என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breast cancer"

    • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

    நெல்லை:

    பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

    பிங்க் மாதம்

    எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    கலந்துரையாடல்

    பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

    புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

    தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

    நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

    தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

    நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது
    • வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து, குறிப்பாக முதல் கட்டம், 2-வது கட்ட மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான ஆலோசனையும் மருந்துகளும் வழங்கினர். சுமார் 22 பெண்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள். வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மேக்ரோ காலேஜ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமையில் வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் வள்ளியூர் சென்ரல் ரோட்டரி சங்கத்தின் கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் டாக்டர் சங்கரன் அவர்களும் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலர் சுதிர்ந்தன், டாக்டர்கள் ஜேக்கப், ஜெய்கணேஷ், முன்னாள் தலைவர் பிரபா நவமணி, முன்னாள் தலைவர் வேல்முருகன், டாக்டர் தாமரைச்செல்வி கலந்து கொண்டனர். செயலர் சுகர்கந்தன் நன்றி கூறினார்.

    • கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார்.
    • பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருப்பூர் :

    ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், ஏ.வி.பி. பள்ளியின் இண்ட்ராக்ட் கிளப், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து ஹீல் திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவரும், ரோட்டரி மாவட்ட பயிற்றுனருமான கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், உதவி ஆளுனர் மெல்வின் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், ஹீல் திட்டத்தின் மண்டல செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் பி.லிட் லீலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முகாமில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

    குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

    அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

    • நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும்.

    பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.

    இந்த நோய் வருவதற்கு பரம்பரைதான் முக்கிய காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்குமானால், அந்த குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.

    சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்கு செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்து விடுகிறது. பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறி சுரந்து விட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும்.

    இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.

    குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.

    மார்பக தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பக காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

    • மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
    • மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.

    இந்தியாவில் மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் 18.1 சதவீதம் ஆகும். எனவே அரசு தொடர்ந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.

    இந்த சீரான பணியில் ஏதேனும் பிறழ்வுகள் ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த உயிரணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களை தாக்குகிறது. மேலும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன.

    இது புற்றுநோய் கட்டிகளாக மாறுகின்றன. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்கும் இடத்தில் வருகிறது. இத்தகைய புற்றுநோய் கட்டிகள் வலியே இல்லாமல் வளரக்கூடியது. இந்த கட்டி சிறிது, சிறிதாக வளர்ந்து கோலிக்குண்டு அளவுக்கு வந்து விடக்கூடியது.

    மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நம் வீட்டில் உள்ள தாய், மனைவி, மகள் என ஒவ்வொரு பெண்மணியும் முக்கியமானவர்கள். அவர்கள் வீட்டை பொறுப்புடன் நிர்வகிப்பவர்கள். அவர்களுக்கு ஒரு நோய் என ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்து விட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய் விடும். எனவே விழிப்புணர்வுடன் இருந்தால் மார்பக புற்றுநோயை பெண்கள் எளிதில் வெல்லலாம்.

    பெண்கள் தங்கள் மார்பகத்தை அவர்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு சோதனை செய்ய வேண்டும் என்றில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறையோ, ஒரு மாதத்துக்கு ஒருமுறையோ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது மார்பகத்தை தொட்டுப்பாருங்கள். இடது மார்பகத்தை வலது கையாலும், வலது மார்பகத்தை இடது கையாலும் சோதித்து பாருங்கள். குளிக்கும்போது அந்த நீரோடு தொட்டு பார்க்கும்போது எந்த கட்டி இருந்தாலும் தெரிந்து விடும்.

    வழக்கமாக இருப்பதை விட ஏதாவது கட்டி மாதிரி தெரிந்தாலோ, நரம்பு சுருண்டு இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ உஷாராகி விட வேண்டும். சிறிய கட்டி தானே, வலி ஒன்றுமே இல்லையே என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. வலி இல்லாத கட்டி 2 வகையை கொண்டது. ஒன்று மார்பக புற்றுநோய் கட்டி, மற்றொன்று மார்பக நார்த்திசுக் கட்டி (Fibroadenoma) எனப்படும் சாதாரண கட்டி. இதில் எந்தவகையான கட்டி உடலில் உள்ளது என்பதை நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள் தான் பரிசோதித்து உறுதி செய்வர்.

    சில பெண்கள் மார்பகத்தில் வரும் கட்டி பெரிதான பிறகே மருத்துவரிடம் ஓடுகிறார்கள். இந்த கட்டி பற்றி அவர்கள் தனது கணவரிடம் கூட தெரிவித்து இருக்க மாட்டார்கள். மருத்துவரிடம் சென்றதும் அவர் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் என கேட்பார். பெண்ணின் கணவரையும் கண்டிப்பார். பெண்கள் தங்கள் மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.

