என் மலர்
நீங்கள் தேடியது "bribe case"
- உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
- அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

நிர்மல் யாதவ்
அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதன நகரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 53). இவர் திருத்தணி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து மினி பஸ் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அதற்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் தகுதி (சால்வன்சி) சான்றிதழ் வாங்கி வரும்படி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதால் துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் (62) லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் துளசிராமன் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார். அவரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கிய தாசில்தார் திலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி வேலரஸ் தீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் திலகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனராக இருப்பவர் தமிழரசு (வயது 55). அதே கோவிலில் தலைமை எழுத்தராக பணி புரிபவர் வன்னியர் திலகம் (48).
கடந்த 15-ந் தேதி கோவில் அறையில் காண்டிராக்டர் லஞ்சமாக வைத்த பணத்தை தமிழரசு எடுத்தபோது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி மற்றும் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அதில் ஒரு கவரில் தமிழரசு என எழுதி 60 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கவரில் வன்னிய திலகம் என்று எழுதி 10 ஆயிரம் ரூபாயும் இருந்தது.
இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது கணக்கில் வராத பணம் என்பதை உறுதி செய்தனர். மேலும் நூதன முறையில் கோவில் அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக டேபிளில் கொண்டு வைத்த 2 பேர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் திருப்பணி தற்போது நடைபெறுவதால் அந்த கோவில் கட்டுமான பணிகளை காண்டிராக் எடுத்த நபர்கள் இந்த பணத்தை லஞ்சமாக மேஜை டிராயரில் கொண்டு வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பினர்.
இதற்கிடையே தமிழரசு மற்றும் வன்னியர் திலகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றதாக தமிழரசு மற்றும் வன்னிய திலகம் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுத்து விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:
வளசரவாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அய்யப்பன்.
அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்க துரையிடம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தங்கதுரை பலமுறை இன்ஸ்பெக்டரை சந்தித்து தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் என்ஜினீயரின் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி என்ஜினீயர் தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி இன்று காலை என்ஜினீயர் தங்கதுரையிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கைது செய்தனர்.
போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதால், அதை தடுக்க இ-செல்லான் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது நடைமுறையில் இருக்கும் வேளையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மனைவி நல்லம்மாள். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நல்லம்மாள் தலையில் காயம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக வேலை பார்த்த டாக்டர் ரமேஷ் பரிந்துரைக்க வேண்டுமாம்.
இதனால் ஜோதிராஜன், டாக்டர் ரமேசை அணுகினார். டாக்டர் ரமேஷ், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்கேன் பார்ப்பதற்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜோதிராஜன், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி ஜோதிராஜன், ரமேசிடம் ரூ.300-ஐ கொடுக்க சென்றார். ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையில் இருந்த டாக்டர் ரமேசிடம், ஜோதிராஜன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து ரமேசை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், லஞ்சம் பெற்ற அரசு டாக்டர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகள் வெண்ணிலா (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வெண்ணிலாவின் தந்தை காளியப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் கணவர் சவுந்தரும் கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனால் குழந்தைகளுடன் வெண்ணிலா சிரமப்பட்டு வந்தார். அவருக்கு அரசின் உதவிகள் பெற விதவை சான்றிதழ் தேவைப்பட்டது. இதற்காக அவர் தனக்கு விதவை சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த மார்ச் 12-ந் தேதி கலெக்டரிடம் மனு அளித்தார். அவரது மனு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து வெண்ணிலாவின் மனுவை கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பினார். அதனை பரிந்துரைத்து செங்கம் தாசில்தார் ரேணுகாவுக்கு வருவாய் ஆய்வாளர் அனுப்பினார்.
ஆனால் அவர் சான்றிதழ் வழங்காமல் காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெண்ணிலா தனது அக்காள் கணவர் கோபால கிருஷ்ணனுடன் தாசில்தாரை நேரில் சந்தித்து விதவை சான்றிதழ் வழங்க கேட்டுள்ளார்.
அப்போது தாசில்தார் ரேணுகா சரிவர பதில் அளிக்கவில்லை. பின்னர் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என தாசில்தார் ரேணுகா கேட்டுள்ளார்.
வெண்ணிலா லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து தன்னுடன் வந்த தனது அக்காளின் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் கூறவே அவர் அது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் செங்கம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு ஏற்கனவே திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் மறைந்திருந்தனர். கோபாலகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தார். கோபாலகிருஷ்ணன், தாசில்தார் ரேணுகாவிடம் அந்த ரூபாய் நோட்டுக்களை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேணுகாவை கையும் களவுமாக பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகம், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தது. பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் ரேணுகாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் ½ மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாசில்தார் ரேணுகாவை செங்கம் ராஜவீதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் மேலும் சோதனையிட்டனர். பின்னர் அவர் மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். அங்கு அவரது முன்னிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் ரேணுகாவை கைது செய்தனர். #TahsildarArrested