என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chain"

    • காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர்.
    • அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
    • பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சாமிநாயக்கன்

    பட்டி அடிக்காரை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி விஜயா (வயது 47). இவர் சம்ப வத்தன்று சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வேறு பகுதிக்கு செல்வ தற்காக பேருந்து நிலை யத்தில் காத்திருந்தபோது, பையில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி
    • இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    சேலம்:

    ரெயில்–களில் பய–ணி–க–ளின் அவ–சர தேவைக்–காக பயன்–ப–டுத்த அபாய சங்–கிலி பொருத்–தப்–பட்–டு உள்–ளது. இந்த அபாய சங்–கி–லியை சிலர் தேவை–யில்–லா–மல் இழுத்து ரெயிலை நிறுத்தி விடு–கின்–ற–னர். இத–னால் ரெயில் நடு–வ–ழி–யில் நிறுத்–தப்–பட்டு பய–ணி–கள் குறிப்–பிட்ட நேரத்–திற்கு செல்ல முடி–யாத நிலை ஏற்–ப–டு–கிறது.

    இது போன்ற சம்–ப–வங்–களை கட்–டுப்–ப–டுத்–தும் வகை–யில் ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் ரெயில்–களில் கண்–கா–ணித்து வரு–கின்–ற–னர். மேலும் ரெயில்–களில் தேவை இல்–லா–மல் அபாய சங்–கி–லியை இழுப்–ப–வர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–யப்–பட்டு வரு–கின்–ற–னர்.

    அதன்–படி சேலம் கோட்–டத்–திற்கு உட்–பட்ட பகு–தி–களில் கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    இது –கு–றித்து ரெயில்வே பாது–காப்பு படை போலீ–சார் கூறும்போது, ' கடந்த நிதி–யாண்–டில் மட்–டும் தேவை–யில்–லா–மல் ரெயி–லின் அபாய சங்–கி–லியை இழுத்து ரெயில்–களை நடு–வ–ழி–யில் 23 பேர் நிறுத்தி உள்–ள–னர். அவர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–துள்–ளோம். எனவே ரெயி–லில் தேவை–யில்–லா–மல் பய–ணி–கள் அபாய சங்–கி–லியை இழுக்–கா–மல் ரெயில்வே துறைக்கு ஒத்–து–ழைப்பு தர வேண்–டும்' என்–ற–னர்.

    • மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு பாலச்சாமி மகன் விஜய் (வயது26). இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5400-ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அருகே உள்ள புலவன்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தா (வயது 75).

    இவர் சம்பவத்தன்று தனது சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.

    பின்னர் சிறது நேரத்தில் மூதாட்டி யிடம் இருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இது குறித்து வசந்தா பாப்பாநாடு போலீசில் புகார் அளி த்தார்.

    அதன் பேரில் பாப்பா நாடு இன்ஸ்பெ க்டர் இள ங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்க ளை தேடி வருகி ன்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜையும்,அபிஷேக ஆராதனையும் நடைபெ ற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்புணிகுழு, குடிப்பட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தார்.
    • நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி நீலாவதி (55).

    இவர் தனது பேத்தியை அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென நீலாவதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று பறித்தார். அதிர்ச்சி அடைந்த நீலாவதி திருடன்.. திருடன். என கத்தி கூச்சலிட்டார்.

    ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜதுரை.

    இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 45).

    இந்நிலையில், இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையா ளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர்.

    மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தப்பி ஓடிய மர்மநப ர்களை போலீ சார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம்.

    இவரது மனைவி உஷா (வயது 60). இவர் கடந்த 10-ம் தேதி இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அப்பகுதி யில் மோட்டார் சைக்கிளில் நின்ற மர்மநபர்கள் 2 பேர் சட்டென்று உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து உஷா கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
    • கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி நடந்தது
    • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி

    அரியலூர்:

    சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, திருமானூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    அரியலூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்துக்கு விசிக ஒன்றியச் செயலாளர்கள் தங்கராசு,உத்திராபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஒன்றியச் செயலர் துரை.அருணன் ,திராவிட கழக நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறையில் ஒன்றியச் செயலர் (வ) வீரவளவள், திருமானூரில் ஒன்றியச் செயலர் (கி) கண்ணன், ஜயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் பாரதி, முத்துகிருஷ்ணன், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் (வ) தேவேந்திரன், தா.பழூரில் ஒன்றியச் செயலர் தங்கராசு ஆகியோர் தலைமையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



    • கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.
    • இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகில் உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.இவரது மகன் ரவி நாமக்கல்லில் வசித்து வருவதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் தான், அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வ தற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறினார்.

    இதையடுத்து மூதாட்டி பாப்பாயி, தண்ணீர் மற்றும் வாழை இலை எடுத்து வந்து கொடுத்தார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் வீட்டில் உள்ளவர்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி அந்த பெண் பூஜை நடத்தினார்.

    அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்கவேண்டும் என கூறியதை அடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்துள்ளார். பூஜை முடிந்ததும் பூஜையில் வைத்த எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 மூலைகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து பாப்பாயி எலுமிச்சம் பழத்தை வீட்டின் 4 மூலைகளிலும் போடுவதற்காக வெளியே சென்றார். இதை பயன்படுத்தி பூைஜயில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த பெண் காரில் ஏறி தப்பி சென்றார். இதனை பார்த்த பாப்பாயி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அதற்குள் அந்த மர்ம பெண் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மூதாட்டியிடம் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் தங்க நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×