என் மலர்
நீங்கள் தேடியது "Eknath Shinde"
- மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
- வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.
காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.
குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நிகழ்ச்சி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் வகையில் பாட்டு பாடினார்.
- ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர்.
காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறார்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.
குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மும்பை கர் காவல் நிலையத்தில் சிவசேனா எம்.எல்.எ. முர்ஜி படேல், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்பியதாக புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குணால் கம்ரா முன்ஜாமின் மனுவை விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
- மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.
காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.
இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.
அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.
குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
- தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
- மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.
ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.
போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.
காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.
அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. .
- குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவசேனா சிவசேனா ஆதரவாளர் ஒருவர் குணால் கம்ராவிடம் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசப்பட்டவை:
குணால் கம்ரா: வணக்கம்
சிவசேனா சிவசேனா: குணால் கம்ராவா?
குணால் கம்ரா: ஆமா, சொல்லுங்க.
சிவசேனா சிவசேனா: ஜெகதீஷ் சர்மா பேசுகிறேன். உங்கள் வீடியோவில் சாஹேப் பற்றி என்ன சொன்னீர்கள்?
குணால் கம்ரா: எந்த சாஹிப்?
சிவசேனா சிவசேனா: ஷிண்டே சாஹேப், எங்கள் (துணை) முதல்வர். உங்கள் வீடியோவில் அவரைப் பற்றி என்ன பேசினீர்கள்?
குணால் கம்ரா: அவர் இப்போது எங்கே முதலமைச்சராக இருக்கிறார்? அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.
சிவசேனா சிவசேனா: அவர் துணை முதல்வர். அவரைப் பற்றி என்ன வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்?
குணால் கம்ரா: நீங்க வீடியோவை பார்த்தீர்களா?
சிவசேனா சிவசேனா: பார்த்தேன். நீங்கள் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலை நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். நாங்கள் உங்களை எங்கு கண்டாலும் இதே நிலைதான். புரிகிறதா?
குணால் கம்ரா: தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம்.
சிவசேனா சிவசேனா: நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?
குணால் கம்ரா - தமிழ்நாட்டில் தான்.
சிவசேனா சிவசேனா: தமிழ்நாட்டிற்கு வந்து உங்களை அடிப்பேன்.
குணால் கம்ரா: வாருங்கள், தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.
சிவசேனா சிவசேனா: இப்போ தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? நம்ம ஐயாகிட்ட ஒரு நிமிஷம் பேசுங்க.
காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்த ஆடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதனை நகைசுவை என்று குறிப்பிட்டார்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை:
பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டல் வளாகத்தில் உள்ள ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது அவர், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 2022-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது தொடர்பாக கேலி பாடலை பாடினார். 'தில் தோக் பாகல் ஹே' படத்தில் இடம்பெற்று இருந்த பாடலை டப்பிங் செய்து கேலி பாடலை உருவாக்கி இருந்தார்.
அந்த பாடலில் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கத்தார் (துரோகி) என குறிப்பிட்டு இருந்தார். அவரது கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் கொந்தளித்த சிவசேனா தொண்டர்கள் சுமார் 40 பேர் நேற்று முன்தினம் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோ அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.

இதேபோல துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஹபிடட் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நேற்று இடித்துத் தள்ளினர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இரண்டு ஓட்டல்களுக்கு நடுவே உள்ள இடத்தை ஆக்கிரமித்து இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஹபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், "குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் புயலை கிளப்பியது. காமெடியன் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் சென்று போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபை நிகழ்வுகள் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.
தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).
சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.
அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.
இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- கைது செய்ய கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
- காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்ட காமெடி நடிகர் குணால் கம்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
மேலும், காமெடி நடிகருக்கு சிவசேனா டிரீட்மென்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காமெடி நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட மும்பையின் கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்ட்டர் ஓட்டல் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து சிவேசான எம்.பி. நரேஷ் மஹாஸ்கே கூறும் போது, "இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவாய்," என்று தெரிவித்தார்.
- அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
- நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
- அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.
ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.