என் மலர்
நீங்கள் தேடியது "emphasis"
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
- கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
திருவாரூர்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.
இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.
இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.
ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ,நடனப் போட்டிகளும் சிறந்த சமூக சேவைக்கான விருது, கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்கள், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
மேலும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மணிமாறன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
- தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.
இதற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர்கோ விந்தராஜன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர்அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள்தா மரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அ ப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வலியுறுத்தப்பட்டது
- நடிகை ரோகிணி பங்கேற்றார்
புதுக்கோட்டை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விட்டனஸ் திரைப்படம் திரையிடலும், அப்படத்தின் கலைஞர்களுக்கு பாரா ட்டு விழாவும் புதுக்கோ ட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் டாலின் சரவணன் வரவேற்றார்.
இதில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி பேசிய போது, சாக்கடைகள், குப்பைகளை அகற்றும் சக மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண்டின் அவலம். மலக்குழிக்குள் கூட மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவலத்தை விட்டனஸ் திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது.
இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது.
துப்புரவுப் பணியாளர்களுக்கான பணிபாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களையப்ப ட வேண்டும். இனி ஒரு மனிதர்கூட மலக்குழியில் இறங்கக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கங்கள் உட னடியாக கழிவுநீர்தொ ட்டிகளுக்குள் சுத்தம் செய்யும் கருவிகளை தருவிக்க வேண்டும். அதுவே சகமனிதன் மீதான அக்கறையையும் பொறுப்பு ணர்வையும் உறுதி செய்யும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்ம துக்கூர்ராமலிங்கம் , எம்.எல்.ஏ.சின்னத்துரை, கவிஞர் கவிவர்மன், மாநில துணைத் தலைவர்கள் முத்துநிலவன், நீலா, கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, இளங்கோ உள்ளிட்டோ ர்பங்கேற்றனர். பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.
இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
- ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
விருதுநகர்
மதுரையில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியதாவது:-
விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதையில் திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரத்தில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் மதிப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவ தாகவும் அது முடிந்த பின் விரைவுபடுத்தப்படும் என்றும் ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக வாரம் 3 முறை மற்றொரு ெரயில் இயக்கப்பட உள்ளதாகவும், ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.
நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூர் மற்றும் திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும், கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும் நடவடிக்கை கோரியதற்கு சிவகாசியில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி ரெயில் செங்கோட்டை-சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு புதிய ெரயில், ஐதராபாத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ெரயில் வசதி, குருவாயூர்-புனலூர் ெரயில் மதுரை வரை நீட்டிப்பு, புதுச்சேரி- கன்னியாகுமரி பயணிகள் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான கூடுதல் ெரயில் வசதி தொடர்பான கோரிக்கை களுக்கு ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.
- திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தினார்.
- இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகரிடம் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சி லர் சரோஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகே புதிய சமுதாயக்கிணறு கடந்த 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கிணற்று நீரை முத்துராமலிங்கம் நகர், நிறைவாழ்வு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சமுதாய கிணற்றில் இருந்து கோடைகால தேவைக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியாத நிலையில் அது காட்சி பொருளாக உள்ளது.
எனது முயற்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மேற்படி பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 1, 4-வது வார்டு பகுதிகளான முத்துராம லிங்கம் நகர், பாலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் இதுவரை கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. மேற்படி பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால் எனது 9-வது வார்டு பகுதியின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
- புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2022 - 2023-ம் நிதியாண்டில் புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை பயன்படுத்தி மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் சுமார் ரூ.166 கோடியை புதுவை அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்களுக்கான துணைத்திட்ட நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் துணைத்திட்ட நிதி ரூ.925 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.
புதுவை அரசின் இத்தகைய தலித் விரோத போக்கு மாநிலத்தில் வாழும் 4 லட்சம் தலித் மக்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகம்.
புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் இத்தகைய தலித் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான காரணத்தை விளக்க வேண்டும். தலித் மக்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் தனது ஏஜென்ட்கள் மூலம் குவிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கான நிதியை செலவிடுவதில் துளியும் ஈடுபாடு காட்டுவதில்லை.
இந்த நிதி ஆண்டில் தலித் மக்களுக்கான துணை திட்ட நிதி சுமார் ரூ.166 கோடியை வீணடித்த துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பொறுப்பற்ற செயல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுப்பன் கால்வாயை தூர்வார வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தினர்.
- சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மானாமதுரை
மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டம் இளையான்குடியில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஹாரூன்ரசீது தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளராக அகமது சிராஜீதீன், துணைச் செயலாளர்களாக பைசூல் ரகுமான், சதாம் ஹூசேன் முஜிபர் ரஹ்மான், பொருளாளராக ஷேக்யமானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், மானாமதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் சுப்பன் கால்வாயை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், காளையார் கோவில் உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்.
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் தலைமை அலுவலகமான முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்ம னை பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கல்வி அலுவல கத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆவணங்கள் எரிந்து சாம்ப லானது. தற்போது அந்த அறை சீரமைக்கப்பட்டு மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலகம் அந்த கட்டி டத்திலேயே இயங்கி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக்கல்வி) பழைய கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கல்வித்து றையின் துணை திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம், மாவட்ட உடற்கல்வி இயக்கு நர் அலுவலம், தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவை ராமநாதபுரத்தில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும் ஜெ.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் போன்ற அலுவல கங்களும் ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.
எனவே ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் பெரும்பாலான செயல்பாடு களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தையே சார்ந்து உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங் களை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
- சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-
முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.
இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.
அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.
ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.
ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.