என் மலர்
நீங்கள் தேடியது "Edappdi Palaniswami"
- கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
- தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவனா? அல்லது வேறு யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தடவையும் த.மா.கா. போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த யூகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.
இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.
தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.
அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.
மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.
தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1989-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்
- ஒத்திகை பார்த்து ஜெயலலிதா நடத்திய நாடகம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்திருந்தார்
மக்களவையில் மணிப்பூர் சம்பவத்தையோட்டி பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி துரியோதனன் சபையில் திரவுபதியின் துயில் உரித்தது போன்று நடக்கிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி தி.மு.க. என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கின்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பொய் சொல்கிறார். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்தார் போல் தெரிகிறது. நான் அந்த சம்பவம் நடக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நானும் அந்த அவையிலே இருந்து அதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி முன்னிலையில் பெண் என்றும் பாராமல், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஒரு கொடூர தாக்குதல் நடந்தது.
திட்டமிட்டே அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்பே தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். அப்போது திருநாவுக்கரசும் அதனை தடுத்தார். அப்போது, தற்போதைய மூத்த அமைச்சர் சேலையை பிடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் ஒரு கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கும், எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் நடந்தது கிடையாது. இன்னும் அந்த சம்பவம் எங்கள் நெஞ்சில் இருந்து நீங்காமல் இருக்கிறது. அந்த சம்பவம் நடைபெற்ற தினத்தை கருப்பு தினமாகவே நான் கருதுகிறேன். நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது தமிழக முதல்-அமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்துக்கு நுழைவேன் என்று சபதம் ஏற்று அம்மா வெளியில் சென்றார்.
அதன்படி 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிட்டு தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை நிரூபித்துள்ளார்.
இது கடும் கண்டனத்திற்குரியது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இன்றைக்கு எவ்வளவு பாலியல் வன்கொடுமைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு பெண் மீது ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் கண்ணெதிரே சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம் பெண் என்று பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவருடைய சேலையை பிடித்து இழுத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு தாக்குதல் நடத்தியவர்களின் தங்கைக்கோ, சகோதரிக்கோ, தன் மகளுக்கோ ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு ரத்து என்று சொல்லிய முதல்வர் இதுவரை ஏன் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இதற்காக குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே.
நாங்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் பாராளுமன்றத்தை 22 நாள் தொடர் போராட்டம் மூலம் முடக்கினோம். அந்த தில் தி.மு.க.வுக்கு இல்லை. இதெல்லாம் ஒரு பொய்யான தேர்தல் வாக்குறுதி. சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறுவது வேடிக்கையான ஒன்று.
தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் இந்த கூட்டணியில் இணைவது என்றால் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்படி வைத்திருந்தால் இப்போது காவிரியில் தண்ணீர் வந்திருக்கும். விவசாயிகளின் கவலை தீர்ந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே ஜாதி சண்டை, மத சண்டை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
- நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.
சென்னை:
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.
இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.
இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.
இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.
- நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல.
- 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, இன்றும் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Chennai: AIADMK MLAs raise slogans and protest over Kallakurichi hooch tragedy, at Tamil Nadu Assembly premises.
— ANI (@ANI) June 22, 2024
AIADMK asked for a discussion on the hooch tragedy during Question Hour. Speaker turned down the request and said that he will give time during Zero Hour.… pic.twitter.com/M9FxDmr4xl
- கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தினார்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.
- வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ. பன்னீர்செல்வம், சரத்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமாரி எம்.பி. விஜய் வசந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதவியில், "வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
வணிகர்களின் நலனுக்காக உழைத்து, வணிகர் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்திய திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு வணிகர் சமூகத்திற்கு தீரா இழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் அனைவரது துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள்.
- எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது-
அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.
அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான். யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள்.
லஞ்சம் வாங்குவதில் முதன்மை தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
முதன்மை முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார். அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்ற செய்தியே தி.மு.க.காரர்கள் செய்கின்ற பிரச்சினை தான். அதை பார்த்து பயந்து நடுங்கி காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார். கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார்.
