என் மலர்
நீங்கள் தேடியது "Environmental impact"
- கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
- 21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் 73 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அரசின் மக்கள் நலன் திட்டங்கள் மக்களை சென்றடைவது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. இந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வருங்கால சந்ததியினர் வாழ தகுயில்லாத சூழ்நிலைஉருவாகும். மேலும் மாணவர்கள் அனைவரும் பாடபுத்தகத்துடன் பொது அறிவு புத்தகங்களையும் சேர்த்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல வேலைக்கு செல்ல முடியும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு குடும்ப உறுப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த படிப்பும், பொது அறிவையும் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழலாம் உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- மத்திய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என புகார் எழுந்துள்ளது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லலூர் ஒன்றி யத்தை சேர்ந்த தெத்தூர், டி.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட கரடிக்கல் அருகில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை யடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி மதுரை மத்தியசிறைச்சாலையை புதியதாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் 67ஏக்கர் இடம் தேர்வு செய்துள்ளது.
அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் வந்தபோது விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தி மத்திய சிறைச்சாலை அமைக்க தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை யொட்டி கிராமசபைக்கூட்டங்கள் நடந்தது. தெத்தூரில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசனும், டி.மேட்டுப் பட்டியில் நடந்த கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாம் பழனிச் சாமியும் தலைமை தாங்கி னர்.
இந்த கூட்டங்களில் சிறுமலையடிவாரத்தில் கரடிக்கல் பகுதியில் உள்ள தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்களில் கலைஞர் ஆட்சி காலத்தில் ஒருசிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பட்டா கோரி பல போராட்டங்கள் செய்து வருகின்றனர்.
இந்த மானாவாரிநிலங்களில் 40ஆண்டுகளுக்கு மேலாக மா, கொய்யா, புளி, முருங்கை உள்ளிட்ட பலன் தரும் மரங்களும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்ட பயிர்களும் பருவ மழைக்கு ஏற்றபடி விவ சாயம் செய்து பலனடைந்து வந்தனர். அதனால் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்
பல்லுயிர்களின் வசிப்பிட மான சிறுமலை யிலிருந்து காட்டுமாடு, வரையாடு, காட்டுபன்றி, முள்ளம்பன்றி, செம்பூத்து, தேவாங்கு, குரங்குகள், மலை பாம்பு உள்ளிட்டவை களை பாதுகாக்கவும், சுற்று சூழலலை நிலைப்படுத்தவும் சிறைத்துறை மூலம் சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்காக தேர்வுசெய்துள்ள இடத்தில் சிறைஅமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ‘கொட்டைப்பாக்கு’ தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
- எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்பராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்டவாடி, குறிச்சி, பொன்னாரம்பட்டி பகுதியில் பாக்குக்காய்களின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டுவதை தடுத்து இவற்றை பதப்படுத்தி ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும் தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாக்குத் தோலை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்டமாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சேலம் கலெக்டர் கார்மேகம் கடந்தாண்டு உத்தரவிட்டார். ஆனால் இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியம் கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி எல்லையில் உள்ள வசிஷ்ட நதியால் நீர்வரத்து வரும் கொட்டவாடி ஏரியிலும் பாக்குத் தோல் குவியல்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
எனவே கொட்டவாடி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பாக்குத்தோல் குவியல்களை அகற்றவும், இனிவரும் காலங்களில் பாக்குத்தோல் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வாழப்பாடி கோபிநாத் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு.
- ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
இந்த குழு, 2009 முதல் 2022 வரை சீன தலைநகரில் வசித்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும்கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், `இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை' என்று கூறியுள்ளார்.
காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு.
- மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.
நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.
நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரல் பகுதிகளில் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகள் அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.
இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால் நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது. இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது.
இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது. இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்படலாம்.
ஆனால் 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள காலங்களில் நிறைய பேருக்கு குறைப் பிரசவம் ஏற்படுகிறது இதனால் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஏனென்றால் நுரையீரல் வளர்ச்சி என்பது 36 வாரங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி என்பது மாறுபடும். இதனால் அந்த குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
இந்த நுரையீரல் பாதிப்பு சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிறகு அதிகம் ஏற்பட்டு வருகிறது என்று ஆய்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன.

நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:
நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.
ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது.
புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.
புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
- வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.
- இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.
சேலம்:
சேலம் அருகே உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு பகுதியில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெள்ளக்கல்பட்டி, பாம்பன் கரடு, செங்கரடு, செட்டிச்சாவடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வெள்ளை கற்கள் வெட்டி எடுத்து கடத்திச்சென்று விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க ரூ.500 முதல் ரூ.800 வரை சிலர் கூலி கொடுத்து ஆட்களை அழைத்து வந்து இரவில் வெட்டுகிறார்கள்.
பின்னர் டிராக்டர்கள் மற்றும் சிறிய லாரிகளை கொண்டு வந்து வெள்ளை கற்களை கடத்தி சென்று விடுகிறார்கள். 1 டன் வெள்ளை கற்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவை சானிடரிவேர்ஸ், டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
சேலம் மாமங்கம் அருகே உள்ள மலைகளை குடைந்து வெள்ளை கற்கள் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று நள்ளிரவில் மீண்டும் வெள்ளை கற்கள் வெட்டி கடத்துவதற்காக கடத்தல் கும்பல் அங்கு சென்றுள்ளது அப்போது வெள்ளை கற்கள் கடத்துவதில் 2 கும்பல்களிடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது வெள்ளைக்கற்கள் கடத்தல் கும்பலை பொதுமக்கள் தட்டிச்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கற்களால் சரமாரியாக தாக்கியதோடு அவர்களது இருசக்கர வாகனத்தையும் கடத்தல் லாரியை கொண்டு சேதப்படுத்தினர். பின்பு பொதுமக்களின் வாகனங்களுக்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தீவைத்து அட்டகாசம் செய்தனர்.
கடத்தல் கும்பல் தாக்கியதில் பிரசாத், ஸ்ரீனிவாசன் கார்த்திக், பூபதி உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊட்டி காந்தல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காந்தல் பென்னட் மார்க்கெட், முக்கோணம் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அந்த குப்பை தொட்டியில் கொட்டி வந்தனர். அதனை துப்புரவு பணியாளர்கள் நகராட்சி வாகனங்களில் சென்று அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக தரம் பிரித்து பொதுமக்கள் வீடுகளுக்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே காந்தல் பகுதியில் சாலையோரம் மற்றும் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. காந்தல் முக்கோணத்தில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியை புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்துக்கு செல்ல அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வாகனங்களில் வரும் போது, முகத்தை துணியால் மூடியும், மூக்கை பொத்தியபடியும் செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. ஊட்டி காந்தலில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் காய்கறிக் கழிவுகள் கொட்டுவது தொடர்கிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகளை தின்கிறது. ஒரு வேளை அவை பிளாஸ்டிக் பொருட்களை உண்டால், அதற்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் பசுமையை ரசிக்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளை பார்த்து, அவர்கள் ஊட்டியின் அவல நிலையை கண்டு வருத்தம் அடைகின்றனர். எனவே, சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி தீ வைத்து எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.