என் மலர்
நீங்கள் தேடியது "Campaign"
- முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
- ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.
காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
- குஜராத் சட்டசபையின் முதற்கட்ட தேர்தலில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
- ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதி ( வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
2ம் கட்டமாக நாளை மறுநாள் (5ம் தேதி) மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியாமை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ரோடு-ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொண்டார்.
இதேபோல் காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மூத்த தலைவர்கள் உச்ச கட்ட பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும். டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.
வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கட்டிலில் உள்ளது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இம்முறை 7வது தடவையாக அக்கட்சி வெற்றி வாகை சூடுமா? என இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று கம்யூனிஸ்டு கட்சி சாதனை படைத்தது. இதனை சமமாக்கும் விதத்தில் குஜராத்தில் பாஜக சாதனை படைக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
- எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ''நம் நலம் நம் செல்வம்'' என்ற தலைப்பில் செல்வ சுருதி கலைக்குழுவினரின் எய்ட்ஸ் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சமூக ஆர்வலர் ரஹ்மத் ஜவஹர் அலிகான், சுகாதார அமைப்பை சேர்ந்த ராஜா, கோட்டையம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம், பாட்டு, கரகாட்டம், மேளக்கச்சேரி ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தா.பழூர் போலீசார் சார்பில் நடந்தது
- போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் தா.பழூர் போலீசார் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமை தாங்கி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்தும், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல், வாங்கி பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விலக்கி பேசினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், (பயிற்சி)பெபின்செல்வபிரிட்டோ உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்."
- கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நாம் தமிழர் கட்சியினர் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது நூதனமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதாவது ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது அக்கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
அந்த ரூபாய் நோட்டு பிரசுரத்தில் மகாத்மா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சீமான் படங்கள் இடம் பெற்றுள்ளன. லஞ்சம் தவிர், லஞ்சம் தராமல் நெஞ்சம் நிமிர் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
- சி.ஐ.டி.யூ. சார்பில் புது பஸ் ஸ்டாண்டு அருகே நடைபெற்றது
- பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், பொது த்துறைகளை பாதுகா க்கவும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.பின்னர் குரும்பலூர், அம்மா பாளையம், நக்க சேலம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்கா நத்தம், சிறுவாச்சூர், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரம் இன்றும் நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ரெங்கராஜ், ஆறுமுகம். இன்பராஜ், பாபு, செல்லதுரை, கருணாநிதி, அருண், விவசாயி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செ ல்வராஜ், அர்ச்சுனன், விவசாயிகள் சங்க நிர்வா கிகள் கோவிந்தன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஊட்டி,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ''அரசு பள்ளி களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நகராட்சியில் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் உள்ளன.
நீலகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. ஊட்டி ஏ.டி.சி பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சர்வ சிக்ச அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜூனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு வாகனம் இம்மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விழிப்புணர்வு வாகனம் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அரசு பள்ளிகளில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொள் ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளை யாட்டுப்போட்டிகள், வானவில் மன்ற போட்டி கள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1000 கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படும்.இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதே ஆகும். எனவே பொதுமக்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்துபயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் ஊட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் எழிலரசன், விஜயராஜ், ஜமுனா ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ஜெகதீஸ்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வியின் மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும்.
- பூதலூரில் பிரச்சார வாகனம் மேற்கொள்ளப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் பிரச்சார வாகனம் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரச்சார பணிகளில் ஈடுபடும். திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்று, நன்றி கூறினார்.
இதேபோல பூதலூரில் பிரச்சார வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டது.
- பிரதமர் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
- தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.
இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் அடங்குவர்.
சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் பொது வாக்காளர்கள் ஆவர். 47 ஆயிரத்து 488 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். வருகிற 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.
கர்நாடக தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பா.ஜ.க.வை பொருத்தவரை பிரதமர் மோடி 7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இருப்பார் மற்றும் கபு மற்றும் உடுப்பி நகரத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அவர் ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள்.
பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறற்றது. அதன்பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
- மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை போலீசார்கள், பெண்கள் அதிகம் கூடி நிற்கும் பஸ் நிறுத்தங்களுக்கு சென்று, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர்.
அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். உதாரணமாக பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம். பொதுவான அழைப்புகளுக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதியோர்களுக்கு இது ஏதும் பிரச்சினை என்றால் 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பெண்கள் அனைவரும் விரும்பி கவனித்தனர்.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
கவுண்டம்பாளையம்,
கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
- போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாரா யத்திற்கு எதிரான விழிப் புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவி கள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட் களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஊர் வலம் நடைபெற்றது.