5 மாத காலத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதிகாரியாக இருப்பேன் என சொன்னார். ஒழுங்காக கட்சியில் பணி செய்யவில்லை என்றால் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என சொன்ன அதே மு.க.ஸ்டாலின் இன்று கட்சியினர் மத்தியில் கெஞ்சுகின்ற நிலைமையை பார்க்கின்றோம். ஆகவே திறமை இல்லாத முதல்-அமைச்சர் நாட்டை ஆளுகின்றார்.
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்தேன். கொரோனா தொற்றின்போது சிறப்பாக செயல்பட்டோம். டாக்டர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
- ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தற்போது இந்த மையத்தில் 4 மாதம் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
- இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர்.
அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகியான மகாலிங்கம் ராயப்பேட்டை போலீசில் கடந்த 11-ந்தேதியே புகார் அளித்திருந்தார். இதன் பின்னர் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், அ.தி.மு.க. அலுவலகத்தில் திருட்டு போன பொருட்கள் என்னென்ன, சொத்து ஆவணங்கள் எவை? என்பது பற்றி விரிவாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 147, 148, 454, 380, 409, 427, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை போலீசார், அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது தமிழக அரசின் தரப்பில் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர் செல்வம் ஆதவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து 300 பேர் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து பொருட்களை திருடிச் சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 300 பேருக்கும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் ராயப்பேட்டை போலீசார் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த வீடியோக்களை போட்டு பார்த்தும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்பவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அந்த ஆவணங்கள் தற்போது எங்கு இருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறைப்படி கிடைக்க பெற்றதும் இதற்காக தனி விசாரணை அதிகாரி இன்று நியமிக்கப்பட உள்ளார். டி.எஸ்.பி. அல்லது இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் போது அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் சென்று பொருட்கள் திருடிச் சென்ற அறை, பீரோக்கள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பார்த்து தடயங்களை சேகரிக்க உள்ளனர்.
அ.தி.மு.க. அலுலகத்துக்குள் ஒரு மாதம் யாரும் செல்லக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருந்த நிலையில் அந்த தடை கடந்த 20-ந்தேதி விலகி விட்டது. இதன் பின்னரும் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் கடந்த ஒரு வாரமாக யாருமே அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. தலைமை கழகமே முடிவெடுத்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலுவலகத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து பொருட்களை திருடிச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஐ.பி.சி. 380 (திருட்டு), ஐ.பி.சி. 454 (அத்துமீறி நுழைதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளும் போடப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது இந்த சட்டப் பிரிவுகள் பாய்ந்து உள்ளன. இந்த 3 சட்டப் பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளாகும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
- நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம்.
- நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
சென்னை:
சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், 'அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்' என்று கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம், அ.தி. மு.க.வில் கூட்டு தலைமையாக இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.
கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை.
எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.
அம்மாவின் மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு அதற்கு பிறகு கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள், எண்ணப்படி கூட்டுத் தலைமையாக அ.தி.மு.க. செயல்படும் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கழகத்தின் சட்ட விதிப்படி எங்களின் பணிகளை நிறைவாக ஆற்றினோம்.
அவரிடமும், எங்களிடமும் எந்தவித குறைபாடும் இல்லை. இரட்டை தலைமையா என்பதில் பிரச்சினை கிடையாது. கூட்டு தலைமையில் தான் அ.தி.மு.க. செயல்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.
அனைவரும் இணைந்து கழகத்தை முழு வலிமையோடு கொண்டு செல்வது தான் எங்கள் எண்ணம். அம்மா சொன்னது போல் 100 ஆண்டுகளை நோக்கி கழகம் பயணிக்கும். எங்கள் எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு என்பதுதான். நாங்கள் அழைப்பு விடுப்பதற்கு காரணம் எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. ஏற்கனவே நடந்தவைகளை நாங்கள் தூக்கியேறிந்து விட்டோம். அவை தொலைந்து போகட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உளளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு காலக் கட்டத்தில் 2 அணியாக பிரிந்து இருந்தது. இரண்டு அணியும் 2017-ல் இணைந்தது. ஓ.பி.எஸ். வெளியில் இருந்தார். பிறகு நானும், அவரும் இணைந்தோம். மூத்த தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றாக கூடி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் 2 அணியும் ஒன்று சேர்க்கப்பட்டது.
அப்போது பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது. பொது உறுப்பினர்களால் அல்ல.
