என் மலர்
நீங்கள் தேடியது "cleaning staff"
- தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும்
- சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் தோறும் 15 தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும் நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தில் போராட்டம் செய்தால் மட்டுமே சம்பளத்தை வழங்குகின்றனர்.
போராட்டம் செய்யும் நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்வது மேலும் சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை
தங்களிடம் பிடித்தம் செய்யும் பிஎஃப் பணத்திற்கு ரசீது கொடுக்காமல் பணத்தை வழங்காமல் மிகுந்த மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி வாசலில் முற்றுகையிட்டு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நகராட்சி ஆணையர் பாலாஜி பேச்சுவார்தை செய்தார். முன்தகவல் கொடுக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.
- டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.
- மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பூர்:
நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில் தூய்மை பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் பேசியதாவது:-
அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.
இதன் நோக்கம் நாட்டின் கடைகோடி மக்களுக்கு அரசின் நிா்வாகத்தை கொண்டு செல்லும் விதமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தீா்வு காணுதல், நல்ல நிா்வாகம் நடைபெற நடைமுறைகளை செயல்படுத்த நாட்டின் குடிமக்களை மையப்படுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதே நமது நோக்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை 100 பணியாளா்களுக்கு வழங்கினா்.இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
- மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் கொட்டப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக உர கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மட்டுமே உரக்கிடங்கிற்கு கொண்டுவந்து சேகரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியா ளர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து மக்கள் குப்பைகளை தரம் பிரித்து மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதத்தால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கமடையும் சூழ்நிலை உருவாகிறது.
இந்நிலையில் சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஒரு பிரிவினர் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி உரக்கிடங்கு கூடுதலாக அமைத்து தர வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்துவதை கண்டித்து தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நகராட்சி ஆணையர் வாசுதேவன் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதனை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார்.
- தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.
மங்கலம்:
மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.நிஷாத் அகமத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சாதிக், மனித நேய தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, ஒன்றிய பொருளாளர் சிக்கந்தர் பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ஹக்கீம், ஒன்றிய துணை செயலாளர் சதாம் உசேன், மங்கலம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கலத்தில் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
- 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வாசலில் தூய்மை பணியா ளர்களின் குடியிருப்புகளை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
பின்னர் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
தூய்மை பணியாளர்க ளுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்ப ட்டால் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். நாங்கள் செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
அதேநேரம் பணி நிரந்தரம் செய்யப்ப டுவதில் சில பிரச்சனைகள் இருப்பதையும் உணர்ந்துள்ளோம். கர்நாடக மாநிலத்தில் நேரடி ஊதியம் கொடுக்கும் முறை உள்ளது.
அதாவது நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தாலும் ஊதியத்தை நகராட்சியோ, மாநகராட்சியோ நேரடியாக அளிக்கும். இதனால் சரியான ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்கும். பிஎஃப், இ.எஸ்.ஐ சரியான வகையில் இருக்கும். எனவே தமிழக அரசு இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டும்.
விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது . கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வேதனை அளிக்கிறது.
இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு எந்திரங்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்திரம் உள்ளே நுழையா முடியாத அளவில் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும். அதுவும் கோர்ட் அறிவுரைகள் படி தொழிலா ளர்களின் உடல்நலம் பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகரண ங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களை உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் ஜெய்சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
- குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 10 ஆயிரத்து 500 மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சம்பளத்தை வழங்க கால தாமதம் செய்கின்றனர் எனவும், மே மாதம் சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், ஊதிய பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த மதுரை கிழக்கு மண்டல உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஊதிய பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார். துப்புரவு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வார்டு முழுவதும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளில் ஈடுபடும் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.
5-ந்தேதிக்கு பதிலாக கால தாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும் பணியில் சேரும் போது கூறிய சம்பளத்திற்கு பதிலாக குறைவாக வழங்குகிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தொகுப்பூதியம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
- தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று மாநகர தூய்மை பணியாளர்கள் நல சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தூய்மை பணியாளர்கள் நல சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், வீரவெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் சம்பளம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும். பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி , மருத்துவ செலவு அரசு ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூர் ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும்.
- தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும் என்றார்.
மண்டல குழு தலைவர் எஸ்.சி. மேத்தா : ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் காந்திமதி : தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோயில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஆனந்த் : காமராஜர் சந்தையில் சரியான செயல்பாடு இல்லாததால் 100 கடைகளைத் திரும்ப ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோபால் : எனது வார்டில் 90 சந்துகள் உள்ளன. ஆனால் தூய்மை பணிக்கு 3 பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை தூர் வருவதற்கு 2 பணியாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் : மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்ததாரர்தான் செலுத்த வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி தூய்மை பணியாளிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆணையர்: இத்திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.
மேயர்: இது தொடர்பாக 7 நாட்களுக்குள் தங்களுக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என்றார்.இருந்தாலும் இதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கூறினார். இதையடுத்து மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களே வஞ்சிக்காதே என முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தூய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, இரண்டாவது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை .
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திடீரென கால வரையறை யற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக எங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,
தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான நகலை காண்பி க்க வேண்டும், இந்த மாதம்5ம் தேதி இந்த சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கவுன்சி லர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார்.
இந்த திடீர் போராட்ட த்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெண்டர் எடுத்த நபர் நேரில் வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளித்தார்.
அதன் பிறகு போராட்டக்காரர்கள் அதுவரை தாங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இந்த டெண்டர் முறை தவறானது என்றும், ஒருவேளை சட்டப்படி டெண்டர் விடப்பட்டி ருந்தாலும் அதற்கான எந்த உத்தரவும் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை என்றும் கூறினர்.
மேலும் எந்த உத்தரவும் இல்லாமல் டெண்டர் எடுத்த நபர் என கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்துவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.
பின்னர் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்பொழுது நகராட்சி அலுவலகத்திற்குள் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் தொட ர்பாக கூறி சென்றுள்ளனர்,தொடந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
- அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.
இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-
பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
- தூய்மை பணியாளரில் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
- தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தனது வார்டில் சுதந்திர தினத்தையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து தூய்மை பணியாளரின் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சீர்காழி பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.