என் மலர்
நீங்கள் தேடியது "Debt"
- ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.
- போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற பி. எஸ். என். எல். ஊழியர். இவரிடம் உடன் பணியாற்றிய ஆவடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.13 லட்சம் வாங்கினார்.
பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஜெகதீசனிடம் வீட்டு பத்திரத்தை ரவிக்குமார் திருப்பி கேட்டார். அதனை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக கூறினார். இதனை நம்பி ஜெகதீசனும் அடமான வீட்டு பத்திரத்தை கொடுத்தார். ஆனால் ரவிக்குமார் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று பணம் குறித்து ஜெகதீசன் கேட்டபோது ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து ஜெகதீசன் போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார், அவரது மனைவி மீனாட்சி, மகள் பிரேமலதா, அவரது கணவர் நாதன், ரவிக்குமாரின் மகன் பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.
- தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையாக தமிழகம் விளங்குகிறது.
இந்நிலையில் நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு கிற வகையில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்றும் பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அதற்குரிய விளக்கத்தை கூற தவறுவாரேயானால் மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த போது அன்றைய நிதி அமைச்சர் பொருளாதார நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கடன் சுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பல்ல. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற வேண்டு மென்ற பொறுப்புணர்ச்சியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இயற்கை பேரிடரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சக பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
- ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.
இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
- வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும்.
- அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.
வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.
வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த இரண்டுமே நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும்.

வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்க பண வரவு அதிகரிக்கும்.
- பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
- குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாக பண்ணையார் கூறியுள்ளார்
கர்நாடகாவின் தும்கூரு நகரைச் சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் இப்போது மகளை திருப்பி அழைத்துசெல்ல தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ.35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தையை அவரிடம் விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உரைத்தார். அந்த நிலக்கிழார், 11 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்யவைத்து கொடுமைஇப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் தாய் வந்து கேட்டும், தான் குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாகவும், தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துசெல்லும்படி கூறியுள்ளார். இதனால தாய் சென்று போலீசில் புகார் அளிக்கவே, குழந்தையை மீது போலீசார் தாயுடன் அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் மக்ஜியோல்லி [அரிசி மது] குடித்து மகிழ்வார்கள்
- மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம்.
தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது.
முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான விடுதிகளுக்குப் போவதும் வருவதுமாக நள்ளிரவிலும் ஜன நெருக்கடி நிறைந்த இடங்களும் சாலைகளும் தற்போது வெறிச்சோடி கிடப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக தலைநகர் சியோலில் முன்பைப் போலல்லாது இரவில் வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள் இதை உறுதிப் படுத்துகிறது. மக்களுக்கு குடியின் ஆர்வம் குறைந்துவருவதை பல்வேறு புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்துகிறது.


சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள்.

பாப் - பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என்று கூறுகிறார்.
மக்கள் மதுவைக் கைவிடுவதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.
- 2024-25 ஆம் ஆண்டில் குஜராத்தின் கடன் ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது.
குஜராத்தின் மொத்த பொதுக் கடன் 2023-24 நிதியாண்டில் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
மேலும் அம்மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் அது ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ₹10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தின் மக்கள் தொகை 6 கோடியாக இருப்பதால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ₹66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது
பாஜக தலைமையிலான குஜராத் அரசு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கடனை அதிகரிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- நிதிநிறுவனம் நெருக்கடியால் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
- விழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வாணக்கார வீதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் ரவிக்குமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பாபுஜி விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் கடன் வாங்கினார்.தற்போது தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதிநிறுவன ஊழியர் மேகநாதன், கட்டிட தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை.
அப்போது பாபுஜியின் சகோதரர் ரவிக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்த நிதிநிறுவன ஊழியர் மேகநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிக்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை தூக்கி கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்துவிழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவன ஊழியர் நெருக்கடி கொடுத்ததால் ரவிக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக நிதிநிறுவன ஊழியர் மேகநாதனை போலீசார் தேடிவருகிறார்கள்.
- பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் கத்தியை எடுத்து காட்டி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம் கிராமத்தை ச்சேர்ந்தவர்சஞ்சீவி (வயது 53). இவர் அதே பகுதியில்பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தஅர்ஜுனன் வியாபாரியை சஞ்சீவியை அசிங்கமாக திட்டி கத்தியை எடுத்து காட்டிகொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசில் சஞ்சீவிகொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்.இன்ஸ்பெக்ட ர்செல்வம்ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து கொலைமிரட்டல் விடுத்த அர்ஜுனனை தேடிவருகின்றனர்.
நாகப்பட்டினம்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி மாசாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ம் தேதி மாலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேராலயம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரிமுத்து விஷம் குடித்த இடத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லை காரணமாகதான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.
இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.
தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.