என் மலர்
நீங்கள் தேடியது "complaint petition"
- அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
- லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
- சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.
தென்காசி:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
- காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சினிமா துறை மட்டுமின்றி உணவகம் உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் முக்கிய சந்திப்பு பகுதிகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.
அதில் நடிகர் சூரியின் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24.06.2022 அன்று தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பொதுப்பணித் துறையினரால் இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உணவக நிர்வாகத்தினர் அருகில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் தொற்று நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், கரப்பான் திரிகின்றன.
செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக நிர்வாகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.
எனவே செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். அத்துடன் இந்த உணவகத்தின் அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.
இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இங்கு உணவு வகைகளை வாங்குகிறார்கள்.
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சூரிக்கு சொந்தமான உணவக நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த புகார் மனு காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார்.
- வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பெரும்பண்ணையூர் செல்வம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது 67). இவரது மனைவி பட்டு (64).
இந்த முதிய தம்பதியினருக்கு திருநாவுக்கரசு என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் திருநாவுக்கரசுவிற்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு திருநாவுக்கரசு உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு மருமகள், தனது வீட்டிற்கு புதிய பூட்டு போட்டு பூட்டியதுடன், வீட்டிற்கு வந்த தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதமாக மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது தங்கள் வீட்டை மருமகளிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சவுமியாவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
- கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.
கடலூர்:
பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் இடையேயான கோஷ்டிபூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், வசுந்தராஜ் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் செயல்பாடு பற்றி 3 பக்க புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் தோல்விகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் தொண்டர்கள் உற்சாகம் இழக்காமல் இருந்தார்கள். ஆனால் இப்போது சோர்வுடனும், விரக்தியுடனும் இருக்கிறார்கள்.
ஜி.கே.வாசன் பிரிந்து சென்றபோது காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் கட்சி எவ்வித சேதாரமும் இல்லாமல் இருந்ததை திருச்சி மாவட்டத்தில் கொட்டும் மழையில் நினைந்தபடி நீங்களே பார்த்து பாராட்டினீர்கள்.
2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக காங்கிரசே காரணமாக இருந்தது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்ததும் மாநில தலைவராக இருந்த இளங்கோவன் சென்று பேசினார். 2 முறை மத்தியில் காங்கிரஸ் அரசு மலர்ந்தது. ஆனால் இப்போது தோழமை கட்சிகளை எரிச்சலூட்டும் நிகழ்வுகள்தான் நடக்கிறது.
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி தலைமை அறிவிக்கும் போராட்டங்களை தொண்டர்கள் எழுச்சியுடன் நடத்தினார்கள்.
தற்போது தமிழ்நாட்டில் குழப்பமான, தெளிவற்ற நிலையில் அரசியல் உள்ளது. அ.தி.மு.க. உடைந்து பா.ஜனதாவின் எடுபிடி கட்சியாக இருக்கிறது.
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். இதனால் அரசியலில் தாக்கம் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.
இந்த நேரத்தில் வேகமாக செயல்பட்டால்தான் காங்கிரசை பலப்படுத்த முடியும். ராஜீவ்காந்தி இருந்தபோது 22 சதவீத செல்வாக்குடன் இருந்த கட்சியின் செல்வாக்கு தற்போது 5 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
தொண்டர்களும், நிர்வாகிகளும் முடங்கி கிடக்கிறார்கள். காரணம் தினந்தோறும் நிகழும் அரசியல் மாற்றங்களை சந்திக்காதது தான். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி கட்சியான தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் தலைவர் மட்டுமே கலந்து கொள்கிறார்.
அன்றாடம் பா.ஜனதா அ.தி.மு.க. எழுப்பும் குரல்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் முடங்கி கிடக்கிறது. செயல்படாத அரசை கண்டித்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இல்லை.
சத்தியமூர்த்தி பவனை விட்டு காங்கிரஸ் வெளியே சென்று கவுரவ பிரச்சனையை மறந்து செயலாற்ற வேண்டும். அதற்கு செல்வாக்குள்ள எழுச்சியூட்டும் தலைமை தேவைப்படுகிறது.
ஜெயலலிதாவை கூட எதிர்த்து களம் கண்டது காங்கிரஸ் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேலை செய்ய தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராக இருக்கிறோம். இதை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை தேவை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நேரில் புகார் செய்து இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #RahulGandhi