என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery"

    • மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
    • பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

    பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

    தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • கரூருக்கு காவிரி ரத யாத்திரை குழுவினர் வருகை தந்தது
    • பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர்

    கரூர்:

    நதியில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை நடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த, மாதம் 21ல் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரியில் இருந்து இந்த குழுவினர் காவிரி ரத யாத்திரையை தொடங்கினர்.

    இந்நிலையில் நேற்று காலை கரூர் வடிவேல் நகர் முனியப்பன் கோவில் பகுதிக்கு ரத யாத்திரை குழுவினர் வந்தனர். அவர்களை, அனைத்திந்திய இந்து திரு கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, கரூர் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவிலில், காவிரி ரத யாத்திரை குழுவினர், மகேஸ் வர பூஜை நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். இக்குழுவினர் இரண்டாம் நாளாக 

    • காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
    • இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    திருவையாறு:

    அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.

    இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.

    காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.
    • காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

    காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும். காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    • காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    புதுச்சேரி:

    டெல்டா மாவட்ட விவசாயிகளூக்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்நிலையில், காரைக்கால் வந்த தண்ணீரை, விவசாயிகள் பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, நேற்று காலை நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இருந்து பாசத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமையில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் பாசனதார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ சிவா கூறியதாவது:-இந்த பாசன நீரானது காரைக்கால் மாவட்டத்தில் 5000 ஹெக்டேர் அளவிற்கு பாசன வசதி பெரும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு குறித்த நீர் கிடைக்கும். இதற்காக பாடுபட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    • மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. போதியளவு ஆற்றுப்பாசனம் வசதி கிடையாது. மழைக்காலங்களில் தான் அந்த ஆற்றுப்பாசனமும் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறும் கிடையாது. ஆனாலும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், நிலக்கடலை, கரும்பு முதலியவை விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும்.

    தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது.

    கோடை காலத்தில் இருந்த வெயிலின் தாக்கத்தை விட தற்போது கடந்த சில நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்டமான பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் அதாள பள்ளத்துக்கு சென்று விட்டன. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய கிணறுகளில் தண்ணீர் அடியில் சென்று விட்டது. குறிப்பாக மலையடிவாரங்களில் உள்ள விவசாய கிணற்றுகளில் தண்ணீர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சில விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி சென்றால் விவசாயிகள் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி ஆற்றுப்பாசனம் கொண்டு வந்தால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும். திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து காவரி நீரை கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன்:-

    திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வரப்படும் காவிரி நீரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நிரப்பி ஏற்கனவே உள்ள பாசன வாய்க்கால்கள் மூலம் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

    தமிழ்நாடு கிணற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாரயணசாமி:- திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் மார்க்கமாக கீராம்பூர் ஏரி அல்லது பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் வழியாக காவிரி நீரை கால்வாய் மூலம் களரம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டால் லாடபுரம் 2 ஏரிகளும், அதனை தொடர்ந்து குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கியம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, சிறிய ஏரி வரை காவிரி நீரை கொண்டு செல்ல வாய்க்கால் வசதி இருக்கிறது. பின்னர் காவிரி நீர் மருதையாற்றில் கலந்து விடும். சாத்திய கூறுகள் இருந்தால் களரம்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். அல்லது லாடபுரம் ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்லலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரு தனியார் டயர் தொழிற்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட மக்களுக்கு எப்போதும் விவசாயம் தான் கைகொடுக்கும். பெரும்பாலும் கிணற்று பாசனம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வந்தால் விவசாயம் இன்னும் வளர்ச்சி அடையும். வீணாக கடலுக்கு போகிற போது தான் காவிரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டால் ஏற்கனவே காவிரி நீர் பாசனம் பெறும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    ஆலத்தூர் தாலுகா, நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி பாபநாசன்:- காவிரி ஆற்றின் நீரை கால்வாய் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் மட்டமும் உயரும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படாது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை செலவாகலாம். இதை மாநில அரசு அல்லது மத்திய அரசு செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே மேட்டூர் அணையின் உபரி நீரான காவிரி நீரை இணைப்பு கால்வாய் துறையூர், தா.பேட்டை வரை உள்ள ஏரிகளில் தேக்கி விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் விதமாக சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆறுகளை இணைத்து கீராம்பூர் ஏரி வரை நீர் வழங்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தையும் இணைத்தால் எளிதாக காவிரி நீரை கொண்டு வந்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லை என்று கூறி, சில நீர் நிலைகளில் தான் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பெரிய நிதி தேவைப்படும். இந்த திட்டம் கொண்டு வர சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்று முதலில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சாத்திய கூறுகள் இருந்தால் நிதி ஒதுக்கி விரைந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • திருச்சி சிந்தாமணி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய காவிரி கரையில் இறந்து கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    திருச்சி  

    திருச்சி,மேல சிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குளித்து வருகின்றனர்.

    கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது.

    இதற்கிடையே இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்றின் கரையோரம் சுமார் ஒன்றரை நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று கிழிந்த ஒரு வலையில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது.

    அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளதாக

    அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் மறைந்த வசிக்கும் முதலைகள் குட்டிகளை ஈன்றிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் முதலைகள் நடமாட்டம் இருக்கும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×