என் மலர்
நீங்கள் தேடியது "exam"
- தேர்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
- தேர்வு தொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை :
கொரோனா தொற்றுக்கு பிறகு, நடப்பு கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? அதற்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும் நடக்கும். மேலும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- அரியலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன
- சிறந்த பள்ளிக்கான அன்பழகன் விருதுக்கு
அரியலூர்:
தமிழகத்தில் சிறந்த பள்ளிக்கான விருதுகள் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 3 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் சிறந்த பள்ளிக்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சிறந்தப் பள்ளிகளுக்கான விருது பட்டியலை தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் லிங்கத்தடிமேடு அரசு உதவிப் பெறும் கே.ஆர்.வி.நடுநிலைப் பள்ளி, இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.மேற்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.
- நுழைவுச்சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
அரியலூர்
அரியலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அரியலூர் வட்டத்திற்கு கீழப்பழுவூர் அருகே கருப்பூர் விநாயகா கல்வியியல் நிறுவனத்திலும், செந்துறை வட்டத்திற்கு செந்துறை செயின்ட் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேலும் அதன் வளாகத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி பி.எட் கல்லூரியிலும், ஆண்டிமடம் வட்டத்திற்கு விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் ஆகிய 6 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் தேர்வு மைய நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது https://agaram.tn.gov.in/onlineforms/formpageopen.php?id=43-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், செல்போன் எண்ணையும் பதிவு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாவட்ட வேலை வாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-மணிக்கு பின்பும் மற்றும் காலை 10.50-மணிக்கு முன்பும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது. இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- வனத்தொழில் பழகுனர் பணிக்கு எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
- தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
திருச்சி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று தமிழகத்தில் 7 பெரு நகரங்களில் தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான போட்டி தேர்வு நடந்தது. திருச்சியில் 8 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் ஒரு சில மையங்களில் 5 நிமிடம், 10 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருச்சி வாசவி வித்யாலயா பள்ளி மையத்துக்கு தேர்வு எழுத வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் விருதுநகரை சேர்ந்த இளைஞர்கள் 3 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் இளைஞர் கூறும் போது, 2018 ல் நடைபெற்ற வனத்தொழில் பழகுநர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றேன். பின்னர் நடைபெற்ற உடற்பகுதி தேர்வில் என்னால் பங்கேற்க இயலாமல் மீண்டும் இப்போது எழுத்து தேர்வு எழுத வந்தேன். முதலில் தமிழகத்தில் பரவலாக மையங்களை அறிவித்தனர். அதன்படி சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால் கடைசி நேரத்தில் தமிழகத்தில் 7 பெருநகரங்களில் மட்டுமே மையங்கள் அறிவிக்கப்பட்டது. திருச்சி மையத்துக்கு என்னை மாற்றி விட்டார்கள்.
சிதம்பரத்தில் இருந்து ரயிலில் வந்தேன். ரயில் தாமதமாக திருச்சி அங்கிருந்து ஆட்டோ பிடித்து தேர்வு மையத்துக்கு வந்தேன்.9.5 மணிக்கு மையத்துக்கு வந்து விட்டேன். ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இன்று பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் பொறியியல் தேர்வு, வெள்ளிக்கிழமை சுற்றுச்சூழல் தேர்வு நடக்கிறது. எனக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இங்கு விடுதியிலா?தங்க முடியும். வேலை தேடும் இளைஞர்களை இப்படி அலைக்கழிப்பது வேதனையாக இருக்கிறது என கூறினார்.
- பாரதிதாசன் பல்கலைக்கழக செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- ‘மாண்டஸ்’ புயல் எச்சரிக்கை எதிரொலி
திருச்சி:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுவடைந்து இன்று புதுச்சேரி அருகே வடக்கு வங்கக்கடல் பகுதிக்கும், ஆந்திரா மாநிலத்தை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்கும் அருகே நகரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி பலத்த மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இந்திய வானிலை மையத்தின் புயல் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற (தன்னாட்சி அல்லாத) கல்லூரிகளில் நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ தேர்வுகளுக்குரிய எழுத்து தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்க பணிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 106 உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
- கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.
- மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டம் கூட்டுறவுத் துறை ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சேலம் மாவட்டதில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.
மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- 14 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 75 விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் மாணவர் தங்கும் விடுதியில் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முகத் தேர்வுக்கு வரும் மாற்றுத்தினாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறதுறை கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள், 2 கட்டுநர்கள் என மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 14-ம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கு நேர்மு கத்தேர்வு, பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக்கல்வி) வளாகத்தில் எதிர்வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மேற்கூறிய பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பாக வரிசை எண்.14-ன் இதர வழிகாட்டு நெறிமுறைகள் வரிசை எண்.26-ல் கீழ்கண்ட திருத்தங்கள் வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைக் கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் , தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி, தகவலை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களது அறிவுறுத்தலின் அடிப்ப டையில் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துக்கொள்கிறார்.
- புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5,100 கற்போர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- 2022-27' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5,100 கற்போர்கள் கண்றியப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகம், பணிபுரியும் இடங்களில் கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத, படிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் முதல் கட்டமாக 250 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஏற்கனவே தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத 1,202 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்க முதற்கட்டமாக 64 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நோக்கத்தை விளக்கி கூறினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
- அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மதுரை
உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.
லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.
இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளார்.
- எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.
பொன்னேரி:
விடாமுயற்சியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் எந்த பணியை செய்தாலும் அதன் இலக்கை அடையலாம். அதன் முழுபலனும் கிடைக்கும். இதற்கு பொன்னேரியை அடுத்த சின்னகாவனத்தை சேர்ந்த வாலிபர் ரத்தின பிரபாகர் என்பவர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ரத்தின பிரபாகர் கடந்த 2016-ம் ஆண்டு பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். பின்னர் எம்.பி.ஏ. படித்தார். அரசு பணி மற்றும் வங்கி பணிக்கான போட்டிதேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
ஆனால் அவருக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தார். எனினும் மனம் தளராமல் ரத்தின பிரபாகர் தனது லட்சிய பாதையை நோக்கி பயணம்செய்தனர். அவரது விடாமுற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. 105-வது முறையாக தேர்வு எழுதியபோது அவர் வங்கித்தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தற்போது ரத்தின பிரபாகர் காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஊழியராக பணி செய்து வருகிறார்.
ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் பலமுறை தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தனது லட்சியத்தை அடைந்த ரத்தின பிரபாகருக்கு அப்பகுதி கிராம சீரமைப்பு சங்கத்தின் சார்பில் நடந்த முப்பெரும் விழாவின் போது பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, ரத்தின பிரபாகர் கூறும்போது, நான் கடந்த ஆறு வருடமாக இதுவரை 104 தேர்வுகள் எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.
விடாமுயற்சியுடன் 105-வது தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன். விடாமுற்சிக்கு பலன் கிடைத்தது. பலமுறை தேர்வில் தோல்வி அடைந்தாலும் பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் ஊக்கம் அளித்தனர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம். கண்டிப்பாக அனைவரும் சாதிக்கலாம் என்றார்.
விழாவின் போது விளையாட்டு போட்டி, சிலம்ப போட்டி, உட்பட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. விடாமுற்சியுடன் சாதித்த ரத்தின பிரபாகரை நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், உறுப்பினர்கள் பரிதா ஜெகன், செந்தில்குமார், பத்மா சீனிவாசன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பாராட்டினர். ரத்தின பிரபாகர், போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மற்றும் தொடர்ந்து முயற்சித்து வருபவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.
- புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவி உள்பட 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
தமிழக ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் 5 பேர், புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு இன்று காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் நடந்தது. இந்த தேர்வையொட்டி நெல்லையில் தேர்வு மையங்கள் நேற்றே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. மாவட்ட அளவில் 2 கல்லூரிகளில் 4 மையங்களும் மாநகரப் பகுதியில் 5 பள்ளிகளில் 6 மையங்களிலும் தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வுக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 2,773 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடந்த தேர்வை 1,482 பேர் மட்டுமே எழுதினர். இது 53.44 சதவீதம் ஆகும். 1,296 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர்.
இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தி ற்குள் தேர்வு மையங்களுக்கு வராத வர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பெண் டவுன் சாப்டர் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததாக அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.இதனால் அந்த பெண் தேர்வு மையம் முன்பு நின்று அழுது கொண்டிருந்தார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.