    மருத்துவர் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட சில பரிசோதனைகளை எடுத்து பார்ப்பார். மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டி தான் என்று தெரியவந்தால் கட்டி உள்ள மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்பார். கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும். கீமோ தெரபி கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு உங்களது அலட்சியம் தான் முழுக்க முழுக்க காரணம் ஆகும். உங்கள் உடலை பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

    எனவே மார்பகத்தில் சிறிய கட்டி வந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இப்போது ஏராளமான சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக போய் பார்க்க வேண்டும்.

    தொண்டை கமறல் உள்ளது, இருமல் இருக்கிறது என்றவுடன் தனக்கு கொரோனாவாக இருக்குமோ என அச்சப்பட்டு சோதிக்கச் சொல்லும் பெண்கள், மார்பக பிரச்சினைக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். எனக்கு தெரிந்து தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் வருகிறது. அதில் 50 ஆயிரம் பேர் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே வருகிறார்கள். அவர்களுக்கு ரேடியேசன் சிகிச்சை கொடுக்க வேண்டும். மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம் தேவையா? என்பதை எண்ணிப்பாருங்கள். ஆரம்பத்திலேயே புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். எனவே பெண்களே அதிஜாக்கிரதையாக இருங்கள்.

    தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
    • தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோட்டை வரை பேரணி நடந்தது.

    இதில் மார்பக ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். 

    வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

    வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

    ஊர்வலத்திற்கு ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது மருத்துவர்கள் கூறியதாவது:-

    மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.

    உணவுமுறை, உடல் செயல்பாடு மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மேலும், தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் போன்றவை பெரும் பிரச்சினையாக உள்ளது.

    இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக இதன் ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது மிகவும் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை மற்றும் சுகாதார நெருக்கடியை குறிக்கிறது. மேலும் சமூக, சுகாதார நிபுணர்களின் நடவடிக்கைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.

    நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சி.எம்.சி ஊழியர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் மேலாண்மை குழுவின் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்று மார்பக புற்றுநோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    • பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று
    • இதுநாள் வரை நோய்க்கான சிகிச்சைமுறையில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று கேன்சர் (cancer) எனப்படும் புற்று நோய்.

    ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.

    இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.

    புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்" என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்தார்.

    • உறுப்புகளை பாதிக்க செய்து மரணத்திற்கு வித்திடுகிறது.
    • இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

    புற்றுநோய் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கச்செய்து மரணத்திற்கு வித்திடுகிறது. உலகெங்கும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங் களும்தான் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. புற்றுநோய் அபாயத்தை குறைப்பது குறித்தும், தடுப்பது பற்றியும் ஆராய்வதற்கு உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியமும், அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 2018-ம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 94 ஆயிரத்து 778 பேரிடம் இருந்து தகவல்களை திரட்டியது. அவர்களின் உடல் எடை, உயரம், இடுப்பு சுற்றளவு, உணவுப்பழக்கம், உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கியது.

    தினமும் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு, அதனை அவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கணக்கிட்டு அந்த மதிப்பெண்கள் மதிப்பிடப்பட்டன. முழுமையாக கடைப்பிடித்தவர்களுக்கு ஒரு புள்ளியும், பாதியளவு கடைப்பிடித்தவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்பட்டன. சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    ஆய்வின் முடிவில் 7,296 பேர் அதாவது 8 சதவீதம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது கண்டறியப்பட்டது. அதில் அதிகம் பேர் மார்பகம், பரோஸ்டேட், பெருங்குடல் புற்று நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஆய்வுக்குழுவினர் கூறிய பரிந்துரைகளை முறையாக பின்பற்றாததுதான் இதற்கு காரணம்.

    4.5 முதல் 7 புள்ளிகள் வரை பெற்றவர்களுக்கு 3.5 புள்ளிகளை பெற்றவர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவு என்பதை கண்டறிந்துள்ளனர். அதேபோல் 3.75 முதல் 4.25 புள்ளிகளுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் 8 சதவீதம் குறைவாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பும் அனைத்து புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை7 சதவீதம் குறைக்கிறது. அதிலும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. சிறுநீரகம், உணவுக்குழாய், கருப்பை, கல்லீரல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கான ஆபத்துக்களும் குறைகிறது என்ற முடிவுக்கு ஆய்வு குழுவினர் வந்துள்ளனர்.

