search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • விண்ணை முட்டும் அளவிற்கு பூக்கள் விலை உயர்வால் வாங்க வரும் மக்கள் தவிக்கின்றனர்.
    • குத்தகை முறையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரைச் சுற் றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர்.

    சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களுக்கு பூ மாலைகள் வாங்குவதற்கு தேவ கோட்டை நகரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பூக்கடை உரிமையாளர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத் திற்கு மேல் எந்த பூக்க டைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அவர் விலை நிர்ணயம் செய்து கொள்ள லாம். அன்றைய தினம் மல்லி கைப்பூ சாதாரண நாளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அன்றைய தினம் ரூ.100-க்கும், சிறிய வகை மாலை சாதாரண நாளில் ரூ.50-க்கு விற்பனை செய் வதை ரூ.100 முதல் ரூ.150-க்கும் பெரிய மாலைகள் சாதாரண நாளில் ரூ.500-க்கு விற்பனை செய்வதை ரூ.1,000-க்கும் மேலும் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நாட்களில் ஏலம் எடுத்த ஒரு பூ கடை மட்டுமே திறந்து இருப்பதால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரம் குறைந்தும் அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகி றார்கள். பூக்கடை உரிமை யாளர்கள் இந்த நூதன மோசடி யால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் அன்றைய தினம் பூ மற்றும் மாலை களை வாங்கி செல்கி ன்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்க மான நடை முறை போல் பூக்கடைகள் செயல்பட்டால் பொதுமக்கள் நிம்மதி அடை வார்கள் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்ற புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது
    • புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தனியார்பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் ஏ.அசரப் அன்சாரி தலைமை வகித்தார். சென்னை தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த மனோகரன் ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். பி.எஸ்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் பி.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் முதல் ஒப்புதல் ஆணை, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி புதுப்பித்தல் ஆணை, டி.டீ.சி.பி.பெற ஆலோசனை வழங்குவது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட நர்சரி பள்ளிகளுக்கு புதுப்பித்தல்ஆணையினை காலதாமதமின்றி வழங்க வேண்டும், கட்டாய கலவி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், டி.டீ.சி.பி. நர்சரி பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவசியம் தபால் பெட்டி வைக்கப்பட வேண்டும், பள்ளிகளின் அலுவல் சார்ந்த கூட்டங்களை தனியார் பள்ளிகளில் நடத்தாமல் முதன்மை கல்வி அலுவலர் தேர்வு கூடத்திலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கௌரத்தலைவர் ஜெய்சிங், செயலாளர் முத்துக்கருப்பன், ஒருங்கிணைப்பாளர் கே.ரமணன், பொருளாளர் மேசியா சந்தோசம், லண்டன் லுக் பள்ளி டாக்டர் கே.கிருஷ்ணமூர்த்தி, மெட்ரிக் ஓசை ஆசிரியர் கே.டீ.கந்தசாமி, ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பள்ளி எஸ்.முருகன், டைமண்ட் பள்ளி டைமண்ட் பஷீர், தாய்தமிழ் பள்ளி மாதவன், மீனாட்சி பள்ளி எம்.ராஜ், கலைமகள் பள்ளி கே.பாண்டித்துரை, ஸ்ரீமுருகேஸ்வரா பள்ளி எம்.சின்னையா, ஜுசஸ் கிங்டம் பள்ளி ஏ.ஜெ.இக்னேசியஸ், சுவாமி விவேகானந்தா பள்ளி பி.கருணாகரன், ஸ்ரீ அம்பாள் பள்ளி ஆலோசகர் ஏ.சரவணன், மருதம் பள்ளி சுப.தமிழ்மாறன், பெருங்களுர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் லால் கிதாப் வெங்கடேஷ் எழுதிய டைம் டிராவலர் டான் கிளைவுட் 8023 என்ற புத்தகத்தை தலைவர் அசரப் அன்சாரி வெளியிட சிறப்பு அழைப்பாளார் மனோகரன் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

    • அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை ஆணையர் வலியுறுத்தினார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடந்தது.

    மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை களின் சார்பில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்கப் பட்டது. ஒவ்வொரு துறை யிலும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உரிய காலத்தில் அரசின் திட்டங்கள் சென்றால்தான் அதன் பயன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்திட முடியும் என்பதை அறிந்து அந்தந்த துறைகள் செயல்படுவதுடன் திட்டங்கள் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தொழில்துறை ஆணையர் அர்ச்சனா அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    முன்னதாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்டத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தோட்டக்க லைத்துறையின் மூலம் சுந்த ரமுடையான் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், நொச்சி ஊரணியில் உள்ள நாற்றங்கால் பண்ணை யினையும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன் அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் அவர்கள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100 வருடங்களுக்கு மேலான பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
    • தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே புதுக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் கண்காட்சி பள்ளித் தலை மையாசிரியர் மலைப் பாண்டி தலைமையில் நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ வர வேற்றார். தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராமச்சந்திரன் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜகுரு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வர லாற்றைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், அரண்மனை கள், கோட்டைகள், கோ வில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொ ருட்கள் பரவி கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.

