search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cybercrime police"

    • புதுவை கூடப்பாக்கத் தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் என்ஜினீயர். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டா கிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து. அதன் உள்ளே சென்றுள்ளார்.
    • ரூ.31 லட்சம் வரை அதில் முதலீடு செய்து விட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்த போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை கூடப்பாக்கத் தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் என்ஜினீயர். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டா கிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து. அதன் உள்ளே சென்றுள்ளார். அப்போது ஆன்லைனில் வருகின்ற சினிமாக்களை பார்த்து படத்தைப் பற்றிய மதிப்பெண்ணை குறிப்பிட்டால் முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக 10 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனை நம்பி அவர் இன்ஸ்டாகிராம் லிங்க் உள்ளே சென்று ஒரு படத்தை பார்த்து அதற்கான மதிப்பெண் கொடுத்தவுடன் இவர் முதலீடு செய்த ரூ.10 ஆயிரத்துக்கு 10 சதவீதம் கூடுதலாக உடனடியாக ரூ.11ஆயிரம் அனுப்பி உள்ளார்கள்.

    தொடர்ந்து அவர் தனது பணத்தை செலுத்தி, பல்வேறு படங்களை பார்த்து இவர் அதற்கான மதிப்பெண்ணை கொடுத்துக் கொண்டே இருந்தார் ரூ.31 லட்சம் வரை அதில் முதலீடு செய்து விட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்த போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், பேஸ்புக் போன்ற வற்றில் வருகிற லிங்கில் உள்ளே சென்று பார்க்க வேண்டாம். அப்படி அந்த லிங்க் மூலமாக நீங்கள் உள்ளே செல்லும் பொழுது உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்படுகிறது,

    உங்கள் செல்போனில் இருக்கின்ற அனைத்து தகவல்களும் இணைய வழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டுவிடும், மேலும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தின் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நாங்கள் சொல்வதில் முதலீடு செய்தால் அன்றைய தினமே 10 சதவீதம் லாபம் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் போன்ற பெரும்பாலானவை இணைய வழி மோசடிக்கா ரர்ககள் பொதுமக்களை ஏமாற்ற தற்போதும் கையா ளப்படும் யுக்திகளாகும்.

    பொதுமக்கள் இது போன்ற மோசடிக்காரர்கள் நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 63). இவர் யூ-டியூப்பில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
    • மனோகரன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 63). இவர் யூ-டியூப்பில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    அதில் எதிர்புறம் பேசிய நபர் முன் தொகையாக பணம் செலுத்த கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மனோகரன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    அதேபோல் மூன்றடைப்பு அருகே உள்ள மல்லக்குளம் பகுதியை சேர்ந்த ஜேசுகுமார் என்பவர் முகநூலில் வந்த ஆன்லைன் முதலீடு தொடர்பான விளம்பரத்தை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மனோகரன் மற்றும் ஜேசுகுமார் ஆகிய இருவரும் பணத்தை மீட்டுத்தருமாறு நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 2 பேரின் பணத்தையும் மீட்டனர்.

    வேண்டுகோள்

    மேலும் இதுபோன்று இணையவழி குற்றம் செய்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

    • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
    • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்திருந்தார். ேமலும் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
    • குறிப்பிட்ட அந்த மொபைல் எண், மகாராஷ்டிரா மாநில முகவரியில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐ.டி வைத்து பணம் வசூல் நடத்தப்பட்டு தெரியவந்தது.

    இது தொடர்பாக கலெக்டர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது போட்டோவை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.

    பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்திருந்தார். ேமலும் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், குறிப்பிட்ட அந்த மொபைல் எண், மகாராஷ்டிரா மாநில முகவரியில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட மொபைல் எண், ஏற்கனவே நடந்த மோசடிகளில் தொடர்புடையது என்பதும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த மர்ம நபரை பிடிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    ×