    உடல் எடையை சீராக பராமரித்து ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பின்னணியில் உடல் பருமன் புற்றுநோய்க்கு காரணமாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடல் ரீதியாக சுறு சுறுப்பாக இயங்க வேண்டும் என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு களை தவிர்ப்பது, சிவப்பு இறைச்சி வகைகளை வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் உண்ணாமல் இருப்பது, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது, அதிக சூரிய ஒளி உடலில் படுவதை தவிர்ப்பது போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதற்கு ஆய்வுக்குழுவினர் 7 பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அவற்றை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் வருவதை குறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இதுதொடர்பான விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். அவர்கள் பரிந் துரைத்த 7 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    உடல் எடையை சீராக பராமரியுங்கள்.

    உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

    சிறந்த, சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

    அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், பானங்களை தவிருங்கள்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகளை குறைவாக உட்கொள்ளுங்கள்.

    சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் பருகாதீர்கள்.

    மது அருந்தாதீர்கள்.

    • அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர்.
    • நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர். நம் உடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தொடர்புடையது. என்னதான் நாம் சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டால் அந்த நோய் வயதிற்கான நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படலாம். இதனைத் தவிர்த்துக் கொள்ள 30 வயதை கடந்த பெண்கள் கீழ்காணும் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

     நீரிழிவு நோய் பரிசோதனை:

    நீரிழிவு நோய் என்பது இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. மாறிவரும் நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கிறது. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும் இந்த நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது. எனவே முப்பது வயதை கடந்து விட்டால் ரத்த குளுக்கோஸ் பரிசோதனை மற்றும் ஹெச்ஏஒன்சி ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.

     புற்றுநோய் பரிசோதனை:

    30 வயதை கடந்த பெண்களை தாக்கக்கூடிய மற்றொரு நோய் கர்ப்பப்பை புற்று நோயாகும். இந்த நோய் வரும் முன்பே கண்டறிவதற்கு பாப் ஸ்மியர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருக்கும் பெண்கள் கட்டாயம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொள்வது இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வழிவகுக்கும்.

     இதயநோய் பரிசோதனை:

    இதய நோய் என்பது இன்று எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே 30 வயதை கடந்து விட்டால் நம்முடைய ரத்த அழுத்தம், ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை ஒரு வருடங்களுக்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோய்:

    30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாக்கும் அபாயகரமான நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். 30 வயதை கடந்து விட்டால் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான மேமோகிராபி பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

    • நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது.
    • புற்றுநோயால் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.

    `நதியின் வழியே நீரின் பயணம் என்பது போல், விதியின் வழியே வாழ்க்கை பயணம்' என்றார் ஓர் அறிஞர். மலையில் இருந்து கடலை நோக்கி பாய்ந்தோடும் நதிநீர் எண்ணிலடங்கா துளிகளை உள்ளடக்கியது. இதில் எல்லா துளிகளுமே கடலை சென்றடைவதில்லை. கணிசமான நீர் பயிர்களுக்கு பாய்கிறது; குடிநீராக பயன்படுகிறது, தொழிற்சாலைகளுக்கு உபயோகமாகிறது. கொஞ்சம் ஆவியாகவும் செய்கிறது. மீதமுள்ள துளிகள் மட்டுமே தனது முழு பயணத்தையும் நிறைவு செய்து கடலை சென்று அடைகின்றன.

    இதுபோல்தான் மனித வாழ்க்கையும். மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைப்பது போல் எல்லாமே நடந்து விடுவதில்லை. நோய்நொடிகள், எதிர்பாராத விபத்துகள் மட்டுமின்றி மழை-வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களும் மனித வாழ்க்கையை திசைதிருப்பி விடுகின்றன.

    உலக நாடுகளில் எந்த அளவுக்கு பொருளாதார மற்றும் சுகாதார வசதிகள் பெருகி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

    இயற்கை மரணங்களை விட நோய்களால் நிகழும் மரணங்கள்தான் அதிகம். நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது. இதயநோயால்தான் அதிகம் பேர் இறப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் புற்றுநோய் (கேன்சர்) இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ''இனி அவன் பிழைப்பது கடினம்'' என்று கைவிரித்துவிட, ''கங்கையில் நீராடினால் நோய் குணமாகலாம்'' என்று யாரோ சொன்னதை கேட்டு, கடைசி நம்பிக்கையாக பெற்றோர் அவனை ஹரித்துவார் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்கு கங்கையில் அவனை மீண்டும் மீண்டும் மூழ்கச் செய்து குளிக்க வைத்ததில் அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனான்.

    புற்றுநோயுடன் தொடர்ந்து போராடினால் கூட அவன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்து இருக்கக்கூடும். என்ன செய்ய?...விதி முன்கூட்டியே அவன் வாழ்வில் விளையாடிவிட்டது.

    இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரிணியின் (இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள்) அகால மரணமும் ஈடுசெய்ய இயலாதது.

    விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.

    புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந்தேதி (இன்று) உலகம் முழுவதும் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    ×