    வெறும் இலக்கிய சான்று கள் நம் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பழமையான தொல்லியல் சின்னங்களை பாது காக்காமல் விட்டு விட்டால் அவை அழிந்து, இடிந்து போகும்.

    வரலாறு தெரிந்த மாண வர்களை அதிகமாக உரு வாக்குவதற்கு தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவு கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    7-ம் வகுப்பு மாணவன் வால்மீகநாதன் நன்றி கூறி னார். பின்பு நடந்த கண்காட்சியில் கல்வெட்டு களின் அச்சுப்படிகள், பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்ட னர்.

    • பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் எம்.ஆர்.எப்.தொழிற்சங்க கவுரவ தலைவரும் மாநில துணை அமைப்பாளருமான நெட்டப்பாக்கம் புருஷோ த்தமன் முன்னிலையில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு மேலாளர் மற்றும் தயாரிப்பு மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை யை உடனே தொடங்க வேண்டும். பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
    • மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுச்சேரி:

    காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-

    ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.

    ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

    காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

    காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.

    அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.

    • வத்திராயிருப்பு பகுதியில் நடக்கும் திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி, வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியம் மேலக்கோபாலபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், 15-வது மானிய நிதி குழுவின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமைய லறை கூடம் புர ணமைக்கப்பட்டுள்ள தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.62 லட்சம் மதிப்பில் உயர் நிலைப் பள்ளியில் சுற்றுச் சு வர் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கான்சாபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29.69 லட்சம் மதிப்பில் பெரிய ஓடை கால்வாய் வரத்து கால்வாய் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.93.68 லட்சம் மதிப்பில் கான்சாபுரம்-அத்தி கோயில் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரை யாடினார்.

    பின்னர், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

    ஆய்வின் போது உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சித்தலைவர் திருமணி தவமணி பெரியசாமி, துணைத் தலைவர் பஞ்சு விக்னேஷ், வட்டாட்சியர் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.

    பாடச்சுமை

    கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

    புதுச்சேரி:

    வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்று விதி உள்ளது.

    தமிழகத்தில் அந்த விதி முறைகள் கடைப்பிடிக்கப் படுகிறது. வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இயங்குகின்றன.

    ஆனால் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற அளவில் உள்ளது. புதுவையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. மேலும் கல்வி நிறுவ னங்கள் மட்டும் வழிபாட்டு தலங்கள் அருகிலேயே சில மதுக்கடைகள் செயல்படு கின்றன.

    குறிப்பாக முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் போதையில் தன்னையே மறந்து அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    அதோடு மது போதையில் ஒருவரை ஒருவர் பாட்டில் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொள்வதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அலறி அடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

    மது பிரியர்கள் பொது இடத்தில் நின்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி சண்டை போட்டு

    கொள்வதால் போக்கு வரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.

    புதுவை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவது மதுக்கடைகள் என்றாலும் வரைமுறைக்குட்பட்டு மதுக்கடைகள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
    • ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டு மொத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    வே.பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வழியாக சேலம்- கரூர், தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியனை இடித்து அந்த வழியாக அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாக தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியா உடைக்கப்பட்டு அந்த வழியாக சென்ற பாதை அனைத்தும் நெடுகிலும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் , பொதுமக்களும் செல்ல முடியாது. அதே போல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், அக்ரஹாரம், கட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமச் சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். அதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே(சுரங்க வழி பாதை) அமைத்து தருமாறு மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே அமைப்பது குறித்த பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் புகளூர் தாசில்தார் முருகன் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களின் நலன் கருதி தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அனைவரும், ஒட்டுமொத்தமாக தாசில்தாரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடமும், மாவட்ட கலெக்டர் இடமும் பேசி ஒரு வாரத்திற்குள் தகவல் தெரிவிப்பதாக புகளூர் தாசில்தார் முருகன் தெரிவித்தார்.

    • சிதிலமடைந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார்

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். இங்குள்ள பழமையான கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படு கின்றன. நேற்று கான்கிரீட் சுவரின் பூச்சு இடிந்து விழுந்ததில் வார்டில் தங்கி இருந்த நோயாளிகள் பீதி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான உதய குமார் ஆஸ்பத்திரியில் நேரடி ஆய்வு மேற் கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோ றும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந் துள்ளது. 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையை சீரமைக்க அரசு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை.

    ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி யை காப்பாற்ற முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. எனவே அந்த பகுதி யில் மேம்பாலத்தை உடனடி யாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய ரெயில்வே மந்திரிக்கு, தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள தில்லைவிளாகம் ரெயில் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் ரெயில்வே அமைச்சர் கும்மட்டிதிடல் அமரர்சந்தானம் சொந்த ஊருக்கு அருகில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான ராமர், நடராஜர் கோவில் உள்ள கிராமத்தின் பெயர் கொண்ட ரயில் நிலையம் ஆகும்.

    உலகப் பிரசித்தி பெற்ற ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×