என் மலர்
நீங்கள் தேடியது "documents"
- பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.
மடத்துக்குளம் :
விவசாயம் என்னும் உணவு உற்பத்தித்தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயிகளை கவுரவப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு துணையாக அரசின் உதவிக்கரம் உள்ளது என நம்பிக்கையளிக்கும் வகையிலும் மத்திய அரசின் மூலம் பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியற்ற விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்வதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் ஆதார் இணைப்பு மற்றும் நில ஆவணங்கள் இணைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறையான ஆவணங்கள் இணைக்காத விவசாயிகளுக்கு தற்போது உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை வட்டாரத்தில் தற்போது 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
தற்போது உதவித்தொகை நிறுத்தப்பட்ட விவசாயிகள் தங்களது சொத்து ஆவணங்களை வேளாண்மைத்துறையினரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொது சேவை மையங்களுக்கு சென்று ekyc பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் மற்றும் மொபைல் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு சில விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் விட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்கும்போது மீதம் உள்ளவருக்கு உதவித்தொகை வருவதற்கு வாய்ப்புள்ளது. உதவித்தொகை வராத விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையமானது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் முகமையினை பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை ஆதார் சேர்க்கை முகமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களின் முகவரி நிரந்தரமாக இருந்தால் ஆதார் தரவை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
தற்போது பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மார்ச் மாதம் 5-ந் தேதியும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 12-ந் தேதியும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 19-ந் தேதியும் ஆதார் சேவை மையம் செயல்படும்.
ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 22-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 26-ந் தேதி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 29-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 9-ந் தேதியும், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதியும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதியும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியும் ஆதார் சேவை மையங்கள் செயல்படும்.
இதுபோல் எல்காட் மூலமாக நடக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தொட்டிப்பாளையம், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்ததேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்களை புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.
தமிழக அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதார் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்யலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை அறை எண் 23, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 27.12.2022 ந்தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மதுரை பெத்தானியாபுரம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
- இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை பெத்தானியா புரம் சின்னசாமி பிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ''வி.எல்.சி. அக்ரோ டெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
பொதுமக்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்கள் நம்பிக்கை மோசடி செய்தனர்.
இதுபோல் அவரது ஊரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிலையம் எதிர்புறம், மதுரை-14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொட்டியாபாளையத்தில் 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
- இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள லக்கபுரம் பஞ்சாயத்து தொட்டியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 52), விவசாயி. இவருக்கு சொந்தமான 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் போலீசிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த நிலம் தொடர்பான தடை ஆணை மீது எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் போலி ஆவணங்களை வைத்து அந்த இடத்தை திருநாவுக்கரசு என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணிவேல், அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புது சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
அப்போது பதிவாளர் அமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் கூடுதல் பொறுப்பு வகித்த பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். போலி ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதற்கு இடையே அந்த பத்திரபதிவு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் மீது புகார் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் சுப்பையா தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 35). இவரது கணவர் ஜெயக்குமார். சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் ரோசல்பட்டியை சேர்ந்த புவனேசுவரி என்ற பெண், காளீஸ்வரிக்கு அறிமுகமாகி உள்ளார். அவர் காளீஸ்வரியிடம் ஆசைவார்த்தை கூறி சீட்டு திட்டத்தில் சேர வைத்துள்ளார்.
அதற்காக ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காளீஸ்வரி கொடுத்துள்ளார். அந்த திட்டத்தில் 3 மாதங்கள் மட்டும் பணம் கட்டி விட்டு நிறுத்தி விட்டார். இந்த நிலையில் ரூ.8 லட்சம் சீட்டு பணம் பெற்று திரும்ப செலுத்தாமல் உள்ளதாக அந்த சீட்டு கம்பெனியில் இருந்து காளீஸ்வரிக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கம்பெனிக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கு காளீஸ்வரி பெயரில் வங்கி கணக்கு ஒன்றில் 2 திட்டங்களில் ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்துள்ள தகவல்களை தெரி வித்துள்ளனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காளீஸ்வரி பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு ரூ.8 லட்சம் பெறப்பட்டு அந்த கணக்கு மூடப்பட்டு விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து விருதுநகர் மேற்கு போலீசில் சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாக புவனேசுவரி, அழகர்சாமி, முருகானந்தம், மணிமாறன் ஆகிய 4 பேர் மீது காளீஸ்வரி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முத்திரைத் தீர்வையினை செலுத்தி ஆவணங்களை கிரயத்தாரர்கள் விடுத்துள்ளக் கொள்ளலாம்.
