என் மலர்
நீங்கள் தேடியது "Crop insurance"
- அதிகாரி தகவல்
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத் தில் நடப்பு சம்பா பட்டத்தில் இதுவரை 1,159-ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை, முதல் மிக கனமழை பெய்து வருகிறது. எனவே பருவமழை மிக அதிகமாக பெய்து சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே, விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகள் வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேர பதிவை தவிர்த்து உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து கொள்ளு மாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப் பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங் கும் அடங்கல் சான்று (பசலி 1432) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், உள்ளிட் டவற்றை சமர்பித்து மேற்கண்ட ஆவணங்களின் புல எண். தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
- வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார் தங்கவேல், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உழவர் நலத்துறையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பயிர் காப்பீடு செய்ய தேவையான அடங்கல் மற்றும்பிற ஆவணங்களை விவசாயிகள் பெற்று சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்தனர். சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
- கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பசுமை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பூவலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த ஆண்டில் பயிர் காப்பீட்டிற்கு தொகை கட்டியும், இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை. அந்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது."
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.
- பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளி–யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.
விவசாயிகள் முன்மொழிவுப்படிவம், விண்ணப்பப்படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவீதம் பிரிமியமும், இதர குறுகிய காலப் பயிர்களுக்கு 1.5 சதவீதம் பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். எனவே கபிலர்மலை வட்டார விவசாயிகள், நடப்பு 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.
- சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
- வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
சீர்காழி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.
வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.
தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
- ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-
வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.
இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.
கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.
எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது-
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவ னங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்து றையில் ஒப்புதல் பெற்றி ருக்க வேண்டும்.
மத்திய கூட்டுறவுத் துறையில் பதிவு செய்யாத கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற் போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப் பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத் தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் இப்ப ணியிடத்திற்கு விரும்புப வர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவ றான தகவல் பரவி வரு கிறது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்ப தால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
- விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறாத பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்ற நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்காக வெளியிடப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்படுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.
- லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் பேட்டியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் தங்களுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலி யுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராம கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இது குறித்து லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் "மாலைமலர்" நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் கடந்த 2022-23ம் ஆண்டு நெற்பயிர்களை விவசாயம் செய்தனர்.விளைந்த பயிர்கள் எல்லாம் மழை இல்லாமல் கருகி அவர்க ளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்குட்பட்ட கருங்குளம்,அச்சங்குடி,கண்ணனை, பெரிய தாம ரைக்குடி, சின்ன தாமரைக்குடி,நல்லிருக்கை மற்றும் வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தற்காலி மாக கைவிடுகிறோம். பயிர் காப்பீடு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சி யம் காட்டினால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.