என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bison"

    • கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
    • தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

    மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    சம்பவத்தன்று மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை விட்டு விட்டு தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதேபோல் நேற்று மஞ்சூர் ஊட்டி சாலையில் நுந்தளா மட்டம் பகுதியில் 3 காட்டெருமைகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்தனர்.

    மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி லுக் சர்ச் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2 காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. திடீரென 2 காட்டெருமைகளும் சண்டையிட்டு கொண்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது எனவும், நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் வனவிலங்குகள் தானாகவே சென்றுவிடும் என அறிவுரை கூறினர்.

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
    • நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் அனைத்தும் தற்போது வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கக்கூடிய நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜான் ஸ்கொயர் சத்யா பர்னிச்சர் பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்றனர்.இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • மணியக்காவை காட்டெருமை ஒன்று திடீரென முட்டி தள்ளியது
    • வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள உல்லத்தட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணியக்கா (வயது50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் மணியக்கா நேற்று காலை தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை தனது கொம்புகளால் முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். தொடர்ந்து காட்டெருமையை விரட்டிவிட்டு காயமடைந்த மணியக்காவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமை தாக்குதலில் படுகாயமடைந்த மணியக்காவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பாடந்துறை மற்றும் தேவர் சோலை பேரூராட்சி கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே கிராமங்களில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்
    • இதுவரை ஒருவர் பலி, பலர் காயம், பஸ்சும் சேதம்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப் பாறையை அடுத்த புத்தா–நத்தம் அருகே உள்ள கருப்ப–ரெட்டியபட்டி வனப்பகுதி, கண்ணூத்து, பண்ணபட்டி, துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் தற்போது காட் டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய குடிநீரின்றி கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

    காட்டெருமைகளால் பலரும் விவசாயத்தை விட்டு வெளியில் சென்று இருப்பதையும் மறுக்க முடி–யாது. விவசாயம் செய்த பலரும் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் விளை–நிலங்கள் நாசமாகி இன்னும் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.வனத்துறையினர் சார் பில் நடைபெறும் விவசாயி–கள் குறை தீர்க்கும் கூட்டத் தில் விவசாயிகள் சார்பில் வைக்கப்படுகின்ற முதல் கோரிக்கையே காட்டெருமை–களால் அடையும் சேதத்தை தவிர்க்க காட்டெருமைகள் கிராமப் பகுதிகளில் நோக்கி வருவதை தவிர்த்தி–டும் வகை–யில் நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது–தான்.

    வனப்பகுதி–களில் தண் ணீர் தொட்டி அமைத்து காட்டெருமைகள் சாலை–களை நோக்கி வரு–வதை தடுத்திட வேண்டும் என்பதுதான். ஆனால் அவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக மட்டுமே இருக்கிறது.இதற்கிடையேதான கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தெத்தூர் மலையாண்டி கோவில் பட்டியை சேர்ந்த சிவஞா–னம் (வயது 46) என்பவர் தனது மோட்டார் சைக்கி–ளில் புதுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக சாலையை கடந்த காட்டெருமைகளில் ஒன்று அவரை முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த இரண்டு நாட்க–ளுக்கு முன் காடபிச்சம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது துவரங்குறிச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை காட்டெருமை முட்டியதில் காயம் அடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதே–போல் மேலும் இருவர் இரு வேறு இடங்களில் காட்டெருமை முட்டியதில் சிலர் காயமடைந்தனர்.

    இப்படியாக வனப்பகு–தியை விட்டு காட்டெருமை–கள் சாலையை நோக்கி வருவதால் வாகனங்களில் செல்வோர் துயரத்தை சந் திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் அரசு பஸ் ஒன்று சேதமடைந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கிராமப் பகுதிக்குள் வலம் வந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களில் இதுவரை இல்லாத அளவு காட்டெருமைகளால் பலரும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஒருபுறம், வாகனங்களும் சேதமடையும் சம்பவம் மறுபுறமும் அரங்கேறி வரு–கிறது. தொடர் பாதிப்பு–கள் எல்லாம் ஒருபுறம் இருந் தாலும் கூட தண்ணீர் தேடி வரும் காட்டெருமைகள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.சமீபத்தில் கருமலை அருகே தண்ணீர் தேடி மக்கள் குடிநீரை பயன்ப–டுத்தும் குளத்திற்கு வந்த காட்டெருமை ஒன்று தண் ணீரில் இறந்து கிடந்தது. காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் கன்று குட்டியும் இருந்தது தெரிய வந்தது.