- கலெக்டர் அலுவலகத்தில் தனித் துணை ஆட்சியரை தொடர்புக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சார்பாக 1.1.2023 முதல் 31.3.2023 வரை சிறப்பு முனைப்பு இயக்கமாக தஞ்சாவூர் வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டமாகவும் 4 அலகுகளை உள்ளடங்கிய 49 சார் பதிவகத்தில் பதிவு செய்து குறைவு முத்திரை தீர்வை செலுத்தப்படாமல் உள்ளது.
நாளது வரை நிலுவையில் உள்ள இனங்களான இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவுகள் 47 (A1), 47 (A3) மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் உள்ள ஆவணங்களில் ஏற்பட்டுள்ள முத்திரைத் தீர்வையினை செலுத்தி ஆவணங்களை கிரயத்தாரர்கள் விடுத்துள்ளக் கொள்ளலாம் என்று பதிவுத்துறை தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறான கிரையதாரர்கள் அனைவரும் தங்களது ஆவணங்களுக்கு ஏற்படும் குறைவு முத்திரை தீர்வையினை செலுத்தி ஆவணத்தை விடுத்துக் கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 119-ல் உள்ள தனித் துணை ஆட்சியரை (முத்திரைக் கட்டணம்) தொடர்புக் கொண்டு இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள கிரையதாரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.
மதுரை
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது-
மதுரை மேலவெளி வீதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான விக்டோரியா எட்வர்டு மன்றத்தின் உறுப்பினர்க ளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் மன்றத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மீட்புக்குழு என்ற பெயரில் பல பொய்யான குற்றச்சாட்டுகளை மன்ற நிர்வாகத்துக்கு எதிராக தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பலமுறை அளித்த பொய் புகார் காரணமாக எங்கள் தரப்பு நியாயங்களை கேளாமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் விக்டோரியா மன்றத்திற்கு தனி அலுவலர் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தெரிவித்த உத்தரவாதத்தை மீறி கடந்த 4-ந் தேதி மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மற்றும் மன்ற நிர்வாகத்திற்கு எதிராக செயல்படும் முத்துக்குமார் உள்ளிட்ட சில நபர்கள் மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக பணியாளர் செந்தில் குமாரை மிரட்டி அவரிடம் இருந்த சாவியை பறித்து அலுவலகத்தில் சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், சிசிடிவியின் ஹார்டிஸ்க், நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு நடவடிக்கை புத்தகம், வாடகைதாரர் ஒப்பந்த பத்திரங்கள், ரெசிப்ட் புத்தகம், ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் ரொக்கம் 18,450 ஆகியவற்றை 3 பைகளில் எடுத்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரி களுக்கு புகார் தெரிவிக்கப் பட்டது. இதனிடையே நாம் தமிழர் கட்சி சேர்ந்த வெற்றி குமரன் உள்ளிட்ட சிலர் தனது அரசியல் பலத்தால் மன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இதனால் மன்ற நிர்வாகிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்றத்திற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீதும், மன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற மாவட்ட பதிவாளர் ராஜ்குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது.
- அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
இந்தியா முழுவதும் நாளை அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஒலக்கூர் பல்வேறு பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டிவனம் மரக்காணம் சாலை அருகே திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- சார்பதிவாளர் அலுவலக ஆவணங்கள், இறப்பு சான்று வாரிசு சான்று உள்ளிட்ட அசல் ஆவணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எரிந்து விட்டன.
- இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அலுவலக சான்றுகள் அனைத்தையும் உடனடியாக தாசில்தார் ரதிகலா வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் சொக்கலிங்கபுரம் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி மல்லிகா. இவரது வீட்டின் மின் இணைப்பு பெட்டியில் மின் கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு அதன் அருகில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பாக அவர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலக ஆவணங்கள், இறப்பு சான்று வாரிசு சான்று, கணிணி பட்டா, நத்தம் பட்டா ஆகிய அசல் ஆவணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எரிந்து விட்டன என தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அலுவலக சான்றுகள் அனைத்தையும் உடனடியாக தாசில்தார் ரதிகலா வழங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். புகார் தெரிவித்த உடன் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சான்றுகளை வழங்கிட உத்தரவிட்ட மாவட்ட கலெக்டருக்கும், வழங்கிய தாசில்தாருக்கும் பாதிக்கப்பட்ட பெண் நன்றி தெரிவித்தார்.
- ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ரோஷனை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர்ஸ்டாலின் மற்றும் போலீசார் திண்டிவனம் ரோஷனை ஒலக்கூர் போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
- நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மதுரை:
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர் ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.