என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edapadi palanisamy"

    • சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
    • 'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்'.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்'' என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

    'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. சு.திரு நாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலை வர் காதர் மொய்தீன் ஆகி யோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
    • சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார். மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்.

    தென்காசி மாவட்டம் உதயமானது அ.தி.மு.க. ஆட்சியில். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முடிவடைந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சில திட்டங்களை தி.மு.க. கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

    மக்கள் ஏமாற்றம்

    சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அரசு கலை கல்லூரி, ஆட்டின ஆராய்ச்சி மையம், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், ரூ. 543 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டனர். மக்களை ஏமாற்றியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. அனைத்து குடும்பத் தலைவி க்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றார்கள். இதனை தி.மு.க.வினரை பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றனர்.

    40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடிந்ததா?. தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம். மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். யாருக்கும் அ.தி.மு.க. அஞ்சியதில்லை, அஞ்சப்போவதுமில்லை. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். கொள்ளையடிப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், தளவா ய்சுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், ஏ.கே. சீனி வாசன், மாவட்ட செயலா ளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.பி. சவுந்தர்ரா ஜன், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசைய ன்விளை பேரூராட்சி தலைவரு மான ஜான்சிராணி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா, முன்னாள் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளரும், முன்னாள் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவ ருமான பால்கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செந்தில்கு மார், பாசறை பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளசை தேவராஜ், நகர பேரவை செயலாளர் கவுந்தர் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி .ராமநாதன், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன், ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பாண்டியராஜ், நெல்லை 15-வது வட்டசெயலாளர் பாறை மணி, நெல்லை மேற்கு பகுதி பொருளாளர் காளி முருகன், இளைஞரணி விஷ்வகணேஷ், மூலைக்கரைப்பட்டி நகர துணைச்செயலாளர் எடுப்பல் காளிமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜாண்ரவி, ஆலங்குளம் பேரூர் துணைச்செயலாளரும், 12-வது வார்டு கவுன்சிலருமான சாலமோன்ராஜா, நெல்லை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், கருவந்தா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருன்மத்தேயு, புளியங்குடிநகர இளைஞரணி தலைவர் செல்வ சந்திரசேகரன், புளியங்குடி 1-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
    • அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினர்.

    இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக இன்று காலை பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நமது அண்டை நாடான இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற திரு. அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

    "கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

    • உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
    • உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, விருதுநகர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை இந்த மேடையில் மணிக்கணக்கில் என்னால் சொல்ல முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான அரங்கம் அமைத்தது பயனற்ற திட்டமா? மதுரையில் மாணவ-மாணவிகள் கல்வியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கலைஞர் நூலகம் அமைத்தது பயனற்ற திட்டமா? கிண்டியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து பயனற்ற திட்டமா? தமிழகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது பயனற்ற திட்டமா? இதில் எதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இப்படி வாய்தொடுக்காகவும் ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.

    தமிழக மக்கள் மனதில் கலைஞர் தவிர்க்க முடியாதவர். அவரது கொள்கைகளையும், சிந்தனைகளையும் செயல்படுத்தி வருகிறேன். கலைஞர் பிள்ளை என்பது மட்டுமல்லாமல் அவரது தொண்டனாகவும் வாழ்ந்து வருவதில் பெருமிதமடைகிறேன். அவரது புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் வீசுகிறது. அந்த வௌிச்சம் எடப்பாடியின் கண்களை கூச செய்கிறது.

    எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது.
    • வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.

    1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.

    அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

    இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது. 

    தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், " சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்" என்றார்.

    • டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
    • மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் ரத்து குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன்.

    இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும்.

    மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் "டங்ஸ்டன்தடுப்போம், மேலூர்காப்போம்" என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

    டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    • தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம்.
    • மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

    மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்ததாக திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் பிரச்சனைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.

    கடந்த 44 மாதகால விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மக்களின் நலனை முன்னெடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்கிறது.

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச் சாலை, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாகவும், தே. கல்லுப்பட்டி வழியாகவும் செல்கிறது.

    ஆலம்பட்டி நான்கு வழிச் சாலையில், சேடபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆலம்பட்டி வரை, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பாலத்திற்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படாததன் காரணமாக, மக்கள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்திற்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும், விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் அவர்கள், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

    அதேபோல், மதுரை ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் தே. கல்லுப்பட்டி காவேட்நாய்க்கன்பட்டி விலக்கில் மேம்பாலம் அல்லது தடுப்புடன் கூடிய (பேரிகார்டு) சிக்னல் அல்லது அணுகுசாலை அல்லது சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

    விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசோ, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வுகாண எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இன்று (30.1.2025) காலை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் மக்களோடு மக்களாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மக்களின் தன்னெழுச்சிக்கு பதில் அளிக்க இயலாத இந்த அரசின் ஏவல் துறையான காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து, அனைவரையும் கைது செய்துள்ளதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கிற்கு மக்கள் விரைவில் முற்றுப் புள்ளி வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
    • விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.

    அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

    விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.

    விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.

    திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆட்சி மாற்றம் காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது.
    • அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில், 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

    அப்போது அவர், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×