அப்போது சில சட்ட திட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ஒன்றாக இருந்த காரணத்தினால் 2 பேருக்கும் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால் அதை தனியாக எடுத்து சட்ட விதிகளை உருவாக்கினோம்.
பொதுச்செயலாளருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. கூடவே விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு இணைந்து தேர்தலையும் நடத்த வேண்டும். எங்களது சட்ட திட்ட விதிப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சட்ட திட்ட விதிகளை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கிளை கழக தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டது.
அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வருகிறோம்.
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொது உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து கூடுகின்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று இருக்கிறது.
ஏனென்றால் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது.
அதனால் தேர்தல் நடைபெறுகின்ற போது இந்த தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம்.
இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. இதுதான் நடைபெற்ற சம்பவம்.
இவர்கள் எப்படி ஒற்றை தலைமையை கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். எங்களுடன் பிரிந்து சென்றவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கூட இதை முன்வைத்தார்கள். 2663 பேர் மட்டுமே முடிவு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்கள்.
இந்த 2663 பேரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். யாரும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இது தான் வரலாறு. இதன்படி தான் கட்சி நடக்கிறது.
கூட்டு தலைமையாக இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க இயலாது. அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஏற்கனவே தர்ம யுத்தம் சென்றார். யாரை எதிர்த்து சென்றார். அவருக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது.
உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் அவருக்கு முக்கியம். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. இணைவோம் என்பதை எதன் அடிப்படையில் வைத்து அவர் எப்படி சொல்கிறார்.
கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ரவுடிகளை ஏவி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடி சென்று உள்ளனர். தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் எப்படி இணைய முடியும்.
அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது தீய சக்தி தி.மு.க. அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்திருக்கிறார். அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பாராட்டுகிறார்.
இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகனே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியை புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்? தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.
எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம். நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
பதவி இல்லை என்றால் தர்மயுத்தம் செய்வார். யாரும் வேண்டாம் என்பார். மீண்டும் பதவி வேண்டும் என்றால் எல்லோரையும் சேர்த்துக்கொள்வோம் என்பார். இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. நாங்கள் 15 நாட்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஆனால் அவர் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தின் படிதான் கட்சி நடத்த முடியும். கட்சியின் சட்டத்திட்ட விதிகளை மதிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சி தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை பிரதிபலிக்க வேண்டும். மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும்.
அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மிகவும் பிரதானமாக எதிர்பார்த்தார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உருவானதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஜூன் 23-ந்தேதி அ.தி.முக. பொதுக்குழுவை நடத்த முடியாதபடி ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் கடந்த 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டை அணுகி அந்த கூட்டத்தை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அதிரடியாக சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வம் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதை தகர்ப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை, சபாநாயகர் மற்றும் காவல்துறையை நாடி உள்ளார்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற தடை இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்ததுதான் தனக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கருதினார். இதனால் அந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் , 'ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல், உரிய அழைப்புக் கடிதம் அளிக்காமல் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றுள்ளது. இதை சென்னை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். அந்த கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இதே போன்று பி.வைரமுத்து என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது நீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (இன்று) அதே அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பினரிடமும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீல்களை பார்த்து, '11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது? என்று கேட்டனர்.
அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகள் அனைத்தும் மீறப்பட்டன. அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் கட்சியின் விதிகளை மீறி எடுக்கப்பட்டதாகும். அவை செல்லாது' என்று தெரிவித்தனர்.
இந்த பதிலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்கவில்லை. அவர்கள் இரு தரப்பு வக்கீல்களையும் பார்த்து, ' மீண்டும் நீங்கள் இணைய வாய்ப்பு உள்ளதா?' என்று கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீலும் , 'இணைவதற்கு வாய்ப்பே இல்லை' என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பிலும் இதுவரை பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள், எந்தெந்த கோர்ட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேட்டனர். அந்த தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்களும் தெரிவித்தனர்.
அந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு அவர்கள் தங்களது தீர்ப்பை வெளியிட்டனர். ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை என்பது அப்போது தெரியவந்தது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்தான் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அணுகவேண்டும். சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்கும்.
ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து 3 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மிகவும் பிரதானமாக எதிர்பார்த்தார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் தலையிட மறுத்துள்ளது. இதனால் மீண்டும் .ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.