என் மலர்
நீங்கள் தேடியது "Death penalty"
- திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம்.
- கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் blood money குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் நிலைமையை புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாயார் பிரேமா குமாரி, அவரது உயிரைக் காப்பாற்ற இடைவிடாமல் போராடினார்.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது நிமிஷா குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார்
ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் தாய் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் உதவியை நாடியுள்ளார். தனது மகளின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததையடுத்து செயல்பட அதிக நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்குள் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தாய் வேண்டுகோள்
இந்நிலையில் ஏமனில் இருந்து உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசிய பிரேமா குமாரி, இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மகளுக்கு இன்னும் அதிக நேரம் இல்லை, என்று அவர் கூறினார்.
இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அவளைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவிற்கும், இதுவரை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள். தயவு செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்ற உதவுங்கள். நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார். "என்னைப் பார்த்தவுடனே ஓடி வந்து மம்மி என்று என்னைக் கட்டிக் கொண்டாள்.இருவரும் அழுதோம்.ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதோம்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன்.கடைசியாக அவளைப் பார்த்தது திருமணம் ஆனபோதுதான். அவளை விட்டு விடுங்கள் என்று பிரியாவை சந்தித்த பிறகு தாய் குமாரி தெரிவித்தார்.
2023 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
நிமிஷா கொலை வழக்கு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார்.

ஒரே வழி
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்தது.
தற்போது மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அழித்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு blood money கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று குமாரி மற்றும் நிமிஷாவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிமிஷாவை தூக்கிலிருந்து இனி காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுவே ஆகும். எனவே மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது
- மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவர் மயக்க மருந்து செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மரணதண்டனையை ஏமன் உச்சநீதிமன்றம் 2022 இல் உறுதி செய்தது.
இதற்கிடையே கடந்த மாதம் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததாக கடந்த மாத இறுதியில் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜனாதிபதி எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
திங்களன்று, இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் கொடுக்கவில்லை.
செவிலியரின் முழு வழக்கும் நாட்டின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் கையாளப்படுகிறது. பிரியா தற்போது தலைநகர் சனாவில் ஹவுதி போராளிகளின் அதிகாரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அரசாங்கம் எல்லா உதவிகளையும் அவருக்கு வழங்கி வருகிறது. இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
பாதிக்கப்பட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.
- 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
- 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை [ஜனவரி 20] பதவியேற்க உள்ளார்.
எனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் [82 வயது] தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று [வெள்ளிக்கிழமை] ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் கூறினாா்.
கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.
- பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன
- நான் பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை.
மத நிந்தனையில் ஈடுப்பட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவானதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகமான பேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மத நிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒருவர் எனக்கு மரண தண்டனை பெற்றுத் தர முயன்றார்.
பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை, எனவே நான் அதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதித்து நடந்தும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலானது என்று அவர் மேலும் .தெரிவித்தார்.
- இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது
- இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் நிறுவனம் கோர்க் ஏஐயில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது.
பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கானவராக உள்ளார்.
அரசு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவரு, இவரே. அரசின் வீண் செலவுகளை கண்டிருந்தது டிரம்ப்பிடம் கூறுவதே இந்த துறையின் வேலை. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த USAID அமைப்புக்கான நிதியை எலான் மஸ்க் அறிவுரையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.
மேலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் 10,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தார். 75,000 அரசு ஊழியர்கள் சலுகைகளை ஏற்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கிடையே ஆவணமின்றி அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவரை கை கால்களில் சங்கிலி கட்டி நாடு கடத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (எக்ஸ். ஏஐ) கோர்க் சாட்பாட் ஒரு தவறு செய்துள்ளது. ஏஐ கோர்ட் சாட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடக்குமடக்கான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் கோர்ட் சாட்பாட் - இடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் டைப் செய்துள்ளார். இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் டிரம்ப்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க் என்று கோர்க் பதிலளித்துள்ளது.
இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் ஏஐ கோர்க் சாட்பாட்டில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
- மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

- மலேசியாவில் 1,300-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
- மலேசியாவில் 11 வகையான குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
கோலாலம்பூர்:
கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றங்களில் தற்போது பயன்படுத்தப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக மலேசியா தெரிவித்துள்ளது.
மரண தண்டனைக்குப் பதிலாக மற்ற தண்டனைகள் விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என பிரதமர் அலுவலக மந்திரி வான் ஜுனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது.
இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், மரண தண்டனைக்கு பதில் வேறு கடுமையான தண்டனைகளை வழங்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிகிறது.
தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.
இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.

இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.
எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். #Thailand #Tourist #Selfie #DeathPenalty
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த நாட்டில் தகாத உறவும் (கள்ள உறவு), ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர்.
தண்டனை கடுமையாகிறபோதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார்.
இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள்.
இப்படி கடுமையான தண்டனை விதிக்கிறபோது திருட்டை ஒழித்துக்கட்டி விடலாம் என்று அந்த நாட்டின் அரசு நம்புகிறது.
இந்த தண்டனைகள் வரும் 3-ந் தேதி (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இப்படி தகாத உறவு, ஓரினச்சேர்க்கை, திருட்டு ஆகிய 3 குற்றங்களுக்கும் தண்டனையை அதிகரிப்பது என கடந்த 2013-ம் ஆண்டு முடிவு எடுத்து உள்ளனர்.
ஆனாலும் வலது சாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அதிகாரிகள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் தாமதம் ஆகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் புரூனே ஆராய்ச்சியாளர் ரேச்சல் சோவா ஹோவர்டு இந்த தண்டனைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச அமைப்பு இந்த புதிய தண்டனைகளை அமல்படுத்துவதை புரூனே உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஆனால், புரூனே மத விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் மன்னர் தனது அறிவிப்பை 3-ந் தேதி வெளியிடுவார்” என குறிப்பிட்டார். #Syariahlaw
மதுரை சூர்யா நகரை சேர்ந்த பரணிபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மின்வாரியத்தில் 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வை கடந்த டிசம்பர் மாதம் நான் எழுதினேன். அந்த துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களிடம் கேள்வித்தாள் விவரங்களை தேர்வுக்கு முன்பே தெரிவித்துவிட்டனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் 3-ந் தேதி உத்தரவிட்டார். விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே 1,575 பேரை தேர்ந்தெடுத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வராமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது சட்டவிரோதம். எனவே மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கான நடவடிக்கைகளுக்கும், பணி நியமன உத்தரவு அளிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த உதவி பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மனுதாரர் பங்கேற்ற தேர்வில் செல்போன் உள்பட எந்த மின்னணு சாதனமும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அப்படியானால், அந்த தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், “அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. கண்காணிப்பு கேமரா, செல்போன் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் அடிக்கடி வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனாலும் அது தொடர்கிறது.
லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேர் மீதான வழக்கு யாங்கோன் வடக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.