என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death."

    பட்டறை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த வர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் அங்குள்ள அலுமினிய பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும்  ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
     
    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.   நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் கதவை தட்டியது. ராஜேஷ்குமார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால்  சரமாரியாக வெட்டியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். 

    இதுதொடர்பாக கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ் குமாரை  எதற்காக வெட்டிக் கொன்றனர்? அவரை கொலை செய்த கும்பல் எது? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுக்கு கீரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த வேலை வாங்கி  தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சத்யா வேலைக்கு செல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும்  அந்த நபர் வேலை வாங்கிக் கொடுத்ததற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனவே சத்யா இதுதொடர்பாக கணவர் ராஜேஷ்குமாரிடம்   தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார், நேரடியாக அந்த நபரின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டு உள்ளார்.  அவரை அங்கிருந்த சிலர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். 

    இந்த பிரச்சினையால் ஆத்திரம் அடைந்த  சம்பந்தப்பட்ட நபர் நபர் கூலிப்படை வைத்து ராஜேஷ்குமாரை வெட்டிக் கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூரில் ஓட்டல் ஊழியர் தவசி என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இன்று காலை சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையில் தற்போது  அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது  மதுரை மாநகர மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சங்ககிரியை சேர்ந்தவர் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் சாவு.
    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்தார். 

    இவர் குடும்பத்துடன் சுற்றுலா தனது மனைவி சுமையா மற்றும் இவரது மகன்கள் உமர்சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 15 பேர் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.
     
    பின்னர் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் ஆழமான பகுதியில் குளித்தார். 

    அப்போது  திடீரென அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தண்ணீரில் மூழ்கி பலி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாஸை ராஜா வாய்க்காலில் தேடினர். 

    தண்ணீர் அதிகமாக சென்றதால் தண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் சட்டர்களை அடைத்தனர். 

    இதில் ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீசார் அவரது ‌உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     
    ஷாநவாஸ் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.   இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் காற்றாலை ஊழியர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள மாடநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 27).  ஐ.டி. படித்து முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை குமாரபுரம் விலக்கு பகுதியில் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜேஷ் கண்ணனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.  இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

     இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பணகுடியை சேர்ந்த சதீஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).

    இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

    மயிலாடுதுறை அருகே தன் மனைவியிடம் பேசியதை கண்டித்த டிரைவரை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாமியப்பன். லாரி டிரைவர் (வயது 52). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு ஆனதாண்டவபுரம் ரோடு அருகே உள்ள தெருவில் வசித்து வந்துள்ளார். அதை விற்பனை செய்துவிட்டு தூக்குனாங்குலத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

    இவர் வீட்டுக்கு அருகே அவருடைய தம்பி வீரமணியும் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரமணியின் மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்குசென்று விட்டாராம். 

    தன் மனைவியிடம் நீ ஏன் அடிக்கடி தனிமையில் பேசுகிறாய் என சந்தேகப்பட்டு வீரமணியிடம் சாமியப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி அண்ணன் சாமியப்பனை தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த விழுந்த சாமியப்பனை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி அனுப்பி வை த்தனர். ஆனால் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கப்பாளையத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குப்புச்சிபாளையம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது  45). இவர் நேற்று சங்கப்பாளையத்தில்  உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். 

    செல்லும் வழியில் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரவிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார். 

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  

    வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர்   வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் பலியானார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பரசலூர் கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் சுரேஷ் (வயது 26). திருமணமாகாதவர். காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் 2 நாட்களுக்கு முன்பு மன விரக்தியில் மது அருந்தியுள்ளார்.

    இந்நிலையில் வீட்டுக் கொல்லையில் வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றிக்கொன்டு தற்கொலை முயற்சியில் ஈ;டுபட்டுள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி உள்ளனர். 

    அங்கே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தகவலறிந்த திருவாரூர் மேஜிஸ்ட்ரேட் நேரடி வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. 

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தருவைகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார்.
    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.

    அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் கட்டுமான தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    செல்லூர், போஸ் வீதியை சேர்ந்தவர் குரு (55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை இவர் தாகூர்நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றபோது டி.கல்லுப்பட்டி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் சின்னசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×