என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BHUMI PUJA"

    • ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
    • மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் தங்குவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் காத்திருப்போர் அறைஅமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல் வரவேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியின்போது காத்திருப்போர் அறை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதை தொடர்ந்து உகாயனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைப்பிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மேலும் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, மசநல்லாம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ரூ. 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜ், மதிவதநேசன், தர்மராஜ், வலுப்பூர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அனந்த கிருஷ்ணன், சந்திரன், சின்னச்சாமி மற்றும் ஆவின் இயக்குனர் குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
    • தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 19-வது கோட்டம், சூரமங்கலம் பகுதி சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாழடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையை அருள் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் எம்.எல்.ஏ குறைகேட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் பகுதி தலைவர் ஈஸ்வரன், பகுதி செயலாளர் சிவக்குமார், 23-வது டிவிசன் செயலாளர் கணேசன், சேகர், சேட்டு, அய்யப்பன், அருணாச்சலம், மாது, சக்தி, சந்தோஷ்குமார், சூர்யா, ரங்கநாதன், சுந்தர்ராஜன், கார்த்திக், சந்தோஷ்குமார், அங்கப்பன், ஜேசுதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது
    • வாராப்பூர் ஊராட்சி பள்ளியில் நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி, வகுப்பறைகள் சமுதாயக்கூடத்திலும், நாடகமேடை வளாகத்திலும் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் பள்ளியின் நிலையை பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சேதுராமன் கவனத்திற்கு ஊராட்சிமன்றத்தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜையில் மருத்துவர் சேதுராமன், காமினி குருசங்கர், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்விழி, மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், பொறியாளர் விஎன்ஆர்.நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது.
    • சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மாவட்ட கனிமவளத்துறை நிதி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிட பணிக்கான பூமி பூஜையும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. சோழவந்தான் சட்டம ன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி பொறியாளர் பூப்பாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், ஊராட்சி தலைவர் பவுன்முருகன், துணைதலைவர் பாக்கியம்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, ஊராட்சி துணைதலைவர் கேபிள்ராஜா, ரிசபம் ஊராட்சிதலைவர் சிறுமணி, திருவேடகம் ராஜா, பேட்டை பெரியசாமி, மாணவரணி தவமணி, ஊராட்சி செயலர் திருசெந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயகூட கட்டுமான பணிகளை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது.

    மேலூர்

    மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்காடு சிவன் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மாவட்ட வேளாண் விற்பனை குழுதலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணைத்தலைவர் குலோத்துங்கன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலவளவு விஜயராகவன், கிடாரிபட்டி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி.முன்னிலை வகித்தார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சொந்த செலவில் நூலக வசதி ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறேன். அதேபோல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் ஆண்டு விழா நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆண்டுவிழா போட்டி களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழிநடத்திச்செல்வேன்.

    கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதுபோல அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

    இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.

    இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
    • இதற்கான பூமி பூஜை நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலக கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிங்கம்புணரி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடங்கள் அமைப்பதற்கும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

    அந்த ஊராட்சி செயல கத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணையதள சேவை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பழமையான கட்டி டங்களை இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், சிங்கம்புணரி வட்டம், உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகைக்கான ஆணையைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதாஅண்ணாதுரை, நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் புசலான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவி, மதிவாணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வட்டாட்சியர்கள் திருப்பத்தூர் வெங்கடேசன், சிங்கம்புணரி சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மதுரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 24.70 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை முனியப்பன் தலைமை வகித்தார், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் பாபு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகே யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது.

    இந்த அலுவலகம் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. அடிக்கடி கட்டிட கூரைகள் இடிந்து விழுந்தன. பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.3.67 கோடி செலவில் 2 மாடிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடந்தது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சேவுகப் பெருமாள் முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் அர்ஜுனன், கணபதி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது.
    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் இருந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சரண்யா செந்தில்நாதனிடம் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். தற்போது காந்தி நகர் முதல் மற்றும் 2-வது வீதிகளில் சாக்கோட்டை யூனியன் தலைவர் நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமைதாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர்கள் செல்வி, செந்தில், கிளை செயலாளர்கள் ராமு, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

    ×