    மக்களுக்கான பாதிப்பு ஒருபுறம், காட்டெருமை–களின் இறப்பு மறுபுறம் என நீடித்து வரும் இந்த நிலையில் வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தந்திட வேண்டும், அதன் மூலம் வனத்தை விட்டு நகர் பகுதிக்கு வரும் நிலையை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்க–ளின் ஒட்டுமொத்த கோரிக் கையாக உள்ளது.


    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்ெடருமை விடப்பட்டது
    • தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவு காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவு காணப்படுகிறது.

    இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அடிக்கடி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது.

    அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டெருமை கன்று ஒன்று வழி தவறி வேறு ஒரு பகுதிக்கும் காட்டு எருமை கூட்டம் வேறு ஒரு பகுதிக்கும் சென்று விட்டது.

    மீண்டும் தாயுடன் சேர முடியாமல் இருந்த அந்த காட்டெருமை கன்று அங்கும், இங்குமாய் சுற்றி வந்தது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வன சரக வனக்கப்பாளர் சிவாவுக்கு தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் வனவர் விவேகானந்தன், வேட்டை தடுப்பு காவலர் பொன்னமலை, மனித விலங்கு மோதல் காவலர் இன்பரசு ஆகியோர் அந்த காட்டெருமை கன்று இருந்த பகுதிக்கு வந்தனர்.

    சுற்று வட்டாரத்தில் ஏதேனும் காட்டெருமை கூட்டம் உள்ளதா என்று ஆராய்ந்தனர். பின் 2 மணி நேரத்திற்கு பிறகு ஒற்றை காட்டெருமை ஒன்று சத்தத்துடன் அங்குள்ள மற்றொரு தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர். கன்றும் துள்ளி குதித்து சென்று தாயுடன் சேர்ந்து கொண்டது.

    இதனை அங்கு குடியிருந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், வனத்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.
    • குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அரவேணு,

    காடுகளும் மலைகளும் சூழ்ந்து வனவிலங்கு கூடாரமாக விளங்குவது தான் நீலகிரி மாவட்டம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரடி, காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களை சில நேரங்களில் காட்டு யானைகள் வழிமறித்து வருகின்றன. அப்போது வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் சாலையோரம் மேயந்து கொண்டிருக்கின்றன.

    சில நேரங்களில் சாலைகளிலும் ஒய்வெடுக்கின்றன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

    எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

    இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

    சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

    குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன.
    • 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன.

    கோத்தகிரி

    கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் உலா வருகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து முகாமிட்டு உள்ளன. குறிப்பாக வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். இவ்வாறு உலா வரும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் அருகே சாலையோரம் காட்டெருமைகள் உலா வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    • வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏரா ளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்கு கள் குடிநீர், உணவை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை யோரம் வருவதும் ஊருக்குள் புகுந்து பயி ர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடு ஞ்சாலையில் சாலை யோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. காட்டெருமைகள் கூட்டத்தைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கீேழ இறங்கி ஆபத்தை உணராமல் தங்க ளது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து ரோந்து வந்த வனத்துறை யினர் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வனத்துறை யினர் கூறும் போது, காட்டெருமைகள் மாலை வேளையில் தண்ணீர் அருந்து வதற்கு குட்டை களுக்கு வருவது வழக்கமான ஒன்று தான். வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்து விட்டது.
    • வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம ஏற்காடு டவுன் பகுதிக்கு அருகில் உள்ள தனியா ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெ ருமை ஒன்று தவறி விழுந்து விட்டது. மேலே வர வழி யில்லாமல் தண்ணீரில் தத்தளித்து.இதை பார்த்த காப்பி தோட்ட பணியாளர்கள் வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, காட்டெருமை மேலே வர வழி ஏற்படுத்தினர். பின்னர் இதை பயன்படுத்தி காட்டெருமை மேலே வந்தது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    ×