என் மலர்
நீங்கள் தேடியது "book festival"
- விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.
மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.
- தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத்திருவிழா நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கே.ஜி.மஹாலில் நடைபெறுகிறது.
இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெய காந்தன் கூறியதாவது:
இளைய தலைமுறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 9-ம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் கே.ஜி. மஹாலில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாளை மாலை திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 17-ந் தேதி திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், 18-ந் தேதி கவாலியர் மதிவாணன், 19-ந் தேதி திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரி, 20-ந் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்ட பொது அறிவு திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயகாந்தன், வாணி தருமராசு, லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- விருதுநகர் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் ரூ.200-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம், அன்றைய இரவே சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
- ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில் ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமான புத்தங்களை வாங்கி செல்கின்றனர். இன்றுடன் விழா நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தகத் திருவிழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
- அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 19 வது திருப்பூர் புத்தக திருவிழா -2023 காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் வளாகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் பிப்ரவரி 5ந்தேதி வரை நடக்கிறது. இதனை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் திறந்து வைக்கின்றனர். பொது நூலக இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் வினீத், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், கமிஷனர் கிராந்திகுமார், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
தினமும் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும் கலை நிகழ்ச்சியில் 28ந் தேதி இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
29-ந்தேதி சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற தலைப்பில், எம்.பி., வெங்கடேசன், சுபஸ்ரீ தணிகாசலம் தமிழ் வளர்த்த திரை இசை நிகழ்ச்சி, 30ந் தேதி புத்தகம் எனும் போதிமரம் தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசுகின்றனர்.பிப்ரவரி 1-ந் தேதி எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், 2ந் தேதி அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.
3-ந் தேதி மரபு வழிப்பாதை தலைப்பில் டாக்டர் சிவராமன், 4ந்தேதி கீழடி சொல்வதென்ன? என்ற தலைப்பில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் வேலன் ஓட்டல் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது.விழாவில் திறனாய்வுப் போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் விழா நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 8-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
- புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிவகங்கை புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
- சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
புத்தகத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள், மாயாஜாலக் காட்சிகள் நடந்தன.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணை யாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. அதனை கருத்தில் கொண்டு, இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அந்த புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்க முன்வரலாம்.
தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூலகங்களை தத்தெடுத்தும், பல்வேறு வகையான புத்தகங்களை கிராம நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கு வழங்கியும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.
தன்னார்வலர்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தேவ கோட்டை செந்தில் மருத்து வமனை நிறுவன தலைவர் சிவக்குமார் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர்.
இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தாமாகவே முன்வந்து தங்களது பங்களிப்பையும் அளிக்கும் வகையில், இந்த புத்தக திருவிழாவின் மூலம் பல்வேறு நூல்களை நூல கங்களுக்கும், பள்ளி களுக்கும் வழங்கி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெறும் புத்தகத்திரு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது.
- 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
திருப்பூர் :
திருப்பூா் புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் போ் பாா்வையிட்டதுடன், ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை நடைபெற்று ள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்ப ட்டிருந்த 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
இதன் மூலமாக அரசின் திட்டங்கள், வங்கி, கல்வித் துறை சேவை, மருத்துவத் துறை, மகளிா் திட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
புத்தகத் திருவிழாவை திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதில், 40 ஆயிரம் மாணவ, மாணவி களும் அடங்குவா். இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூலகத்தின் சார்பில் 5-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா பற்றி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசி யம் பற்றி எடுத்துரைத்தார். தமிழாசிரியர் சிவகாமி முன்னிலை வகித்தார்.
நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி பற்றிக் கூறினார். அனைவரும் வாருங்கள் புத்தகத் திருவிழாவிற்கு, புத்தகம் படிப்போம் புது உலகு படைப்போம், நம்ம ராம்நாடு புத்தகத் திருவிழா, புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள் ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திக்கொண்டு அனை வரும் புத்தகத் திருவிழா வில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- கலெக்டர் அம்ரித் தலைமையில் புத்தக திருவிழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
- கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இப்புத்தக திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். கலை நிகழ்ச்சிக்கான கலையரங்கம், உணவரங்கம் போன்ற சிறப்பம்சங்களுடன் பல்வேறு சிந்தனையாளர்களின் சிந்தனை நிகழ்ச்சிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கை, விழா அழைப்பிதழ்கள், புத்தக அரங்குகள் தயார் நிலையில் வைத்தல், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தல், உணவகம், தற்காலிக ஆவின் பாலகம் ஏற்பாடு, பழங்குடியினர்களின் பொருட்கள் விற்பனை அரங்கம், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை தினந்தோறும் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத் சிங், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), பூஷணகுமார் (குன்னூர்), ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.