என் மலர்
நீங்கள் தேடியது "bus"
- புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது.
- 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-
தஞ்சாவூர் மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதும் பல கோடி மதிப்பிலான யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வர உள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-
மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலேயே நிரம்பி வழிகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏறும் பயணிகள் இடம் கிடைக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.
இதனால் பலர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது போல் பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப மையமாகக் கொண்டு கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும். இதேபோல் திருச்சிக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் மேத்தா: சதய விழாவை அரசு
விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டன் : ரூ.500-க்கு கீழ் வருமானம் உள்ள அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகளுக்கு பயன்படும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது . தஞ்சை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை மாநகரில் உள்ள சாந்திவனம், ராஜகோரி, மாரிகுளம் ஆகிய மூன்று சுடுகாட்டில் உடல்களை எரிக்க தனியார் அமைப்புக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.
இதற்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, சுடுகாட்டில் உடல்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று நான் பதவி ஏற்றவுடன் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினேன். கடந்த முறை உடல் தகனம் செய்ய பணம் வாங்கப்பட்டது. ஆனால் நான் மேயராக பதவி ஏற்றவுடன் முழுக்க முழுக்க இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவித்தேன். இந்தத் திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.
ஒருபோதும் முறைகேடு நடக்க விட மாட்டேன். ஒரு சுடுகாட்டுக்கு உடல்களை எரியூட்ட 27 டன் அளவுக்கு மரக்கட்டைகள், ரூ.12 ஆயிரம் வைக்கோல்கள் தேவைப்படுகிறது. மேலும் 2 உடலுக்கு 1 சிலிண்டர் எரியூட்ட தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அறியாமல் கவுன்சிலர் எந்த விதத்தில் பேசுகிறார் என தெரியவில்லை. இருந்தாலும் முழுக்க முழுக்க உடல்கள் இலவசமாக மட்டும்தான் தகனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். ஒருபோதும் முறேகேடு நடக்காது. மேலும் அம்மா உணவகம் மூடப்படாது என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர் கோபால் பேசும் போது : 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். தெற்கு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை சீரமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
யு.என்.கேசவன்: 30-வது வார்டு சவுராஷ்ட்ரா கீழ ராஜ வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து அங்கு வேலி கட்ட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஜெய் சதீஷ்: எனது வார்டில் ரூ.49 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தமிழ்வாணன் : மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் கிடையாது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை வைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து: சாலைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.
காந்திமதி : தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதிக்கு வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட் மற்றும் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சரவணன் : சீனிவாசபுரம் அகழிபாலத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மாடுகள் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகண்டன் : பொது இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.
ஸ்டெல்லா : கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.
இதற்கு மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கருவேப்புலாம்பட்டி கிராமத்திற்கு தினசரி பஸ் சேவை வழங்கப்படும் என்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- பணிமனை முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருவேப்புலாம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஊருக்கு காலை மற்றும் மாலை என 2 வேளையும் பஸ்கள் இயக்கப்படடது. காலை வரும் பேருந்தில் அதிக கூட்டம் இருப்பதால் நாள்தோறும் பள்ளி , கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் மக்கள் அதில் பயணிக்காக முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
மேலும் மாலை நேரத்தில் வரும் பேருந்து கடந்து சில நாட்களாக முறையாக இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இரவு நேரங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை பொன்னமராவதி பேருந்து பணிமனையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் முறையாக பேருந்து இயக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
- தற்போது இந்த இடம் சாலை உயர–மாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது.
- இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது.
பேராவூரணி:
பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் சாலையில் (முசிறி-சேதுபாவாசத்திரம்) மாசாகாடு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.
கடந்த 2013-14 ம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது இந்த இடம் சாலை உயரமாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையிலிருந்து மழை நீர் பஸ் நிறுத்ததிற்குள் புகுந்து விடுகிறது.
மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மதுஅருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது. மதுவை அருந்திவிட்டு பாட்டில்களையும், குப்பைகளையும் இந்த பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த இடம் சுகாதாரமற்றதாகவும், குப்பைகளுடனும் காணப்படுவதால் பஸ்சில் செல்ல வரும் பெண்கள், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு–வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீட்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும், போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ஆம்னி பஸ்சில் அழுகிய நிலையில் புரோக்கர் உடல் மீட்கப்பட்டது.
- பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
திருச்சி:
திருச்சி பறவைகள் சாலை பகுதியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இங்கு தினமும் பஸ்கள் நிறுத்தப்பட்டு பின்னர் வெளியூர் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் அந்த பஸ் கம்பெனியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பஸ் இயக்கப்படாமல் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்று சரி செய்யலாம் என்று அந்த பஸ் கம்பெனியின் ஊழியர்கள் பஸ்சை எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்பொழுது பஸ் கதவை திறந்த பொழுது பஸ்சிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு 44 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக திருச்சி கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அழுகிய நிலையில் பஸ்சில் இறந்த நபர் வடிவேல் (வயது 44) இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் கடந்த பல வருட காலமாக திருச்சியில் பல்வேறு இடங்களில் தங்கி ஆம்னி பஸ் புரோக்கராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் இவர் அடிக்கடி இங்கு வந்து பஸ்சில் ஏறி படுத்துவிட்டு காலை நேரத்தில் எழுந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலை சில நாட்களுக்கு முன்பு இரவில் பஸ்சில் படுத்திருந்த போது மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை யடுத்து வடிவேல உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்சில் புரோக்கர் ஒருவர் அழகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவு.
- இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட கணிக்கமுடியவில்லை.
இந்தநிலையில் எதிரெதிர் திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்.பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் சில பகுதிகள் தற்போது அடர்ந்த பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சிந்து நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்ற நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அறிவுறுத்தி உள்ளது.
- ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
- அரியலூருக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரின் வழியாக ஓடும் மருதையாற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் மருதையாற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. அந்த பாலம் முன்பு மழையால் அடித்து செல்லப்பட்டதில் பலர் இறந்தனர். அவர்களின் நினைவாக ஒரு நினைவு தூண் அமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரியலூருக்கு காலையில் செல்ல கூடுதல் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- பெத்துபட்டியிலிருந்து சின்ன சேலம் வழியாக துறையூர் வரையிலான வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை துவக்கி வைத்தார்
- பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தனர்
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியை சேர்ந்த வைகறை, கங்காணிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக தங்கள் பகுதிக்கு பஸ் வசதியினை ஏற்பாடு செய்து தரக் கோரி துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ. பொதுமக்களின் வேண்டுகோளின் படி காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் துறையூரிலிருந்து கலிங்கமுடையான்பட்டி, மெய்யம்பட்டி வழியாக கங்காணிப்பட்டி வரையிலான புதிய பேருந்து வசதியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஷ்டம்ஸ் மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கிளைச் செயலாளர் முத்துசாமி, இளைஞர் அணி அருண், தொ.மு. சங்கத்தை சேர்ந்த சுப்பையா, ராஜூ மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதே போன்று பெத்துபட்டியிலிருந்து சின்ன சேலம் வழியாக துறையூர் வரையிலான வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.
இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.
பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17,18 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.–ராஜ் மோகன் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட். பொது–மக்கள் எளி–தாக, எவ்வித சிரமமும், இடை–யூறும் இன்றி, பயணம் செய்ய ஏது–வாக சிறப்பு பேருந்து–களை இயக்குகிறது.
அதன்படி சென்னையிலி–ருந்து கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங் கண்ணி, மயிலாடு–துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் 12.01.2023, 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்க–ளுக்கும் மற்றும் கும்பகோ–ணம் போக்குவரத்துக்கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரை–யும், அனைத்து முக்கிய நகரங்க–ளிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொது–மக்கள் எளிதாக பய–ணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரிய–லூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத் துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலை–வர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 மற்றும் 18.01.2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ப–தையும் மகிழ்வுடன் தெரி–வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
- சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டத்தால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
- போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா இன்று ெதாடங்கிவைத்தார்
திருச்சி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி கும்பகோணம் அரசு போக்கு–வரத்து கழகம் சார்பில் இன்று சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பஸ்களும் நாளைய தினம் 400 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதி–காரி தெரிவித்தார். நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற காரணத் தினால் இன்று மாலை முதல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கூட்டம் அலை–மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் மக்கள் மாலை முதல் விடிய விடிய வருவார்கள். ஆகவே சிறப்பு பஸ்களும் விடிய, விடிய பயணிகள் வருகைக்கு ஏற்ப இயக்கப்படும் என போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரி–வித்தார். நாளைய தினம் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருவார்கள் அவர்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடி மற்றும் சிரமமின்றி சென்று வருவதற்கு வசதிக்காக திருச்சியில் 2 இடங்களில் அதாவது மன்னார்புரம், வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா தியேட்டர் அருகி–லும் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார்பு–ரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய–பிரியா இன்று கொடி–யசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:- மதுரை, புதுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது 17-ந்தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க–வும், பயணிகளின் வசதிக் கா–கவும், அவர்கள் மகிழ்ச்சி–யுடன் பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கள் ஊர்களுக்கு செல்ல–வும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுனர்கள், நடத்து–னர்களுக்கு கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம். அதே நேரத் தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும்.
பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி–யுள்ளோம். பொங்கல் சிறப்பு பாது–காப்பு பணியில் கூடுத–லாக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களி–டம் உள்ளது. அந்த குறிப் பிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படா–மல் தவிர்க்க அந்த இடங்களில் கூடுதல் பாது–காப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை–கள் செய்யப் பட்டுள்ளது. மேலும் வாகன போக்கு–வரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், காலை, மாலை வேளைக–ளில் நகரில் போக்கு–வரத்து நெரிசல் ஏற்படு–வது உண்மைதான். அதற்காக அருகில் உள்ள நடைபாலத்தை திறப்பது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.