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து தலைநகர் டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என இக்பால் தெரிவித்துள்ளார்.
+2
- 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது
- சஷாஸ்திர சீமா பால் (SSB) வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்.
அதன்பின் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-வங்கதேச எல்லையில் இருநாட்டு ராணுவங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் உள்ள ஃபுல்பாரி இந்தோ-வங்கதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்), வங்கதேச எல்லைக் காவலர்களுக்கு (பிஜிபி) இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல, இந்திய-நேபாள எல்லை, டார்ஜிலிங்கில் உள்ள பானிடாங்கி பகுதியில், சாஷாஸ்திர சீமா பால் (SSB) மத்திய காவல்படை வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
- தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
- 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
மறுபக்கம், சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று முகமது ஷரிபுல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர். மேலும் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
ஆனால் கைது செய்யப்பட்டவரின் தந்தை, சிசிடிவியில் இருப்பது தனது மகன் இல்லை என்றும் அவரை தவறாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சைஃப் அலி கான் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) வசம் இருந்த கைரேகையோடு தற்போது கைது செய்யப்பட்டவரின் கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்பட்ட நிலையில் எதனுடனும் அவரின் கை ரேகை பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதல் மாதிரிகளை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- அவர் பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
- கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை
கர்நாடகாவில் வீட்டு வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்கெரே ஏரிக்கு அருகே 28 வயது பெண்ணின் சடலம் நேற்று [வெள்ளிக்கிழமை] காலை கண்டெடுக்கப்பட்டது. அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக பெங்களூரில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார். ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்த பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.
வியாழன் மதியம் முதல் பெண் காணவில்லை என்றும், மாலை வரை காத்திருந்த கணவன் பின்னர் அவரை தேடிச் சென்றுள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று காலை ஏரிக்கு அருகில் உள்ள மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்புக்கு ஒத்திகை பார்த்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும் துப்பட்டாவால் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு பாரங்களால் உடல் சிதைப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவிதனர்.
மேலும் கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
பெண்ணுக்குத் தெரிந்த யாரோ ஒருவர்தான் குற்றவாளி என்று என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்ணின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு குற்றவாளி தப்பியதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் கணவனுக்கு பாஸ்போர்ட் இருப்பதாகவும், அனால் அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் இல்லை என்றும் அவர் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
- புல்லட் பிரால் முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் போட்டி ஒன்றில் 9 வயது வங்கதேச பள்ளி மாணவனிடம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. வங்கதேச நாளிதழில் வெளியான செய்தியின்படி, FIDE மாஸ்டரான பயிற்சியாளர் நைம் ஹக், தனது மாணவன் கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
டாக்காவைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ரியான் ரஷீத் முக்தாவுக்கும் கார்ல்சனுக்கும் இடையில் ஆன்லைனில் நடந்ததாக கூறப்படும் போட்டி ஜனவரி 18-ம் தேதி புல்லட் பிரால் முறையில் நடந்ததாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
செஸ் வலைதளத்தில் (chess.com) உள்ள தனது அக்கவுண்ட் மற்றும் ப்ரோபைலை தனது மாணவர் ரியான் ரஷீத்-க்கு வழங்கியதாக நைம் தெரிவித்துள்ளார். செஸ் வலைதளத்தில் விளையாடும் போது, ஆன்லைனில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் கார்ல்சனுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. புல்லட் பிரால் முறையில் விளையாடும் போது, வீரர்கள் தங்கள் நகர்வுகளை முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து பேசிய நைம், "நான் முக்தாவுக்கு சதுரங்கம் கற்று கொடுக்கிறேன். அவருக்கும் எப்பவும் ஆன்லைனில் விளையாட மட்டுமே பிடிக்கும். இதனால் நான் அவருக்கு என் செஸ் ஐடியைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்தேன்."
"பிறகு, அவர் திடீரென்று என்னை அழைத்து கார்ல்சனை தோற்கடித்ததாகக் கூறினார். முதலில், என்னால் அதை நம்ப முடியவில்லை. பின்னர் அவர் எனக்கு ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் அனைத்து விளையாட்டு விவரங்களையும் அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன்," என்று தெரிவித்தார்.
- வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
- வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
இதனிடையே கிட்டத்தட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உட்பட 4 பேர் மீது IFIC வங்கி புகார் அளித்திருந்தது.
இதுதொடர்பான வழக்கில் ஷகிப் அல் ஹசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டாகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பாத ஷகிப் அல் ஹசன், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
- அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்தபோதிலும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று உறுதியாக இருந்த மாணவர்களை சமாதானப்படுத்தமுடியவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.
தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரை திரும்ப அனுப்ப வங்கதேசத்தில் உருவாகியுள்ள முகமது யூனுஸ் தலைமையான இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், "ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம் - 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம். இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்கா பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஷேக் ஹசீனா, 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் டிரக்கின் பின்புறத்தில் இருந்து உரையாற்றி முடித்த பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹசீனாவுக்கும் சில காயங்கள் ஏற்பட்டன.
முன்னதாக கோட்டலிபாராவில் உள்ள கல்லூரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில், ஷேக் ஹசீனா உரையாற்ற இருந்த பகுதியில் 40 கிலோ வெடிகுண்டு மீட்கப்பட்டது.
இறுதியாக ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி புறப்படும் சமயத்தில் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர்தப்பியதாக கூறியுள்ளார். முந்தைய கொலை முயற்சிகளையும், கடைசியாக உயிர்தப்பிய நிகழ்வையும் ஷேக் ஹசீனா உருக்கமான முறையில் விவரித்த ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
- இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (79).
வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக்காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது.
இதை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.
அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
- ஷேக் ஹசினாவின் மகள் சைமா வாசெட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா, அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் பிரிட்டன் அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரும் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அதிக மக்கள் தொகை கொண்ட வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் பெரிய அளவிலான லாபகரமான நில அபகரிப்புடன் தொடர்புடையவை.
"ஷேக் ஹசீனா, சில அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலங்களை ஒதுக்கிக் கொண்டார். ஏ.சி.சி. விசாரணைக் குழு தேவையான ஆவணங்களைப் பெற்று, வழக்குகளைத் தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது," என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் (ஏ.சி.சி.) இயக்குநர் ஜெனரல் அக்தர் ஹொசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனாவின் மருமகள், பிரிட்டிஷ் அமைச்சர் துலிப் சித்திக் ஆகியோரும் இடம்பெற்றுள்ள ஹொசைன் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய தலைவர் ஷேக் ஹசினாவின் மகள் சைமா வாசெட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
- வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
- சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
டாக்கா:
இந்தியா-வங்கதேசம் நாடுகல் 4,096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5-வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.
வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
- 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
- 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிளான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
வங்கதேச மக்கள் தொகையில் 7.65 சதவீதம் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற தொடங்கியது.
இந்துக்களின் கோவில்கள் தாக்கப்பட்டன. துர்கா பூஜையின்போது இந்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்துக்கள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்துக்களின் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியானது என்றும் [மத] வகுப்புவாத ரீதியானது அல்ல என்று யூனுஸ் அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரவுகள் அந்த அறிக்கையில் மேற்கோள் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதல்களில் பல 'வகுப்புவாத ரீதியானவை' என்பதை அரசு ஒப்புக்கொண்டாலும் பெரும்பாலான தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றே கூறப்பட்டுள்ளது.
மொத்த வன்முறை சம்பவங்களில், 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
கூற்றுக்களின் அடிப்படையில் இதுவரை 62 வழக்குகளில் காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் குறைந்தது 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதில் 1,234 சம்பவங்கள் அரசியல் காரணங்களுக்காகவே நடந்துள்ளன வகுப்புவாத சம்பவங்கள் குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆகஸ்ட் 5 முதல் ஜனவரி 8, 2025 வரை 134 வகுப்புவாத வன்முறை சம்பவங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வகுப்புவாத வன்முறை தொடர்பான புகார்களை நேரடியாகப் பெறவும், சிறுபான்மை சமூகத்தினருடன் தொடர்பைப் பேணவும் காவல்துறை வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது.
வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது.